search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol"

    • கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இரு பாறை கற்கள் கொண்டுவரப்பட்டன
    • 3 சிலைகளை உருவாக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அயோத்தி:

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான மூலவர் குழந்தை ராமர் சிலை அடுத்தவாரம் தேர்வு செய்யப்படும் என அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர். இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் இதுகுறித்து கூறுகையில், 'மூலவர் குழந்தை ராமர் சிலை செய்வதற்காக கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இரு பாறை கற்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் இருந்து 3 சிலைகளை உருவாக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. அந்த 3 சிலைகளில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய சிறந்த சிலையை கோவில் அறக்கட்டளை வருகிற 15-ந் தேதி தேர்ந்தெடுக்க உள்ளது' என்றார்.

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி கடலூர் ரோடு சாமியார் தர்கா ெரயில்வே சப்வே அருகே அமைந்துள்ளது அய்யனார்கோவில்.இது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக் கோவில் குலதெய்வ கோவிலாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சன்னதியில் கருங்கல்லால் ஆன விநாயகர் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர்.

    கடந்த 18-ந் தேதி காலைபூஜை செய்யபூசாரிசென்றபோது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.விநாயகர் சன்னதி யில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கோவில் தர்மகர்த்தா ஜோதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு ,பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் சிலையை தேடி வருகின்றனர்.

    • ஐ.ஜே.கே. சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.

    மதுரை

    முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஐ.ஜே.கே. கட்சி சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.

    மாநில அமைப்பு செய லாளரும், மதுரை மாநகர் மாவட்ட தலைவ ருமான அன்னை இருதய ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில போராட்டக்குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், மாநில விளம்பரப்பிரிவு செய லாளர் முத்தமிழ் செல்வன், மாநில துணை தலைவர்கள் நெல்லை ஜீவா, இளவரசி, ஆனந்த முருகன்,

    மாநில இளைஞரணி துணை தலைவர் சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் துரை பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் காசின், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, திண்டுக் கல் கிழக்கு மாவட்ட தலை வர் ரஞ்சித்குமார், மாநில தகவல் தொழில்நுட்ப ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டி, பொரு ளாளர் முத்துராஜா, மாநில மகளிரணி துணை செயலா ளர் சகிலாபுரோஸ், மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான்பெனடிக், மாவட் அமைப்பு செயலாளர் அமிர்தகிருஷ்ணன், தென் மண்டல அமைப்பு செய லாளர் வினோத்குமார்,

    மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் பிரபுராஜன், மாநில இளைஞரணி இணை செயலாளர் மோகன்குமார், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன், வடக்கு மாவட்ட பொருளாளர் சூசை அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.

    கருங்கல் சிலை

    இதையடுத்து அங்கு பார்த்தபோது கருங்கல் சிலை மண்ணுக்குள் தென்பட்டது. உடனடியாக இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை மீட்டு பார்த்தபோது அது 10 கைகளுடன் 2 அடி உயரம் கொண்ட பத்ரகாளியம்மன் கற்சிலை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த சிலையை நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    மக்கள் வழிபாடு

    சிலை கண்டெடுக் கப்பட்டது குறித்து தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் சாமி சிலைக்கு புடவை மற்றும் மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர்.

    ஒப்படைப்பு

    இதனிடையே மீட்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை சேலம் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதன்படி இன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.

    இப்பகுதியில் பழமையான கோவில்கள் ஏராளமாக உள்ளதால் தொல்லியல் துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழமையான பெருமாள் சாமி கருங்கல் சிலை இருப்பது தெரியவந்தது.
    • அப்பகுதி மக்கள் பூக்கள் தூவி வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட செறுடம்பனூர் கிராமத்தில் சிங்கமட வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது.

    பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்த போது சத்தம் கேட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த இடத்தை தேண்டிப் பார்த்தனர். அப்போது அங்கு சுமார் , 5 அடி உயரத்தில் பழமையான பெருமாள் சாமி கருங்கல் சிலை என்பது தெரியவந்தது.

    உடனே அப்பகுதி மக்கள் பூக்கள் வைத்து வழிபட்டனர்.

    தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சரணவணன் மற்றும் பொறையார் போலீசார் அங்கே சென்று சாமி சிலையை பாதுகாப்பாக தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த பகுதியில் பழங்காலத்தில் கோவில் ஏதாவது இருந்ததா அல்லது மழை வெள்ளத்தில் சிலை அடித்து வரப்பட்டதா என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுவாமி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு பாலம் அருகே சக்தி பாபா கோவில் உள்ளது. இங்கு ஆதிவராஹி அம்மன், நரசிம்மர் நூதன விக்கிரக பிரதிஷ்டை விழா நடந்தது.

