search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி காந்திமைதானத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
    X

    கோத்தகிரி காந்திமைதானத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

    • முதலாவதாக வந்த சென்னை அணிக்கு முதல் பரிசாக 20000ரூபாய் வழங்கப்பட்டது.
    • லீக் மற்றும் நாகௌட் முறையில் நடைபெற்றது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காந்திமைதானத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோத்தகிரி கைப்பந்து கழகம் சார்பில் 11-வது மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.இந்த கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு, கேரளா, சென்னை, கோவை என பல மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

    இந்த கைப்பந்தாட்ட போட்டி லீக் மற்றும் நாகௌட் முறையில் நடைபெற்றது. இந்த கைப்பந்தாட்ட காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டி பகல் நேரங்களில் நடைபெற்றது. இறுதிப்போட்டியானது நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை அணியும், நெல்லை கண்ணன் அணியும் மோதின. இந்த போட்டிக்ஷயில் 19-24 என்ற நேர் செட் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலாவதாக வந்த சென்னை அணிக்கு முதல் பரிசாக 20000ரூபாயும், நெல்லை கண்ணன் அணிக்கு 2-ம் பரிசாக 15000 ரூபாயும் அணிக்கு 3-ம் விவி பிரதர்ஸ் அணி 3பரிசாக 10000 ரூபாயும், 4-ம் பரிசாக ஆல்வின் பிரதர்ஸ் அணிக்கு 7000 ரூபாயும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×