search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway stations"

    • தமிழகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
    • கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் மோடி நாளை மாலை காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.

    சென்னை:

    முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்பத்தப்படுகின்றன.

    இந்தத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி-மின்படிகட்டு, உள்ளூா் தயாரிப்பை முன்னிலைபடுத்தும் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

    நாடு முழுவதும் உள்ள 1,318 ரெயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

    இந்த நிலையில், 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி நாளை மறுநாள் (26-ந்தேதி) தொடங்கி வைக்க உள்ளாா்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்கள் 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரெயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரெயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரெயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரெயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரெயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரெயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

    தமிழகத்தில் தெற்கு ரெயில்வே சாா்பில் 32 ரெயில் நிலையங்கள், தென் மேற்கு ரெயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் ஆகிய இரு ரெயில் நிலையங்கள் என 34 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    இதில் திருநெல்வேலி ரெயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரெயில் நிலையம் ரூ.118 கோடியிலும், திருச்சூா் ரெயில் நிலையம் ரூ.384.81 கோடியிலும், செங்கனூா் ரெயில் நிலையம் ரூ.205 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன. மற்ற ரெயில் நிலையங்களை பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன.

    இந்தப் பணிகள் தொடங்கி இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தமிழகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் மோடி காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.


    இந்தியாவில் 2 முதியோா் நல மையம் அமைக்கப்படும் என்று 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு 9 ஏக்கா் நிலத்தை கொடுத்து, தேசிய முதியோா் நல மையம் அமைய காரணமாக இருந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிரத்யேகமாக முதியோருக்காக மருத்துவமனை அமைந்துள்ளது.

    உளுந்தூா்பேட்டை, அரக்கோணம், ஓட்டேரி, சிவகாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. மத்திய அரசின் 60 சதவீத நிதியிலும், மாநில அரசின் 40 சதவீத நிதியிலும் கட்டப்படவுள்ள கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ரூ. 23.75 கோடியில் அமைய உள்ளன.

    இந்தப் பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.

    அதேபோல், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, நீலகிரி மாவட்டம் குன்னூா், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, ஆகிய பகுதிகளில் தலா ரூ. 1.75 கோடியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ. 25 கோடியில் கட்டப்பட உள்ள காசநோய் ஆராய்ச்சி மையம் என 10 பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    கட்டி முடிக்கப்பட்ட ரூ. 313.60 கோடி மதிப்பீட்டிலான கட்டிடங்களையும் அவர் திறந்து வைக்க உள்ளாா்.

    • விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் அன்றைய தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச்செல்லும் பைகளில் எடுத்து கொண்டு ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனால்c சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர். மேலும் ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி பட்ாசுகளை ரெயிலில் கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை மேலும் தொடரும் என்றனர்.

    • பா.ஜ.க.வும், காங்கிரசும் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • திட்ட பணிகள் நிறைவேற இருவேறு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    கரூர்:

    நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் புதுப்பிக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் கரூர், தஞ்சாவூர் உட்பட 18 ரெயில் நிலையங்கள் ரூ.515 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    அதனை தொடர்ந்து கரூர் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதி மணி அந்த அடிக்கல்லை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட முதன்மை திட்ட மேலாளர் அணில்குமார் பஞ்ஜியார், கரூர் உதவி கலெக்டர் ரூபினா, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தின் படி கரூர் ரெயில் நிலையத்தில் லிப்ட், நகரும் படிக்கட்டு, பயணிகள் காத்திருப்பு அறை, பயணிகள் உள்ளே, வெளியே செல்ல தனித்தனி வழிகள் உள்ளிட்ட வசதிகள் ரூ.34 கோடியில் அமைக்கப்படுகிறது. மேற்கண்ட பணிகளை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதற்கு காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளும் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.ஜோதிமணி நிருபர்களிடம் கூறும்போது, கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தி மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கடந்த 2020-ம் ஆண்டு கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் தற்போது ரூ.34 கோடியில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.

    இதனை பா.ஜ.க. ஏற்க மறுத்தது. அந்த கட்சியின் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், கரூருக்கு வந்திருந்த மத்திய ரெயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷிடம், கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தக் கோரி பா.ஜ.க. சார்பில் கடிதம் அளித்திருந்தோம்.

    அதன் அடிப்படையிலேயே கரூர் ரெயில் நிலையத்தை ரெயில்வே அமைச்சகம் தேர்வு செய்து நிதி ஒதுக்கி உள்ளது என்றார்.

    இது குறித்து பயணிகள் தரப்பில் கூறும் போது, நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் பா.ஜ.க.வும், காங்கிரசும் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே திட்ட பணிகள் நிறைவேற இருவேறு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    • 24 ஆயிரத்து 470 கோடி செலவில் ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு
    • ஜம்மு நிலையத்திற்கு மட்டும் 259 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது

    நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் காஷ்மீர் ரெயில் சேவை மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜிதேந்திர சிங் கூறுகையில் ''காஷ்மீர் ரெயில்சேவை மூலம் நாட்டின் பிற பகுதிளுடன் இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் இணைக்கப்படும். இதில் உதம்புர் முக்கிய பங்காற்றும்.

