கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி

ஜாகீர்உசேன் கல்லூரியில் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.
கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கால்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 12 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற போட்டியை இளையான்குடியின் முன்னாள் கால்பந்து வீரர் நைனா முகமது, கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா தொடங்கி வைத்தனர்.

அரையிறுதி போட்டியில் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அணி, இந்நாள் மாணவர்கள் அணி, ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி மற்றும் காரைக்குடி வித்யாகிரி கல்லூரி அணி ஆகிய அணிகள் கலந்து கொண்டன.

இதில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் மாண வர் அணி முதல் பரிசும், காரைக்குடி வித்யகிரி கல்லூரி அணி 2-ம் பரிசும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இந்நாள் மாணவர்கள் அணி 3-ம் பரிசும், ராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி 4-ம் பரிசும் பெற்றனர்.

பரிசளிப்பு விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்கு னர் காளிதாசன் வரவேற் றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர் கால்பந்து வீரர் கமருதீன், சேது பொறியியல் கல்லூரி யின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோரும் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு கோப்பை களை வழங்கினர்.

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஜா நஜிமுதீன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com