search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 அடி உயர பத்ரகாளியம்மன் கருங்கல் சிலை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு
    X

    நங்கவள்ளியில் கண்டெடுக்கப்பட்ட பத்ரகாளியம்மன் கற்சிலை.

    2 அடி உயர பத்ரகாளியம்மன் கருங்கல் சிலை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.

    கருங்கல் சிலை

    இதையடுத்து அங்கு பார்த்தபோது கருங்கல் சிலை மண்ணுக்குள் தென்பட்டது. உடனடியாக இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை மீட்டு பார்த்தபோது அது 10 கைகளுடன் 2 அடி உயரம் கொண்ட பத்ரகாளியம்மன் கற்சிலை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த சிலையை நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    மக்கள் வழிபாடு

    சிலை கண்டெடுக் கப்பட்டது குறித்து தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் சாமி சிலைக்கு புடவை மற்றும் மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர்.

    ஒப்படைப்பு

    இதனிடையே மீட்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை சேலம் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதன்படி இன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.

    இப்பகுதியில் பழமையான கோவில்கள் ஏராளமாக உள்ளதால் தொல்லியல் துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×