    பிரதமர் அறிவித்ததில் ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு மட்டும் 295 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. ஜம்மு நிலையத்திற்கு மட்டும் 259 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. உதம்புர் ரெயில் நிலையத்திற்கு 15.94 கோடி ரூபாயும், புத்காம் ரெயில் நிலையத்திற்கு 15.94 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட இருக்கிறது.

    பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக உதம்புர் மாவட்டத்திற்கு. மோடி தலைமையின் கீழ் இந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோடிக்கு முன் ஆட்சியில் இருந்த மத்திய அரசு பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை'' என்றார்.

    • மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது
    • ரூ.16 கோடியில் நடக்க உள்ளது

    ஜோலார்பேட்டை:

    இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணி களின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரூ.16 கோடியில் நடக்க உள்ள திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, ரெயில்வே சென்னை கோட்ட பொறியாளர் மயிலேறி, ஜோலார்பேட்டை நகராட்சி தலைவர் காவியாவிக்டர், ரெயில்வே மேலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதே போல் அரக்கோணம் ெரயில் நிலையத்திலும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. சு.ரவி எம்.எல்.ஏ. மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரெயில் நிலையங்கள் மறுசிரமைக்கப்படுகின்றன.
    • ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18 ரெயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன.

    நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

    இந்த 508 ரெயில் நிலையங்களில் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரெயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்காளத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, அரியானாவில் 15, கர்நாடகாவில் 13 என 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த மறுசீரமைப்பு பணியானது, நன்கு வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து சுழற்சியுடன் பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குகிறது. ரெயில் நிலைய கட்டிடங்கள் உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

    • நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் ரெயில் பாதைகள் முழுவதும் மின் மயமாக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது.
    • மேட்டூர்- பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் இடையிலான பகுதிகளில் மின் வயர்களை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    தென்காசி:

    நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் ரெயில் பாதைகள் முழுவதும் மின் மயமாக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்டவாளம் பகுதிகளில் மின் கம்பங்கள் மட்டும் நடும் பணிகள் நடைபெற்ற நிலையில், மின்கம்பங்களுக்கு இடையே மின் வயர்கள் இணைக்கும் பணியை ரெயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் மேட்டூர் ரெயில் நிலையத்திலிருந்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் இடையிலான பகுதிகளில் மின் வயர்களை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர். ரெயில்வேயில் மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விரைவில் முழுவதுமாக நெல்லை- தென்காசி இடையிலான ரெயில்வே பாதையில் மின்சாரத்தில் இயங்கும் ரெயில் எஞ்சின்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் தெரிகிறது.

    • தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் மற்றும் யு.டி.எஸ். செயலி ஆகியவை பயணிகள் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    • பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் நெரிசல் குறையும்.

    சென்னை:

    சென்னை கோட்டத்தில் மொத்தம் 160 ரெயில் நிலையங்கள் உள்ளன.

    இதில் சில ரெயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக ரெயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் உள்ளன.

    ஆனால் இவற்றில் சில ரெயில் நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரெயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.

    ஏற்கனவே எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல், கடற்கரை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, பூங்கா, ஆவடி, பெருமாள்பூர், கோட்டை, நுங்கம்பாக்கம், பல்லாவரம், பேசின்பிரிட்ஜ், திருவள்ளூர், வில்லிவாக்கம், கோடம்பாக்கம், பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய 19 ரெயில் நிலையங்களில் 34 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் மற்றும் யு.டி.எஸ். செயலி ஆகியவை பயணிகள் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    எனவே பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் நெரிசல் குறையும்.

    முக்கியமான ரெயில் நிலையங்களில் நடைமேடையின் ஒரு பக்கத்தில் டிக்கெட் கவுண்டர்கள் இருக்கும் நிலையில் நடைமேடையின் மறுபக்கத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் அமைக்கப்படும்.

    மேலும் இது சிக்கன நடவடிக்கையாகவும் உள்ளது. எழும்பூர், கடற்கரை, மாம்பலம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களால் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வழக்கமாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ. 15-க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • நீங்கலாக மீதமுள்ள உணவுப் பொருட்களின் விலையை ரெயில்வே நிர்வாகம் கடந்த ஜனவரி 16-ந்தேதி உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திருச்சி:

    நாடு முழுவதும் குறைவான கட்டணத்துடன் நிறைவான பயணத்தை அளிப்பதில் ரெயிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அனைத்து தரப்பினருக்கும் ரெயில் சேவை வசதியாக உள்ளது.

