search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "volleyball"

    • 'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
    • 'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும்.

    சென்னை:

    பிரைம் வாலிபால் (கைப்பந்து) 'லீக்' போட்டி 2022-ம் ஆண்டு ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 7 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    கடந்த ஆண்டு பெங்களூர், ஐதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் அகமதாபாத் டிபென்டர்ஸ் அணி கோப்பையை வென்றது.

    3-வது ரூபே பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 15-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூர் டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ், மும்பை மீட்டி யார்ஸ், புதிதாக இணைந்து உள்ள டெல்லி டூபான்ஸ் ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

    'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 5' சுற்றுக்கு முன்னேறும்.

    'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும். இதன் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் மாலை 6.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் நடக்கிறது. 15-ந்தேதி நடைபெறும் தொடக்க போட்டிகளில் சென்னை பிளிட்ஸ்-அகமதாபாத் டிபன்டர்ஸ் (மாலை 6.30 மணி), பெங்களூர்-கொல்கத்தா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    சோனிஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
    • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

    நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

    இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

    நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

    • இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன.
    • முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 18-25, 25-22, 23-25, 25-23, 15-11 என்ற கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அரியானா 25-22, 25-17, 25-18 என்ற நேர்செட் கணக்கில் உத்தரபிரதேசத்தை தோற்கடித்தது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன. அரியானாவை வீழ்த்தி தமிழக அணி தங்கப் பதக்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா அணியும் வலுவாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்புடன் இருக்கும்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    அரைஇறுதி ஆட்டங்களில் மேற்குவங்காளம் 25-11, 30-28, 25-19 என்ற கணக்கில் குஜராத்தையும், ராஜஸ்தான் 13-25, 25-20, 25-20 என்ற கணக்கில் தமிழகத்தையும் தோற்கடித்தன.

    • உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
    • உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     உடுமலை:

    உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. ரேணுகாதேவி பிறந்தநாளை முன்னிட்டு தன்னம்பிக்கை வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி அவர் நினைவாக மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி உதவியுடன் 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை இரவு பகல் போட்டிகளாக நடக்கிறது. இதில் எஸ்டிஏடி. எக்ஸ்எல்என்சி கல்லூரி, ஜேபிஆர். கல்லூரி ,பாரதியார் கல்லூரி, பனிமலர் கல்லூரி, பி .ஆர் .கே .கல்லூரி, போஸ்டல் டிபார்ட்மென்ட் ஆகிய மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன.

    இரண்டாம் நாள் போட்டியில் சென்னை ஜே .பி .ஆர் .கல்லூரி, பாரதியார் கல்லூரி ஆகியவை கலந்து கொண்டு விளையாடின. இதில் அதிக புள்ளிகளை பெற்று ஜே. பி .ஆர் .கல்லூரி வெற்றி பெற்றது. இதில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜேபிஆர். கல்லூரி மாணவி ஆதர்யராய்க்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் உடுமலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்எஸ். செல்வராஜ் ,உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இறுதி, அரை இறுதிப்போட்டிகள் நடத்தப் பட்டு இறுதிப்போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.சி. சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடை பிடிக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் கடற்கரை பகுதியில், புதுச்சேரி மாநில அளவிலான இருபாலருக்கும் பீச்வாலிபால் போட்டி நடை பெற்றது. போட்டிகளை ஓ.என்.சி. காவிரி அசட் மேலாளர் உதயபாஸ்வான் தலை மை தாங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப் பாளராக இன்டர் நேஷனல் வாலிபால் வீரர் நடராஜன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

    இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்ந்த 36 ஆண்கள் அணிகள், 16 பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர். இதில் அரசுத்துறை யினர், காவல்துறை யை சேர்ந்த வாலிபால் அணிகளும் கலந்து கொண்டு விளையா டியது. லீக் முறையில் போட்டிகள் நடந்து வரு கிறது. இதைத்தொடர்ந்து கால் இறுதி, அரை இறுதிப்போட்டிகள் நடத்தப் பட்டு இறுதிப்போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் ஓ.என்.சி. அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை ஓ.என்.ஜி.சி மேலாளர் (எச்ஆர்) காமராஜ், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அதி காரி பாலாஜி மற்றும் பலர் செய்தி ருந்தனர். ஏராள மான பொதுமக்கள் போட்டி யை கண்டுகளித்தனர்.

    • நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
    • போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

    முதல் நாளில் ஆண்களு க்கான போட்டியும், 2-வது நாளில் பெண்களுக்கான போட்டியும் நடைபெறுகிறது.

    அதேப்போல் ஆண்களுக்கான கால்பந்து போட்டி 20-ந் தேதியும், பெண்களுக்கான கால்பந்து போட்டி 26-ந் தேதியும் நடக்கிறது. ஆண்களுக்கான கபடி போட்டி 26-ந்தேதியும், பெண்களுக்கான கபாடி போட்டி 27-ந் தேதியும் நடக்கிறது.

    போட்டிகள் காலை 8 மணி முதல் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    ஆண்கள், பெண்க ளுக்கான கபடி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். கால்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    கைப்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனபெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இறகுபந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட ஜூனியர், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் பிருந்தாவன் உள் விளை யாட்டரங்கில் நடை பெற்றது.போட்டிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழு வதும் இருந்து 80-க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்க னைகள் கலந்து கொண்ட னர். போட்டிகள் 9 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வர்கள் என பல்வேறு பிரிவு களில் ஆண், பெண் தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்பட்டன.பரிசளிப்பு விழாவில் மாவட்ட தலைவர் ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அபுதாஹிர் வரவேற்றார். மாவட்ட செயலர் பாரூக் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் தமிழ்நாடு அணி சார்பில் தேசிய போட்டியில் பங்குபெற்ற மகரிஷி பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரிக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவித்தனர். வெற்றி பெற்றவர்கள் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்க தாகும். மாவட்ட சேர்மன் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு

    அரவேணு,

    கோத்தகிரி ரூட் பள்ளியில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சார்பில் ஆங்கில பள்ளிகளுக்கான தேசிய மகளிர் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, மராட்டியம், உ.பி, மேற்குவங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சார்ந்த அணிகள் பங்கேற்றன.

