search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமர் கோயில் திறப்பு விழா - பக்தர்களுக்காக தயாராகும் தீர்த்த ஷேத்ரபுரம்
    X

    ராமர் கோயில் திறப்பு விழா - பக்தர்களுக்காக தயாராகும் 'தீர்த்த ஷேத்ரபுரம்'

    • அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
    • திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தயாராகும் ‘தீர்த்த ஷேத்ரபுரம்’ குடியிருப்புகள்

    உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மும்மரமாக செய்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் மற்றும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை பயன்படுத்தி சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 22-ம் தேதி கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர விஐபி-க்கள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.

    இந்நிகச்ழ்சியில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து செல்ல தயாராகி வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால், அவர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மொழிகளில் பெயர்ப் பலகை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, வாரணாசி, கோரக்பூர், உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு வரும் சாலைகளிலும் பல மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளது.

    மேலும், அயோத்திக்கு அருகில் உள்ள 6 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்தி செல்வதற்காக பேருந்து வசதிகளும், பக்தர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்க தயாராகும் குடியிருப்புகளுக்கு 'தீர்த்த ஷேத்ரபுரம்'என பெயரிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×