search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bars"

    • ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
    • உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.

    மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.
    • பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர்களில சுமார் 900 மதுபான கடைகள் உள்ளன. இதில் 850 மதுபான கடைகளின் உரிமம் 16 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதன் பிறகு பார் நடத்த அனுமதி வழங்கவில்லை.

    ஆனாலும் பல கடைகளில் சட்ட விரோதமாக ரகசியமாக பார்கள் செயல்படத்தான் செய்கின்றன. மிகவும் கெடுபிடியான இடங்களில் குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி ரோட்டோரங்களிலும், தெருக்களிலும் வைத்து குடிக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.

    இதனால் பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது. இதையடுத்து பார் உரிமம் கோருவதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. டெண்டர்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்கள் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றி நாளை ஆணையிடப்படும்.

    அதன் பிறகு உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தப்போகும் கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் ஆவணத்துடன் மதுபான கழகத்தில் அனுமதி பெற்றதும் பார் நடத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

    புறநகர்களிலும் சேர்த்து 1200 மதுபான கடைகள் உள்ளன. எனவே, மீதமுள்ள சுமார் 350 பார்களுக்கு இந்த மாதத்துடன் உரிமம் முடிகிறது. அதன் பிறகு அந்த பார்களுக்கு டெண்டர் விடப்படும்.

    • தஞ்சை மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
    • நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.‌

    தஞ்சாவூர்:

    தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையின்போது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 டாஸ்மாக் கடைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தஞ்சை மாவட்டம்

    தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 166 டாஸ்மாக் கடைகளில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.

    தஞ்சையில் சி.ஆர்.சி. டெப்போ எதிரே, தஞ்சை நாகை ரோடு, கீழவாசல், கீழஅலங்கம், மானோஜியப்பாவீதி, வடக்கு மெயின்ரோடு, கிழக்கு போலீஸ் நிலையம் ரோடு, கீழவாசல் அண்ணாசாலை, தெற்கு அலங்கம், சாந்தப்பிள்ளைகேட், பட்டுக்கோட்டையில் மார்க்கெட் ரோடு, மணிக்கூண்டு, முத்துப்பேட்டை ரோடு, உதயசூரியபுரம், அய்யம்பேட்டை குறிஞ்சிநகர் ஆகிய 15 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.

    திருவாரூர் -நாகை

    இதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 10 டாஸ்மாக் மது கடைகள் மூடப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 32 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பல்வேறு கட்சியினர், பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

    • 500 மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
    • முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம். எல். ஏ. கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவை யில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மது கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    தற்போது மூடப்பட்டுள்ள 500 மது கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கோரிக்கை
    • புதுவைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் பெறும் கலாச்சார சீரழிவு புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்கி ன்றேன்.

    பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் கலா சாரத்தோடு பின்னிப்பி ணைந்த இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மரக்காணம் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

    15-க்கும் மேற்பட்டவர்க ளுக்கு பார்வை பறிபோய் உள்ளது. ஏறத்தாழ 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் கிடைத்து ள்ளது. இந்த துயரமான செயலுக்கு பொறுப்பேற்று அதற்கான முக்கிய முடிவுகளை எடுக்காமல் தமிழக அரசும், புதுவை அரசும் தட்டி கழித்து வருகின்றனர்.

    இந்த குற்றச்செயல் இரு மாநிலம் சம்பந்தப்பட்டு இருப்பதால் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இது போன்ற ஒரு துயரமான நிகழ்வுகள் ஏற்படாமல் நிரந்தரமாக தடுக்க முடியும், புதுவை மாநிலத்தை பொருத்தவரை 10 அடிக்கு ஒரு மதுபான கடை என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ளது. கஞ்சா போன்ற போதை பொருள்களும் தாராளமாக புதுவையில் புழக்கத்தில் உள்ளதாக மக்கள் கூறிக் கொள்கின்றனர்.

    தேவையற்ற முறையில் ரெஸ்ட்ரோபார் என்ற மதுக்கடைகளை திறந்ததால் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பெரும்பாலான வர்கள் குடிப்பதற்கென்று புதுவை மாநிலத்திற்கு வரும் நிலையில் உள்ளதால் புதுவைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் பெறும் கலாச்சார சீரழிவு புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. கலால் வரி ஏய்ப்பும் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

    எனவே புதுவை அரசு படிப்படியாக மதுக்கடை களை குறைத்து வருங்கால இளைஞர்களை நல்வழிப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றனர்.
    • அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது.

    இதையடுத்து உரிமைத்தொகை செலுத்தாமல், சட்ட விரோதமாக செயல்படும் பார்களை கண்காணித்து மூட, மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சட்ட விரோதமாக செயல்பட்டால், மதுவிலக்கு போலீசாருக்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கோவை மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், நாச்சிபாளையம் ரோடு, வைசியாள் வீதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டன.

    இதுகுறித்து தொழிற சங்கத்தினர் கூறும்போது, 2 மாதத்துக்கு மட்டும் உரிமைத்தொகை செலுத்திவிட்டு, பார்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. விதிமுறைக்கு உட்பட்டு பார்களை நடத்த வேண்டும். அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றனர்.

    • 5-ந்தேதி அனைத்து மதுபான க்கூடங்கள் இயங்காது என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
    • தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தவிட்டுள்ளார்.

    விழுப்புரம்: 

    வடலூர் ராம லிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, 5-ந்தேதி அனைத்து மதுபான க்கூடங்கள் இயங்காது என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

    வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் நாளை 5-ந்தேதி (ஞாயிற்று க்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தவிட்டுள்ளார். தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு 5-ந்தேதியை டிரை டே ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நாளை வடலூர் இராமலிங்கர் நினைவு நாளன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்(9-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

    சேலம்:

    மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்(9-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த 3 கடைகளும் பார் இல்லாமலேயே கடந்த மாதம் வரை செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது இங்கே பார் அமைக்கப்பட்டுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தின் வழியாக சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை ஒட்டியே 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடையிலும் தினமும் சராசரியாக 5 லட்ச ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இந்த 3 கடைகளும் பார் இல்லாமலேயே கடந்த மாதம் வரை செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது இங்கே பார் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பார் அமைத்தவர்கள் அங்கு மது வந்து வாங்கி செல்பவர்களை படம் பிடிக்கும் வகையில் சி.சி.டி.வி கேமரா பொருத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு பார் நடத்த உரிய அனுமதி வழங்கப்படவில்லை என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ஒருசிலர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இரண்டு கடைகளுக்கும் சேர்த்து பார் நடத்தி வருவதாகவும், கடை அருகிலேயே இறைச்சி வறுவல், தின் பண்டங்கள் விற்பனை, மது குடிக்கும் கூடம், வெட்டவெளியில் அமர்ந்து மது குடிக்க மேசை நாற்காலிகள் அனைத்தும் போடப்பட்டுள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் அதிரடியாக காமலாபுரம் மதுக்கடை பாரில் ஆய்வுகள் செய்தனர். தொடர்ந்து அங்கு கடை அமைத்து வறுவல்கள், தின் பண்டங்களை விற்பனை செய்த, சேலம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும், அங்கே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த நபர்களை அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதனால், மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சுப்பிரமணி மீது அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அனுமதி இல்லாமல் பார் நடத்தப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல காமலாபுரம் மதுக்கடையில் உரிய அனுமதி இல்லாமல் பார் நடத்துவதை சேலம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தடுக்க வேண்டும் என்றும் இல்லா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×