search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "colleges"

    • ஜாகீர்உசேன் கல்லூரியில் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கால்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 12 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற போட்டியை இளையான்குடியின் முன்னாள் கால்பந்து வீரர் நைனா முகமது, கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

    அரையிறுதி போட்டியில் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அணி, இந்நாள் மாணவர்கள் அணி, ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி மற்றும் காரைக்குடி வித்யாகிரி கல்லூரி அணி ஆகிய அணிகள் கலந்து கொண்டன.

    இதில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் மாண வர் அணி முதல் பரிசும், காரைக்குடி வித்யகிரி கல்லூரி அணி 2-ம் பரிசும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இந்நாள் மாணவர்கள் அணி 3-ம் பரிசும், ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி 4-ம் பரிசும் பெற்றனர்.

    பரிசளிப்பு விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்கு னர் காளிதாசன் வரவேற் றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர் கால்பந்து வீரர் கமருதீன், சேது பொறியியல் கல்லூரி யின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோரும் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு கோப்பை களை வழங்கினர்.

    தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஜா நஜிமுதீன் செய்திருந்தார்.

    • ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் எச்சரிக்கை
    • உயர்கல்வி கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட சில கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    புதுச்சேரி:

    எஸ்.சி., எஸ்.டி. கல்வி ஊக்கத்தொகை குறித்த ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை பிப்மேட் அலுவலகத்தில் நடந்தது.

    உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அமீன்சர்மா தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய்.ஜெ.இளங்கோவன், அனைத்து கல்லூரி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நலத்துறை இயக்குனர் சாய்.ஜெ. இளங்கோவன் பேசும்போது:-

    கல்லூரிகளில் இருந்து வரும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப் படுவதில்லை. இதனால் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

    உயர்கல்வி கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட சில கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கல்லூரிகளிலும் நோடல் அதிகாரியை நியமிக்கவேண்டும்.

    எஸ்.சி., எஸ்.டி. ஊக்கத்தொகை விண்ணப் பங்கள், சந்தேகங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, ஆய்வு செய்வது குறித்து விளக்கம் தரப்பட்டது.

    • இளையான்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. ஆண்கள் மற்றும் மகளிருக்கான இருபிரிவிலும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. ஆண்கள் பிரிவில் இளையான்குடி, சாகிர் உசேன் கல்லூரி அணி 2-ம் இடமும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி அணி3-ம் இடமும், காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது.

    மகளிர் பிரிவில் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 2-ம் இடமும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணி 3-ம் இடமும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது. நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அகமது, ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், முதல்வர் அப்பாஸ் மந்திரி, சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினர். இதில் அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் அசோக் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர்.
    • இந்தி மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல.

    திருப்பூர் :

    இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்தி மொழியை அறிமுகப்படுத்துவதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர். இந்தி மொழியை ஒரு மொழியாக அனைவரும் பார்க்க வேண்டும். அம்மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல. இந்தியை எதிர்க்கும் தலைவர்களின் மகன், மகள்களும் மற்றும் பேரக்குழந்தைகளும் இந்தி மொழியை கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் தமிழகம் மட்டுமல்லாது பரந்த நமது இந்தியாவில் பயணம் செய்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே நம்முடைய எதிர்கால குழந்தைகளின் அறிவு மற்றும் அவர்களின் நலன் கருதி இந்தி மொழியை அரசியல் ஆக்காமல் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
    • பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான (2022-2023) விண்ணப்பப் பதிவு இணையதள முகவரிகளில் கடந்த மாதம் ஜூன் 22-ம் தேதி தொடங்கியது.

    117 கல்லூரிகள்

    இதையடுத்து கடந்த 7-ந்தேதியுடன் (வியாழக்கிழமை) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது. இதையடுத்து கவுன்சிலிங் முடிவடைந்து, மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுபோல் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு அட்மிஷன் தீவிரமாக நடைபெற்றது.

    சேலம்

    சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

    இதில் 2021-2022 ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் ஏரியில் கட்டப்பட்ட புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 2022-2023-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோடை விடுமுறை

    இந்த நிைலயில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடந்து முடிந்தது.

