search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் சி.பா. ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள சி.பா.ஆதித்தனார் உருவச்சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    திருச்செந்தூரில் சி.பா. ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

    • தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்செந்தூர்:

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராம ஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, நகர தலைவர் வாள்சுடலை, கவுன்சிலர் ஓடைசுகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி மற்றும் பேராசிரியர்கள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நாடார் வியாபரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதேபோல் காயாமொழியில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×