    ரெயில் பயணிகளின் வசதிக்காக முக்கிய ரெயில் நிலைய சந்திப்புகள் மற்றும் ரெயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையின் பேரில் இங்கு உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

    குறிப்பாக இந்த உணவகங்களில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை, சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை, தேங்காய் சாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த உணவுப் பொருட்களின் விலை கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது உயர்த்தப்பட இருக்கிறது. விலைவாசி உயர்வு, சமையல் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இவற்றின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வழக்கமாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ. 15-க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவை நீங்கலாக மீதமுள்ள உணவுப் பொருட்களின் விலையை ரெயில்வே நிர்வாகம் கடந்த ஜனவரி 16-ந்தேதி உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி சட்னி சாம்பாருடன் 2 இட்லிகள் ரூ.13-ல் இருந்து ரூ.20 ஆகவும், மசால் தோசை ரூ.16-ல் இருந்து ரூ.25 ஆகவும், மெதுவடை, மசால் வடை, ரவை உப்புமா, ஆனியன் தோசை, ஊத்தப்பம், வெங்காய பக்கோடா ஆகியவற்றின் விலை ரூ.17-ல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

    மேலும் வெஜிடபிள் சாண்ட்விச் ரூ.19-ல் இருந்து ரூ.30 ஆகவும், தக்காளி சாதம் ரூ.14-ல் இருந்து ரூ.20 ஆகவும், பொங்கல் ரூ.16-ல் இருந்து ரூ.25 ஆகவும், புளிசாதம் ரூ.21-ல் இருந்து ரூ.35 ஆகவும், தயிர் சாதம் ரூ.18-ல் இருந்து ரூ.30 ஆகவும், எலுமிச்சை சாதம் ரூ.19-ல் இருந்து ரூ.30 ஆகவும், தேங்காய் சாதம் ரூ.19-ல் இருந்து ரூ.25 ஆகவும், சாம்பார் சாதம் ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும் சைவ குருமாவுடன் இரண்டு பரோட்டாக்கள் அல்லது நான்கு சப்பாத்திகள் ரூ.29-ல் இருந்து ரூ.45 ஆகவும் விலை உயர்கிறது.

    இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரெயில் நிலைய கேட்டரிங் ஸ்டால்களில் உணவு வகைகளின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆனால் விலைப்பட்டியல் இதுவரை தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து ரெயில் நிலையங்களுக்கு வந்து சேரவில்லை. எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்பட்ட விலைப்பட்டியல் வரும். வந்தவுடன் புதிய விலை உயர்வு அமல்படுத்தப்படும் என்றார்.

    நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அன்றாடம் ரெயில் சேவையினை அதிகம் பயன்படுத்தி வருபவர்களுக்கு இந்த உணவுப்பொருட்களின் விலை உயர்வு சற்றே சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    • அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 ெரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

    சேலம்:

    அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 ெரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

    சின்னசேலம்

    மேலும் சேலம் கோட்–டத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, போத்தனூர், ஊட்டி, குன்னூர், கரூர், ெபாம்மிடி, சின்னசேலம், திருப்பத்தூர், சாமல்பட்டி, மொரப்பூர் ஆகிய 14 ரெயில் நிலையங்களும் சேலம் சந்திப்புடன் இணைந்து மேம்படுத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்யப்படுகிறது.
    • திருமங்கலம்- மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்தில் அதிக ரெயில்களை கையாள வசதியாக, ரூ.2.5 கோடி செலவில் புதிய நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகி றது. இதற்காக 5, 6-வது பிளாட்பாரங்களுக்கு இடையே புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    இது 450 மீட்டர் நீளத்தில் அமைகிறது. பிளாட்பாரம் நடுவில் 13 மீட்டர் அகலம், இருபுறமும் 9 மீட்டர் அகலத்திலும் அமைகிறது. அங்கு 325 ச.மீ. அளவில் மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளது.

    அடுத்தபடியாக மேற்கு நுழைவுவாயில் அருகே உள்ள தற்போதைய 6-வது பிளாட்பாரம், எல்லீஸ் நகர் பாலம் அருகே, 272 மீட்டருக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த புதிய பிளாட்பாரம், 5.5 மீட்டர் அகலம் உடையதாக இருக்கும்.

    இதே போல பிளாட்பாரம் எண் 1, 2, 3, 4, 5 ஆகியவை வடக்கு பகுதியில் முறையே 70, 60 மற்றும் 20 மீட்டர் அளவுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்கு பயணிகள் எளிதாக சென்று வரும் வகையிலும், டிராலி சூட்கேஸ் உருட்டி செல்லும் வகையிலும் காங்கிரிட் தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலைய கட்டிடமும், கூடுதலாக புதிய பிளாட்பாரமும் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன.

    திருமங்கலம்- மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. திருமங்கலம்- மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்து வருகிற டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும்.

    மதுரை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பிளாட்பாரம் வளர்ச்சி பணிகள், ெரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தால் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ×