search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ramar temple"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
    • இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

    ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.

    கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.

    ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்...

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி நடைபெற்றது.
    • ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், 'அகில் பாரதிய மங் சமாஜ்' என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த வெள்ளி துடைப்பம் 1.751 கிலோ எடை கொண்டது. மேலும் இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது.

    இந்தத் துடைப்பத்தைச் செய்து முடிக்க 11 நாட்கள் ஆனதாகவும், 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டதாகவும் அதில் பாரதிய மங் சமாஜ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துடைப்பத்தை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் அன்றைய தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜனவரி 19-ம் தேதி அறக்கட்டளைக்கு வில் நன்கொடையாக வழங்கப்படும்.
    • வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசம் மாநறிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 2.5 கிலோ எடையுள்ள வில்வம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

    இது அயோத்தியில் உள்ள அமாவா ராமர் கோயிலால் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து அவருக்கு வில்லும் அம்பும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 19-ம் தேதி இவை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அமாவா ராம் கோயிலின் அறங்காவலரான ஷயான் குணால் தெரிவித்துள்ளார். 

    மேலும், இந்த வில் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு அம்புகளைப் பற்றிய விளக்கங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 200 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் வில்வத்தை தயாரித்துள்ளனர்.

    2.5 கிலோ எடையுள்ள வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளாக கூறப்பட்டுள்ளது.

    • விழாவில், முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில், முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், " மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அந்த அற்புதமான கோவிலின் திறப்பு விழா பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வு.

    மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களால் அயோத்தியில் கோவில் திறப்பு விழா தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்று அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம்.
    • அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, "ஜனவரி 23 முதல் நாடு முழுவதும் உள்ள பக்தர்களை வரவேற்க தயாராக இருப்பதாக" தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்ட கோவின் கும்பாபிஷேகத்திற்காக பரபரப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கோயிலில் ராமரின் பழைய மற்றும் புதிய சிலைகள் வைக்கப்படும்.

    குறிப்பாக, தேவையான அனைத்து சடங்குகளையும் பின்பற்றி, கோவிலில் பழைய மற்றும் புதிய இரண்டு சிலைகளையும் வைத்திருக்கிறோம். மற்ற அனைத்து சிலைகளும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் இங்கு கொண்டு வரப்படும். 

    ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம். எந்த இடையூறும் இருக்காது. இங்கு நீங்கள் காணும் அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்படும்.

    அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம் மற்றும் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது. இதற்காக, நாங்கள் பல மணிநேரம் ஆலோசித்து பணியாற்றுகிறோம்.

    மகா கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
    • திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தயாராகும் ‘தீர்த்த ஷேத்ரபுரம்’ குடியிருப்புகள்

    உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மும்மரமாக செய்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் மற்றும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை பயன்படுத்தி சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 22-ம் தேதி கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர விஐபி-க்கள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.

    இந்நிகச்ழ்சியில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து செல்ல தயாராகி வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால், அவர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மொழிகளில் பெயர்ப் பலகை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, வாரணாசி, கோரக்பூர், உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு வரும் சாலைகளிலும் பல மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளது.

    மேலும், அயோத்திக்கு அருகில் உள்ள 6 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்தி செல்வதற்காக பேருந்து வசதிகளும், பக்தர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்க தயாராகும் குடியிருப்புகளுக்கு 'தீர்த்த ஷேத்ரபுரம்'என பெயரிடப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
    • ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகள்.

    அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், நாளை அயோத்தியாவில் வால்மீகி விமான நிலையம் திறக்கப்படுகிறது.

    ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. 

    இதை முன்னிட்டு, ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகளின் 7 நாள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, ஜனவரி 16 : கோயில் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட புரவலர் மூலம் பரிகாரம், சரயு நதிக்கரையில் தசவித் குளியல், விஷ்ணு வழிபாடு மற்றும் கோடன் நடைபெறுகிறது.

    ஜனவரி 17: ராம்லாலா சிலையுடன் அயோத்திக்கு ஊர்வலம் வரும், பக்தர்கள் மங்கள கலசத்தில் சரயு நீரைச் சுமந்து கோவிலை அடைவார்கள்.

    ஜனவரி 18: கணேஷ் அம்பிகா பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன், வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.

    ஜனவரி 19: அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் மற்றும் ஹவன்.

    ஜனவரி 20: கோயிலின் கருவறையை சரயுவின் புனித நீரால் கழுவிய பின், வாஸ்து சாந்தியும், அன்னதானமும் நடைபெறும்.

    ஜனவரி 21: 125 கலசங்களுடன் தெய்வீக ஸ்நானம் செய்த பிறகு, ஷயதிவாஸ் செய்யப்படும்.