    முன்னதாக கணபதி நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, 2-ம் கால பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஆதிவராகி அம்மன், நரசிம்மருக்கு சிறப்பு கும்ப நீர் அபிஷேகம் மற்றும் பால், தயிர். சந்தனம் இளநீர் பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    • மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
    • 25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அமைப்பு செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

    மாநிலத் தலைவர் மூர்த்தி, வழக்கறிஞர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுப்ரமணியன், அன்பான ந்தம், வேலூர் முருகேசன், சங்கர், திருவண்ணாமலை சுப்பிரமணியம், தஞ்சை முனிசிபல் காலனி நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாநிலத் தலைவர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சையில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைக்க அனுமதி கொடுத்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கே .என். நேரு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பணிக்காக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த மேயர் சண். ராமநாதனுக்கும் நன்றி. மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிவு அடைந்ததும் சிலையை விரைவில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார்.

    • மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.
    • உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் திருஉருவச் சிலைக்கு வெளி நாட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வைரக்கல் பதித்த தங்க கை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி யாக உள்ள ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். இவரது ஜெயந்தி உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த 3 நாட்களும் வேதபாராயணம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியன சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி விஜயேந்திரரின் பிறந்த நாளும் அதே நாளில் சிவராத்திரி விழாவும் சங்கர மடத்தில் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய நாளில் சங்கர மடத்தின் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் ஒன்றிணைந்து மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதியில் இருந்து வைரக்கை பக்தர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சங்கர மடத்துக்கு வந்து சேரும்.

    இதன் பின்னர் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் மகாபெரியவர் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

    விஜயேந்திரர் ஜெயந்தி நாளன்று அவர் முகாமிட்டுள்ள விசாகப்பட்டினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் தாக்கியதாக கூறி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டபட்டி கிராமத்தில் உள்ள காலனியில் புதிதாக அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெறாமல் வைக்கபட்ட சிலையை அகற்ற காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலித் அமைப்புகள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிலையின் முன்பாக அமர்ந்து, சிலையை எடுத்தல் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    அப்போது அங்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு வந்து பேசினார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றி எடுத்து செல்லப்பட்டது.

    இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிலை விவகாரம் பிரச்சனை ஓய்ந்ததால், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஓமலூரில் கொண்டு வந்து விடப்பட்டனர்.

    இந்தநிலையில், இளம்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர் சமுராய்குருவை மட்டும் தனியாக வாகனத்தில் அழைத்து சென்றதாகவும், இதுபற்றி அவர் கேட்டபோது, மேச்சேரி இன்ஸ்பெக்டர் அவரை தாக்கியதாகவும் கூறி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
    • பின்னர் மலர் தூவி மரியாதையும் செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செய்தனர்.

    இதில் ஒன்றிய செயலாளர் பரமசிவன், ஒன்றிய செயலாளர் எழில் பாலகிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர்சாமி, சிவ.மகேந்திரன், நகரதுணை செயலாளர்பூண்டி பிரசாந்த், பிரபாகரன், தாமோதரன், நாசர், கொடி ஜெயராமன்சாமிநாதன் கார்த்திகேயன்உள்ளிட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    ஈரோடு பவானி ஆற்றில் பிள்ளையாரை கரைக்க சென்றபோது இளைஞர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #GaneshChaturthi
    ஈரோடு:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாக, பூஜை செய்யப்பட்ட கணபதி சிலைகளை ஆற்றிலும், கடலிலும் கரைப்பது வழக்கம்.

    அதன்படி, திருப்பூர் மாவட்டம் மும்மூர்த்தி நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்து வந்துள்ளனர். அப்போது சிலையை ஆற்றில் கரைக்கும்போது எதிர்ப்பாராத விதமாக 3 இளைஞர்கள் ஆற்றில் விழுந்தனர்.

    உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடவே, ஒருவர் மீட்கப்பட்டார். மீட்கப்படாத இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வ வழிபாட்டு விழாக்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. #GaneshChaturthi
    ஸ்ரீரங்கம் கோவில் சிலை காணாமல் போனதாக கூறப்பட்ட வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #idolmissing
    சென்னை:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோவிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல, பாரம்பரிய கட்டிடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2017-ம் ‘யுனஸ்கோ’ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுள்களுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்த டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 

    அந்த மனுவில், ‘ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் உட்பட பல கோயில் திருப்பணி குழுக்களில் இருந்துள்ளேன். ஸ்ரீரங்கம் கோயில் சிலை விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். 
    ×