    ஆண்களுக்கான கைப்பந்து இறுதிப் போட்டியில் ஏற்கனவே பஞ்சாப், பீகார் அணிகள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் பெண்கள் கைப்பந்து இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதலாவதாக 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி மராட்டிய அணியை வீழ்த்தியது

    17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி 25-23, 25 -13 என்ற புள்ளிக் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.

    19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தமிழ்நாடு, மேற்கு வங்காள அணிகள் பங்கு பெற்றன. இதில் தமிழ்நாடு அணி 25 -18 25க்கு 17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் வீராங்கனை பவுலினபிரிஷா, மேற்குவங்காள கவுன்சில் மேற்பார்வையாளர் சைலேஷ்பாண்டே, ஜூட்ஷ் பள்ளி நிர்வாகிகள் தன்ராஜன், சாம்ஜத், சரோ ஆகியோர் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் கபடி போட்டியிலும், 12 பள்ளிகள் கைப்பந்து போட்டியிலும் பங்கேற்றன.
    • சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வெற்றி கேடயத்துக்கான கபடிப்போட்டியும், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனா் வெற்றி கேடயத்துக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் கபடி போட்டியிலும், 12 பள்ளிகள் கைப்பந்து போட்டியிலும் பங்கேற்றன.

    போட்டிகளை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கல்லூரி உள்தரஉறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், இந்திய அணியின் கைப்பந்து வீரருமான மங்கள ஜெயபால் கலந்து கொண்டார். தொடர்ந்து கபடி போட்டிகள் செயற்கை தரையிலும், கைப்பந்து போட்டிகள் மாலையில் மின்னொளியிலும் நடைபெற்றன.

    கபடி போட்டியில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியும், 2-வது பரிசை திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ேமல்நிலைப்பள்ளியும், 3-வது பரிசை ஆசீர்வாதபுரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியும், நாலுமாவடி காமராசர் மேல்நிலைப்பள்ளியும் பகிர்ந்து கொண்டன. சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். கைப்பந்து போட்டியில், சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசையும் வென்றன. மணப்பாடு செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி 3-வது பரிசையும், தூத்துக்குடி செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி 4-வது பரிசையும் பெற்றன. சிறந்த ஆட்டக்காரர் விருதுக்கு சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்.

    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். கல்லூரி ெசயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, கபடி போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வெற்றிக்கேடயத்தையும், கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வெற்றிக் கேடயத்தையும் வழங்கி பாராட்டினார். போட்டிகளின் அமைப்பாளர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். விழாவில் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்கள், வேலாயுதம், மாலைசூடும் பெருமாள், பாலகிருஷ்ணன், ேசகர், நூலகர் முத்துக்கிருஷ்ணன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி உள்தரஉறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் செய்திருந்தார்.

    • வருகிற 16-ந் தேதி நடக்கிறது
    • வயது வரம்பு கிடையாது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சீனியர் எறிபந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் என மாவட்ட எறிபந்து சங்கம் அறிவித்துள்ளது. 21-வது மாநில எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி 28-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் கலந்துகொள்ள திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு வருகிற 16 -ந் தேதி மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைபிள்ளை அரசு பள்ளியில் நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. வீரர்கள் தேர்வில் கலந்துகொள்ள உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆதார் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும் என மாவட்ட எறிபந்து சங்க கவுரவ தலைவர் டாக்டர் அரவிந்குமார், தலைவர் தர்ஷன், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி இறகுபந்து போட்டியில் மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர் கள், அலுலவர்கள் பாராட்டினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அரங்கில் வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 17 வயது பிரிவில் ஜமீலாத் ஜெஸ்லா மற்றும் 19 வயது இரட்டையர் பிரிவில் மரியம் ரிஸ்னா, ராஜதனலட்சுமி ஆகியோரும் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவி யரை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ரா ஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர் கள், அலுலவர்கள் பாராட்டினர்.

    • வாலிபால் போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளது.
    • போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மேலூரில் 14, 17, 19 வயது பிரிவு ஆண்கள், பெண்க ளுக்கான வாலிபால் போட்டி அழகர் கோவில் சுந்தரராஜ உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. போட்டியை அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, அழகர் கோவில் உயர்நிலைப் பள்ளி தலை மையாசிரியர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத் தனர். 19 வயது பெண்கள் பிரிவு வாலிபால் போட்டி யில் அழகர் கோவில் சுந்தர ராஜ உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் இடத் தையும் 17 வயது பெண்கள் பிரிவில் அழகர் கோவில் சுந்தர ராஜ உயர் நிலைப் பள்ளி மாண விகள் முதல் இடத்தையும், தெற்குத் தெரு அரசு மேல்நி லைப்பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தை யும் பிடித்தனர். 14 வயது பெண்கள் பிரிவில் சுந்தர ராஜ உயர்நிலைப்பள்ளி மாண விகள் முதல் இடத்தை யும், தெற்கு தெரு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கள் 2-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவி களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

    ×