    செமஸ்டர் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது.

    வகுப்புகள் தொடங்கின

    கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

    இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் இன்று கல்லூரி முதல் நாள் என்பதால் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர். பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். அவர்களை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

    ஆலோசனை

    மேலும் வகுப்பு பேராசியர்கள், பேராசிரியைகளும், மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்திருந்தனர்.

    கடந்த கல்வி ஆண்டில் கொரோனா பிரச்சினையால் பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முழுமையாக அனைத்து பாடங்களையும் நடத்துமாறு பேராசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இன்று கல்லூரி முதல் நாளையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. 

    • 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நன்னிலம் வருவதற்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
    • நன்னிலம் பேரூர் கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வட்ட பஸ் பாதைகளை அமைத்து வட்ட பஸ்–களை இயக்க வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவின் தலைநகரம், நன்னிலம் ஆகும், நன்னிலத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி, 12-க்கும் மேற்பட்ட வங்கிகள், குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம், சுமார் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

    நன்னிலத்தில் சுற்றி 40-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து நன்னிலம் வருவதற்கு, போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    எனவே பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் வட்ட பேருந்துகளை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வர்த்தக நிறுவனத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள், அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள். எனவே நன்னிலம், மாப்பிள்ளை குப்பம், கீழ் அகரம், சலி பேரி, திருவாஞ்சியம், அச்சுதமங்கலம், வடகுடி, சிகார் பாளையம் வழியாக வந்தடைய வட்டப்பாதை பேருந்தும், நன்னிலம், நல்லமாங்குடி, மணவாளன் பேட்டை, ஆலங்குடி, முடிகொண்டான், சன்னா–நல்லூர், கீழ பனங்குடி, ஆண்டிபந்தல், பனங்குடி, மூல மங்கலம், மாப்பிள்ளை குப்பம் வழியாக ஒரு வட்ட பேருந்தும், நன்னிலம், செங்கமேடு, ஆனை குப்பம், த ட்டாத்தி மூலை, வீதிவிடங்கன், திருவாஞ்சியம், அச்சுத–மங்கலம், கீழ்குடி, கீழ் அகரம், சலிப்பே ரி, மாப்பிள்ளை குப்பம் வழியாக, ஒரு வட்ட பேருந்தும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    போதுமான போக்கு–வரத்து வசதி இல்லாத காரணத்தினால், நன்னிலம் வர்த்தகமும், மந்த நிலையில் காணப்படுகிறது. எனவே நன்னிலம் பேருரை கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வட்ட பேருந்து பாதைகளை அமைத்து, வட்ட பேருந்து–களை இயக்க வேண்டும். என கோரிக்கை மக்களிடம் வலுவாக இருந்து வருகிறது.

    மக்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில், கிராம மக்கள் நன்னிலம் பகுதிக்கு வந்து செல்லும் வகையில், வட்ட பேருந்து பாதை அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் தாங்கள் கல்லூரி சிறப்பம்சம் குறித்து விளம்பரப்படுத்தி வருகின்றன.
    • பெண்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் எல்.ஆர்.ஜி.,கல்லூரி உள்ளது.

    திருப்பூர்:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்வுமுடிவுக்கு காத்திருக்கும் மாணவர்கள் அடுத்து காலடி எடுத்து வைக்க போவது கல்லூரிகளில் தான். மதிப்பெண் என்ன என்பதை யூகித்து தனியார் கல்லூரிகளில் ஏறி, இறங்கி விண்ணப்பங்களை வாங்கி மாணவர் பலர் உயர்கல்விக்கு தயாராகி வருகின்றனர்.

    தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் தாங்கள் கல்லூரி சிறப்பம்சம் குறித்து விளம்பரப்படுத்தி வருகின்றன. பல கல்லூரிகளில் அட்மிஷனும் நடந்துள்ளது.இது ஒருபுறம் இருந்தாலும் அரசு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும், எந்த படிப்புக்கு எப்போது கவுன்சிலிங், அட்மிஷன், கல்லூரி படிப்புக்கான தேதி என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. காரணம், அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் அரசு கல்லூரியில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர்.

