search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும்- கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும்- கனிமொழி எம்.பி. பேச்சு

    13 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கிடைத்திட தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். #kanimozhi #mkstalin #sterliteplant

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக் நகரில் தி.மு.க. காரியாலயத்தை திறந்து வைத்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    ஜனநாயகத்தை காக்க இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில் நான் வேட்பாளராக நிற்கிறேன். எனக்கு மக்கள் அமோக ஆதரவளித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    நீட் தேர்வை கொண்டு வந்த அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு நீதி கிடைத்திட தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழிற் சாலைகள், தொழில்வளங்கள் பெருக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். #kanimozhi #mkstalin #sterliteplant

    Next Story
    ×