search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ram mandir"

    • ராமர் கோயில் கட்டுவதால் வறுமை ஒழியாது. பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது
    • ராமர் கோயில் காட்டுவதால் பாஜகவிற்கு என்ன லாபம்? அதனால் எங்கள் சகோதரிகளுக்கு என்ன லாபம்? ராமர் கோயிலை வைத்து பாஜக ஏன் ஓட்டு கேட்கிறது?

    ராமர் கோயில் கட்டுவதால் வறுமை ஒழியாது. பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை என்று சந்தோஷ் லாட் குற்றம் சாட்டியுள்ளார்.

    "ராமர் கோயில் கட்டுவதால் பாஜகவிற்கு என்ன லாபம்? அதனால் எங்கள் சகோதரிகளுக்கு என்ன லாபம்? ராமர் கோயிலை வைத்து பாஜக ஏன் ஓட்டு கேட்கிறது? இதன் மூலம் விவசாயிகள் பயன் பெற்றார்களா? அவர்கள் பயன் பெற்றிருந்தால் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? எதற்காக விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர்ப் புகை பயன்படுத்தப்படுகிறது" என அடுக்கடுக்கான கேள்விகளை சந்தோஷ் லாட் எழுப்பியுள்ளார்.

    கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் கருத்துக்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள்.
    • உயரதிகாரிகள் 21ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. உலக இந்து அறக்கட்டளையின் நிறுவனரும், உலகளாவிய தலைவருமான சுவாமி விக்யானானந்த், "தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

    அழைக்கப்பட்ட நாடுகளில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெலாரஸ், போட்ஸ்வானா, கனடா, கொலம்பியா, டென்மார்க், டொமினிகா, காங்கோ ஜனநாயக குடியரசு (டிஆர்சி), எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கானா, கயானா, ஹாங் ஆகியவை அடங்கும்.

    காங், ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, மலாவி, மொரீஷியஸ், மெக்சிகோ, மியான்மர், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, சியரா லியோன், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை , சுரினாம், ஸ்வீடன், தைவான், தான்சானியா, தாய்லாந்து, டிரினிடாட் & டொபாகோ, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, யுகே, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஜாம்பியா இடம்பெறுகிறது.

    ராமர் கோவில் நிகழ்ச்சியில் நாட்டு தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும், அனைத்து விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள் என்றும் 21ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூடுபனி மற்றும் வானிலை காரணமாக, பிரதிநிதிகள் நிகழ்வுக்கு முன்னதாக இந்தியாவுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும், வெளிநாட்டு விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டிருப்பதாக சுவாமி விக்யானானந்த் முன்பு கூறியிருந்தார். ஆனால் இட பற்றாக்குறை காரணமாக விருந்தினர் பட்டியலைக் குறைக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

    • ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது.
    • ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படுகிறது.

    அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து, ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:-

    ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது. கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் தொடரலாம்.

    பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அயோத்தி திறப்புக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம். அருகில் உள்ள சிறிய, பெரிய கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும் உங்களால் சாத்தியமான கோவிலுக்குச் செல்லுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும்.
    • அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ்சரி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராமர் கோவில் கட்டும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2024 ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டு பக்தர்கள் வழிபடுதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் எங்கள் வேலையை செய்துள்ளோம் என தெரிவித்தார்.

    ஒரே நாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்தியது போல், ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #UddavThackery
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் சிவசேனா கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி தலைவர் உத்தவ தாக்கரே கலந்து கொண்டார்.

    அதன்பின்னர், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமர் கோவில் கட்டுதல், பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது ஆகியவை பற்றி அவர்கள் (பாஜக) தேர்தலுக்கு முன்பாக பேசுகின்றனர். ஆனால், எந்த தேர்தல் (2019 அல்லது 2050) என்பது பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. 

    உங்களால் ஒரே நாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்த முடிந்தது. அதுபோல், ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையை நீங்கள் ஏன் எடுக்கவில்லை. ஏனெனில் நீங்கள் தான் பெரும்பான்மை பலத்துடன் உள்ளீர்கள்.

    மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடியின் ப்லன்களை அவர்களை சென்று சேரவில்லை. வளர்ச்சிதான் எங்கள் கொள்கை என்று முழங்கிய பாஜக, தற்போது ராமர் கோவில் விவகாரத்தை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 
    ×