search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayothi"

    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'.
    • படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடித்த படம் வெற்றியடைந்தது.

    அயோத்தி படம் வெளியாகி 1 வருடம் கடந்த நிலையில் அப்படத்தின் இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கும் படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கவுள்ளார். இதற்கு முன் ஆண்டவன் கட்டளை, மருது, தங்க மகன் போன்ற வெற்றி படங்களை கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் யார் நடிக்க போகிறார்கள் எம்மாதிரியான கதைக்களம் கொண்ட திரைப்படம் போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் அன்றைய தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
    • பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.


    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர்.


    இதே போல இசைஞானி இளையராஜாவும் அயோத்தி செல்கிறார். அயோத்தி செல்லும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஒருநாள் முன்பாகவே அதாவது 21-ம் தேதியே அயோத்திக்கு வந்து விடும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
    • திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தயாராகும் ‘தீர்த்த ஷேத்ரபுரம்’ குடியிருப்புகள்

    உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மும்மரமாக செய்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் மற்றும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை பயன்படுத்தி சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 22-ம் தேதி கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர விஐபி-க்கள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.

    இந்நிகச்ழ்சியில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து செல்ல தயாராகி வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால், அவர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மொழிகளில் பெயர்ப் பலகை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, வாரணாசி, கோரக்பூர், உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு வரும் சாலைகளிலும் பல மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளது.

    மேலும், அயோத்திக்கு அருகில் உள்ள 6 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்தி செல்வதற்காக பேருந்து வசதிகளும், பக்தர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்க தயாராகும் குடியிருப்புகளுக்கு 'தீர்த்த ஷேத்ரபுரம்'என பெயரிடப்பட்டுள்ளது.

    • நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.


    அயோத்தி

    இப்படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இவர் 2020-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ப்ரஷர் குக்கர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அயோத்தி படமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

    இந்த நிலையில், நடிகை ப்ரீத்தி அஸ்ராணி அடுத்ததாக கவினுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    அயோத்தி

    இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 'கிஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்தை ரஜினி பாராட்டியிருந்தார்.
    • ரஜினியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்து இயகுனர் மந்திர மூர்த்தி பதிவிட்டுள்ளார்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.


    அயோத்தி
    அயோத்தி

    அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டியிருந்தார்.


    அயோத்தி
    அயோத்தி

    இந்நிலையில் ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் மந்திர மூர்த்தி பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பது, உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும் ,உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள். நன்றி சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’.
    • இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    அயோத்தி

    இதையடுத்து அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டியுள்ளார்.

    சசிகுமார் -ரஜினி

    இதற்கு சசிகுமார், "நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’.
    • இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.


    அயோத்தி 

    அயோத்தி 

    இந்நிலையில் அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டியுள்ளார்.

    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’.
    • இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    நடிகர் சசிகுமார் தற்போது 'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் 'நந்தன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    அயோத்தி

    இதைத்தொடர்ந்து பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அயோத்தி

    மதப்பிரச்சினைகளை பேசும் படமாக உருவாகியுள்ளா 'அயோத்தி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'அயோத்தி' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள 'சாதி பாப்பான் மதம் பாப்பான் அத காப்பாத்த சண்டையும் போடுவான்'என்ற வசனம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.




    ×