search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாச்சூரில் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி
    X

    சிறுவாச்சூரில் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி

    • சிறுவாச்சூரில் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி தொடக்கம்
    • போட்டிகளில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.

    பெரம்பலூர்

    தேசிய பாராஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் ராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய பாராஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், மாவட்ட வாலிபால் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023 போட்டி சிறுவாச்சூர் தனியார் பள்ளியில் இன்று (7ம்தேதி) மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. போட்டியை பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைக்கிறார்.

    இந்த போட்டியில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஜார்கண்ட் உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிகளில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ராம்குமார், துணை தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர் என தெரிவித்தனர்.

    Next Story
    ×