என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்ரகம்"

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுவாமி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு பாலம் அருகே சக்தி பாபா கோவில் உள்ளது. இங்கு ஆதிவராஹி அம்மன், நரசிம்மர் நூதன விக்கிரக பிரதிஷ்டை விழா நடந்தது.

    முன்னதாக கணபதி நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, 2-ம் கால பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஆதிவராகி அம்மன், நரசிம்மருக்கு சிறப்பு கும்ப நீர் அபிஷேகம் மற்றும் பால், தயிர். சந்தனம் இளநீர் பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    • திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்க சென்றது
    • முன்னுதித்த நங்கை அம்மன் 4 ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட் டது.

    நாகர்கோவில் :

    திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நவராத்திரி விழாவில் பங்கேற்ப தற்காக பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி தேவியும், வேளிமலை யில் இருந்து முருகனும், சுசீந்தி ரத்தில் இருந்து முன்னுதித்தநங்கை அம்மனும் ஆண்டுதோறும் பவனி யாக கொண்டு செல்லப்படும்.

    இந்த ஆண்டும் சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடந்த பூஜைக்கு பிறகு விக்ரகங்கள் திருவனந்த புரத்திலிருந்து மீண்டும் தமி ழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழகம் கொண்டுவரப்பட்ட விக்ரகங்களுக்கு குமரி மாவட்ட எல்லையில் இரு மாநில போலீசார் மரியாதை அளித்த னர். பின்னர் அங்கிருந்து சாமி விக்ரகங்கள் அங்கிருந்து புறப்பட்டது. தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலைகள் பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆலயத்திற்கும், குமாரகோவில் முருகன் விக்ரகங்கள் குமாரகோவிலுக்கும் கொண்டு செல்லப்பட்டது. முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகங்கள் இன்று காலை அங்கிருந்து கொண்டு வரப்பட்டது. பார்வதிபுரம் நாகர்கோவில் இடலாக்குடி வழியாக சுசீந்திரம் வந்தடைந்தது.

    சுசீந்திரம் கோவில் நுழைவு வாயிலில் இரு மாநில போலீசார் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் முன்னுதித்த நங்கை அம்மன் 4 ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட் டது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு சுவாமி கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ×