search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayothya"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள்.
    • உயரதிகாரிகள் 21ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. உலக இந்து அறக்கட்டளையின் நிறுவனரும், உலகளாவிய தலைவருமான சுவாமி விக்யானானந்த், "தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

    அழைக்கப்பட்ட நாடுகளில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெலாரஸ், போட்ஸ்வானா, கனடா, கொலம்பியா, டென்மார்க், டொமினிகா, காங்கோ ஜனநாயக குடியரசு (டிஆர்சி), எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கானா, கயானா, ஹாங் ஆகியவை அடங்கும்.

    காங், ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, மலாவி, மொரீஷியஸ், மெக்சிகோ, மியான்மர், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, சியரா லியோன், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை , சுரினாம், ஸ்வீடன், தைவான், தான்சானியா, தாய்லாந்து, டிரினிடாட் & டொபாகோ, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, யுகே, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஜாம்பியா இடம்பெறுகிறது.

    ராமர் கோவில் நிகழ்ச்சியில் நாட்டு தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும், அனைத்து விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள் என்றும் 21ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூடுபனி மற்றும் வானிலை காரணமாக, பிரதிநிதிகள் நிகழ்வுக்கு முன்னதாக இந்தியாவுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும், வெளிநாட்டு விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டிருப்பதாக சுவாமி விக்யானானந்த் முன்பு கூறியிருந்தார். ஆனால் இட பற்றாக்குறை காரணமாக விருந்தினர் பட்டியலைக் குறைக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

    • ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
    • உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.

    மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விழாவில், முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில், முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், " மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அந்த அற்புதமான கோவிலின் திறப்பு விழா பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வு.

    மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களால் அயோத்தியில் கோவில் திறப்பு விழா தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்று அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×