search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆர்எஸ்எஸ்- பாஜக விழா என்பதால் நாங்கள் புறக்கணிக்கிறோம்: காங்கிரஸ் அதிரடி
    X

    ஆர்எஸ்எஸ்- பாஜக விழா என்பதால் நாங்கள் புறக்கணிக்கிறோம்: காங்கிரஸ் அதிரடி

    • விழாவில், முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில், முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், " மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அந்த அற்புதமான கோவிலின் திறப்பு விழா பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வு.

    மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களால் அயோத்தியில் கோவில் திறப்பு விழா தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்று அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×