search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை"

    • திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.
    • சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் கும்பகோணம் அருகே கடந்த சில மாதங்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று மாலை திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது.

    யானை சிலை கண்டெடுப்பு அப்போது அந்த பள்ளத்தில் யானை சிலை கிடைத்தது.

    கருங்கல்லினால் ஆன இந்த யானை சிலையை பார்த்ததும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சிலையை பார்த்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த யானை சிலையை பொக்லின் எந்திரம் மூலம் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அந்த யானை சிலையை தாசில்தார் சுசீலாவிடம் ஒப்படைத்தனர்.

    அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது.
    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

    சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது.

    மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்குப் பின்னால் உள்ள பிரமாண்டமான விதானத்தின் கீழ் நிறுவப்படும் சுவாஷ் சந்திர போஸின் 30 அடி சிலையை செதுக்கவுள்ளார்.

    கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்டின் இயக்குநர் ஜெனரல் அத்வைதா கடநாயக் தலைமையிலான குழுவால் சிலையின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    நாளை டெல்லி வரும் யோகிராஜ், சிலையின் முக அம்சங்களை செதுக்க தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கலாச்சார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. குரங்கு அம்மை எதிரொலி- தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு
    ×