என் மலர்

    நீங்கள் தேடியது "bhavani river"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குப்பண்டாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி விஜயகுமாரி (48). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலுச்சாமி இறந்து விட்டார்.அதன் பின்பு விஜயகுமாரி கருவல் வாடிபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். விஜயகுமாரி அத்தாணி அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார்.

    அவரது மகள் கோவையில் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். தினமும் தந்தையிடம் பேசி வந்த விஜயகுமாரி கடந்த 2 நாட்களாக தந்தையிடம் போனில் பேசவில்லை.

    இதனையடுத்து விஜயகுமாரின் தந்தை மகளை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    பின்னர் வீட்டிற்கு பின்புறம் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின்உடல் மிதந்து வருவதாக தகவல் அறிந்து விஜயகுமாரின் தந்தை அங்கு சென்ற பார்த்தபோது இறந்து கிடந்தது தனது மகள் என்று உறுதி செய்தார்.

    இதனையடுத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயகுமாரி குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சுழல் நிறைந்த பகுதியாகும்.

    மேட்டுப்பாளையம்,

    சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட வச்சினம்பாளையம் நீருந்து நிலையத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வச்சினம்பாளையம் நீருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளிக்கச் சென்ற 5 பேரில் 3 பெண்கள் ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வெள்ளப் பெருக்கிலும், சுழலிலும் சிக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வச்சினம்பா ளையம் நீருந்து நிலையம் அருகே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் இப்பகுதி அபாயகரமான பகுதியாகும். இந்த இடம் மிகவும் ஆபத்தான அடிக்கடி வெள்ளப்பெருக்கு மற்றும் சுழல் நிறைந்த பகுதியாகும். மேலும் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே, இந்த இடத்தில் பொதுமக் கள் குளிக்கவோ, அத்துமீறி ஆற்றில் இறங்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த எச்சரிக்கை பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறுகையில்: சிறுமுகை வச்சினம்பாளை யம் பகுதியில் உள்ள நீருந்து நிலையம் அருகே அடிக்கடி ஆற்றில் குளிக்க வருவோர் சுழலில் சிக்கியும், வெள்ளப்பெருக்கில் சிக்கியும் பரிதாபமாக தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுக்கவே அப்பகுதியில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீயணைப்புத்துறையினர் பவானி ஆறு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஒரே நாளில் 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). இவர் சிறுமுகை பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார்.

    இவரது தங்கை பாக்கியா (45). இவர் சிறுமுகையில் அரசு மருத்துவமனை எதிரே புதிதாக வீடு வாங்கி உள்ளார். இந்த வீட்டில் இன்று கிரகபிரவேசம் நடப்பதாக இருந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக பாக்கியாவின் மருமகள் ஜமுனா (25), அவரது நண்பர்களான நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கஸ்தூரி (30), சகுந்தலா (52) ஆகியோர் சிறுமுகைக்கு வந்தனர்.

    இந்த நிலையில் பாக்கியா, அவரது மருமகள் ஜமுனா, கஸ்தூரி, சகுந்தலா ஆகியோர் மாலையில் சிறுமுகை வச்சினாம்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அவர்களுடன் பாலகிருஷ்ணனும் வந்தார்.

    4 பேரும், ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டதையொட்டி பவானி ஆற்றில் வெள்ளம் வந்தது. இதனால் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

    இதை பார்த்த பாலகிருஷ்ணன் உடனடியாக சென்று ஆற்றில் இறங்கி அவர்களை மீட்க போராடினார். ஆனால் அவரும் தண்ணீரில் தத்தளிக்க தொடங்கினார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறை, வருவாய் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் அவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் இறங்கி தேடினர். சிறிது நேரத்தில் பாக்கியா(53), ஜமுனா (30) ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த பாலகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உயிரிழந்த சகுந்தலாவின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். ஆனால் இரவாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை 2-வது நாளாக உடலை தேடும் பணி தொடங்கியது.

    தீயணைப்புத்துறையினர் பவானி ஆறு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அவரது உடல் மீட்கப்படவில்லை. அவரது உயிருடன் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் பவானி ஆற்றில் குளித்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜீவானந்தம் (16), உப்பிலிபாளையத்தை சேர்ந்த கவுதம் (16) ஆகியோரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இவர்கள் 2 பேரையும் தேடும் பணியும் இன்று 2-வது நாளாக நடக்கிறது. மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் ஆகியோர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ நடந்த இடம் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் தேடும் பணியானது நடக்கிறது.

    மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரே நாளில் 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
    • இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது.

    பவானி:

    பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வகையில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்த பாலத்தின் வழியாக தினசரி மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், லாரி உட்பட கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நடைபெற்ற வண்ணம் இருக்கும்.

    இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இதனால் பகல் நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுதாரித்து கொள்ளும் நிலையில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை அருகில் பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் ஆணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து வாய்க்காலில் வினாடிக்கு 1,600 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 கனஅடியும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 6,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆற்றில் பொதுமக்கள் இறங்வோ துணி துவைக்கவோ கூடாது என ஒலிப்பெருக்கி மூலமும் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
    • 2-வது நாளாக இன்றும் பில்லூர் அணை திறக்கப்பட்டு 19,000கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    காரமடை

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து கன மழையாக கொட்டி வருகிறது.இதனால் அங்குள்ள பல்வேறு அணைகளும் நிம்பி தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றைய தினம் அணையின் முழு கொள்ளவான 100அடியில் 97அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளும் திறக்கபட்டன.

    நேற்று இரவு முதல் அணையில் இருந்து 12,000கன அடியில் இருந்து 26,000கன அடிவரை பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

    இந்த நிலையில் தற்போது 2-வது நாளாக இன்றும் பில்லூர் அணை திறக்கப்பட்டு 19,000கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் 2-வது நாளாக இன்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாழ்வாக வசிக்கும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம் ஆற்று பாலம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு ஆற்றில் பொதுமக்கள் இறங்வோ துணி துவைக்கவோ கூடாது என ஒலிப்பெருக்கி மூலமும் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பில்லூர் அணை. இந்த அணை 100 அடி கொள்ளளவு கொண்டதாகும். நீலகிரி மற்றும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது. அதன்பின்னர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கும் நீர்வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு வச்சினம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாசில்தார் மாலதி,மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்த தொட்டிபாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். அரசு பஸ் டிரைவர். இவரது மகன் தினேஷ்குமார்(19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்(18) வருண்(19) ஸ்ரீஹரி(16) சூரியா(19)ஆகியோருடன் நெல்லித்துறை அடுத்துள்ள விளாமரத்தூர் குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றார். அவர்கள் 5 பேருக்கும் நீச்சல் தெரியாது. தினேஷ்குமார் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன், ஏட்டு தங்கவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் அரை மணிநேரம் போராடி தினேஷ்குமார் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print