என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் துவாராகாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று காலையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடயவியல் நிபுணர்களுடன் மிரட்டல் வந்த பள்ளி கல்லூரிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். மின்னஞ்சல் அனுப்பியவர் யார், எங்கிருந்து மின்னஞ்சல் அனுப்புப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதமும் இதேபோல் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×