    திருப்பூரில் உயர்கல்வி கற்றுத்தரும் வகையில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, உடுமலை அரசு கலைக்கல்லுாரி செயல்படுகிறது. பெண்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் எல்.ஆர்.ஜி.,கல்லூரி உள்ளது. இவை தவிர, திருப்பூர் குமரன் கல்லுாரி கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்குகிறது.காங்கயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட தாலுகாவில் அரசு கல்லுாரிகள் செயல்படுகிறது. அரசு கல்லூரிகளில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாளுக்கு (ஜூன் 23) ஒரு வாரம் முன்னதாக, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இருப்பினும் தேதி விபரங்களை, தமிழக அரசுகல்லூரி கல்வி இயக்ககம் தான் அறிவிக்கும் என கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

    • சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
    • கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கைப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடை பெற்றது.

    பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் கல்லூரியின் செயலருமான அருந்ததி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காமதேனு கல்வி குழுமத்தின் நிறுவனர் பெருமாள்சாமி கலந்து கொண்டு புதிய ஆடுகளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து "காமதேனு டிராபி 2022" என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கள் நடைபெற்றது.

    இதில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தேர்வு பெற்றன. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி அணி 3-ம் இடத்தையும், கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணி களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம், 3-ம் மற்றும் 4-ம் பரிசுகள் முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கல்லூரி நிறு வனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி செயலர் அருந்ததி, இணைச் செயலர் மலர்செல்வி, கல்லூரி முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்தி பேசினர்.

    கர்நாடகத்தில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. #BharatBandh
    பெங்களூரு:

    தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகத்தில் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெங்களூருவில் இருந்து 2,543 ஊர்களுக்கு வழக்கமாக 3,300 பஸ்கள் இயக்கப்படும்.

    இன்று தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் 1,104 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் ரெயிலும், மெட்ரோ ரெயிலும் இயக்கப்பட்டது.

    வேலைநிறுத்தம்  காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இதேபோல பெங்களூரு பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சிகள் இன்று வழக்கம்போல் ஓடின. தபால் மற்றும் வங்கி அலுவலகங்கள் திறந்து இருந்தாலும் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதேபோல கர்நாடக அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    வேலை நிறுத்தத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் இன்று சினிமா ஷூட்டிங் நடைபெறவில்லை.

    கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இன்று வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

    பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். #BharatBandh
    குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel
    ஆமதாபாத்:

    இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தின் நர்மதை ஆற்றங்கரையோரம் சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் உலகிலேயே உயரமான இந்த சிலையை கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.



    இந்தநிலையில் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ஒற்றுமையின் சிலையின் மாதிரியான சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.

    இதனால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாநில அரசு மேற்கொண்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்கும்பணியில் ஈடுபட்டனர். இயல்பு நிலை திரும்புவதை தொடர்ந்து 13 பட்டாளியன் ராணுவ வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி விட்டனர்.

    கடந்த 3 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கிய பலரது வீடுகள் முற்றிலுமாக இடிந்து சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த வீடுகளும் உடனடியாக மக்கள் குடியேற முடியாதபடி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இவற்றை தூய்மை செய்து மக்கள் குடியேறி வருகிறார்கள்.

    இதனால் முகாம்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 50 சதவீத மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் திருமண மண்டபம், சமூகநலக்கூடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள கோலஞ்சேரி முகாமில் தங்கி உள்ள பொதுமக்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளித்தார்.

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. சபரிமலையில் மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மண்டல பூஜைக்கு முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தயார் செய்து வருகிறது.

    கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று முதல் அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. முகாம்களில் தங்கி உள்ளவர்கள் ஓணம் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். மழை காரணமாக ஓணம் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது.  #KeralaFloods
    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #SchoolCollege #Holiday
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தேன் வயலில் உள்ள வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமத்தில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர் மழையால் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, அப்பர் பவானி, முக்குருத்தி, பைக்காரா, கிளண்மார்கன் அணைகள் நிரம்பி திறக்கப்பட்டன. இதனால் மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தெங்குமரஹாடா பகுதி மக்கள் ஆற்றை கடந்து பவானிசாகர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்துள்ளார்.   #HeavyRain #SchoolCollege #Holiday
    ×