    ஜனவரி 22: காலை வழிபாட்டிற்குப் பிறகு, மதியம் மிருகசிர நட்சத்திரத்தில் ரமலாவின் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படும். 

    பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வருகை தர உள்ளதால், அயோத்தி நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அயோத்தி பயணத்தின் போது பிரதமர் மோடி 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • கும்பாபிஷேகம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு.
    • கும்பாபிஷேகத்திற்கான விருந்தினர் பட்டியல் பெரிதாகி வருகிறது.

    அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, இந்த நிகழ்வு இன்னும் பல ஆண்டுகளாக நினைவில் வைக்கப்படும் அளவுக்கு பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

    எனவே, அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் உள்ள புனிதர்கள், பாதிரியார்கள் மற்றும் மதத் தலைவர்களை அழைப்பது மட்டுமல்லாமல், 1992 ஆம் ஆண்டில் அயோத்தி பகுதியில் நிர்வகித்த முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. முக்கிய தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள் மற்றும் பத்ம விருதுகளுடன் கௌரவிக்கப்பட்ட நபர்கள் என்று விருந்தினர் பட்டியல் பெரிதாக இருக்கிறது.

     


    தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய பட்டியல் கவனமாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது என்று அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறினார். விருந்தினர் பட்டியலில் ஆன்மீக தலைவர் தலாய் லாமா, பாபா ராம்தேவ், அம்மா அமிர்தானந்தமயி, முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் கவுதம் அதானி, டாடா குழுமத்தின் நடராஜன் சந்திரசேகரன், எஸ்.என். எல் அண்ட் டி குழுமத்தின் சுப்ரமணியன் மற்றும் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீட்சித் ஆகியோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    ஆனால் இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்களை கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அயோத்திக்கு வர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    "இருவரும் வயதில் பெரியவர்கள், வயதைக் கருத்தில் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்" என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார்.

     


    பா.ஜ.க. நிறுவன உறுப்பினரான அத்வானிக்கு இப்போது 96 வயது, ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயது. ஆனால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவுக்கு அழைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வயது 90. விழாவுக்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என்று கூறிவிட்டு,அதே வயதையுடைய தேவ கவுடா அழைக்கப்பட்டு இருக்கிறார்.

    ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார். ராமர் ரத யாத்திரை என்பது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஊக்குவிக்க எல்.கே. அத்வானி, பா.ஜ.க. நடத்திய அரசியல் மற்றும் மத ஊர்வலம்.

     


    1990 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடைகளை எதிர்கொண்டு, ஏராளமான மக்கள் மத்தியில் உரையாற்றி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வாதிட்டவர் அத்வானி. அவரை ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு வயதை காரணம் காட்டி வர வேண்டாம் என்று சொன்னது விமர்சனத்திற்கு உள்ளானது.

    ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரவேண்டாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அறக்கட்டளை சார்பிலான குழு இன்று எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது.

    • இரண்டு கிலோ வெள்ளியில் வைரஸ் பதிக்கப்பட்டுள்ளது.
    • 40 கலைஞர்கள் 35 நாட்களாக வடிவமைத்துள்ளனர்.

    வைரம் வியாபாரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் முன்னிலை வகிக்கிறது. நேற்று முன்தினம் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேசம் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள், சூரத்தில் உள்ள ராமர் கோவில் விடிவிலான வைர நெக்லஸை வடிவமைத்துள்ளனர்.

    இந்த வைர நெக்லஸ் 5 ஆயிரம் அமெரிக்கா வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    40 கலைஞர்கள் 35 நாட்களாக இந்த நெக்லஸை வடிவமைத்துள்ளது. இது வணிக நோக்கத்திற்கானது அல்ல. நாங்கள் இதை ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்க இருக்கிறோம் என வைர வியாபாரி தெரிவித்துள்ளது. சூர்த்தில் உளள் ராமர் கோவில் போன்று இந்த நெக்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவிப்பு.
    • விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்.

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.

    நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதனையொட்டி, அயோத்தி விமான நிலையமும் தயார் நிலையில் உள்ளது.

    அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவித்துள்ளார்.

    இந்த விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் என்றும் விமான நிலையத்தில் போயிங் 737, ஏர்பஸ் 319 மற்றும் ஏர்பஸ் 320 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேக நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
    • கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு.

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி அன்று நண்பகல் 12.30 மணிக்கு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மேலும், கும்பாபிஷேக நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார்.

    கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அமைப்பினர் இன்று அழைப்பிதழை வழங்கினர்.

    ×