என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எறிபந்து வீரர்கள் தேர்வு
    X

    எறிபந்து வீரர்கள் தேர்வு

    • வருகிற 16-ந் தேதி நடக்கிறது
    • வயது வரம்பு கிடையாது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சீனியர் எறிபந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் என மாவட்ட எறிபந்து சங்கம் அறிவித்துள்ளது. 21-வது மாநில எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி 28-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் கலந்துகொள்ள திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு வருகிற 16 -ந் தேதி மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைபிள்ளை அரசு பள்ளியில் நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. வீரர்கள் தேர்வில் கலந்துகொள்ள உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆதார் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும் என மாவட்ட எறிபந்து சங்க கவுரவ தலைவர் டாக்டர் அரவிந்குமார், தலைவர் தர்ஷன், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×