search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "g ramakrishnan"

    • மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

    நெல்லை:

    மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

    அதன்படி நெல்லை, ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    நாளை மற்றும் நாளை மறுதினம் பெங்களூருவில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜனதாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதுவரை மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்ட சூழலிலும் 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இருந்து பல்லாயிரம் நபர்கள் வெளியிடத்திற்கு குடிபெயர்ந்த சூழலிலும் அங்கு நடக்கும் கலவரத்தை பாரத பிரதமர் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.

    மணிப்பூரில் நடக்கும் மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.-ன் அணுகுமுறை சரியில்லாதது தான் காரணம். இந்திய நாட்டில் பழங்குடியின மக்களுக்கென மாநில வாரியாக தனித்தனி சட்டங்கள் உள்ளது.

    யாரிடமும் எந்த கருத்தும் கேட்கப்படாமல் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை பா.ஜனதா செய்து வருகிறது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    விலைவாசி உயர்வு, விலையை கட்டுப்படுத்துவது போன்றவைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. உணவு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்க மத்திய அரசு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

    ஆனால் தமிழகத்தில் மாநில அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்து வருவது வரவேற்கத்தக்கது.

    மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. வருகிற 23-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த நோக்கம்.

    மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.

    எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் பா.ஜ.க.வில் யாரேனும் சேர்ந்தால் அவர்கள் புனிதராகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையை பா.ஜ.க. செய்து வருகிறது. மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

    இவர் அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மத்திய தேர்தல் கமி‌ஷன் நியமிக்க வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர் கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் அதிகார வரம்பு மீறிய செயலாக உள்ளது என்று கோர்ட்டு கூறி உள்ளது. கடந்த 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த பிறகு தேர்தல் விதி முறைக்கு மாறாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்குள் அதிகாரிகள் சென்று வந்து உள்ளனர். சில ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்று உள்ளனர். இதுதொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல கோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு உள்ள விவிபேடு எந்திரங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது மாநில தேர்தல் அதிகாரி சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.

    எனவே வருகிற 23-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மத்திய தேர்தல் கமி‌ஷன் நியமிக்க வேண்டும்.

    தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவேதான் சபாநாயகர், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். தற்போது அந்த நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆனால் மாநில அரசு மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

    மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விருப்பம். ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்த பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும்.

    தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை தீர்ப்பதற்கு மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் 1700 ஆசிரியர்களுக்கு அவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வில்லை என்பதற்காக சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் விடுதலை தொடர்பாக இதுவரையிலும் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை-திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது. அதனை விரைவுப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்களும் எங்கும் சென்றுவரலாம் என்ற நிலை உள்ளது. அதேசமயம் தமிழர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளும் நடைபெறக்கூடாது இதற்கு மாநில அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி கவர்னர், புதுச்சேரி அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தவறு என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. புதுச்சேரி கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஈரானில் இருந்து எண்ணை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா விதித்து உள்ள தடை இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தடையை நாம் ஏற்கக்கூடாது.

    குமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டம் கடுமையான பாதிப்புகளை மக்களுக்கு உருவாக்கி உள்ளது. சொந்த நிலத்தில் மரங்களை வெட்டுவதற்கு கூட அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதுபோல நிலம் விற்கவோ, வாங்கவோ கலெக்டர் அனுமதி வேண்டும். எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #gramakrishnan #marxistcommunist

    நெல்லை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாராளுமன்றத்துக்கு 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை 3-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 19-ந்தேதி 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து தொகுதி ஓட்டு எண்ணிக்கையும் மே 23-ந்தேதி நடக்கிறது.

    இதன் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மதுரையில் வாக்கு எண்ணிக்கை எந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அரசு அதிகாரி ஒருவர் சென்று ஆவணங்களின் நகல் எடுத்துள்ளார். பின்னர் மீண்டும் அங்கு கொண்டு வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. இதுபற்றி உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும்.

    தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. அவரை மாற்றி விட்டு வேறு அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளியே வரும். இந்த வி‌ஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்டு என்பது கண்துடைப்பு ஆகும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    தேவையெனில் வழக்கு தொடருவோம். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பிரதமர் மோடி பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு இடங்களிலும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் பழனி, மாநில நிர்வாகிகள் கருமலையான், சாமுவேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக லெனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள லெனின் சிலைக்கு ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  #gramakrishnan #marxistcommunist

    கஜா புயலால் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #Gajacyclone #GRamakrishnan
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இயற்கை சீற்றத்தை தடுக்க இயலாது. ஆனால் அதனால் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்யும் வகையில் மாநில அரசு இதுவரை சரியான நடவடிக்கையோ, நிவாரண உதவியோ வழங்கவில்லை. இன்னும் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

    தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,100 நிவாரணம் என்பது வருந்தத்தக்கது. எனவே நிவாரணத் தொகையை கூடுதலாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாய மற்றும் கல்வி, சுயஉதவிக்குழு கடன்கனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மறுபடியும் தென்னை விவசாயிகள் மரம் வைத்து காய்ப்புக்கு வருவதற்கு 5 ஆண்டு ஆகும். எனவே அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

    மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை. உடனடியாக வீடு இழந்தவர்கள் மற்றும் தென்னை, பயிர்களை இழந்தவர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணங்களை வழங்க மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #GRamakrishnan
    தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து இருக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார். #Sophia #TamilisaiSoundararajan
    கோவை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கோவையில் உள்ள மாவட்ட கட்சி அலுலவகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து வருகிற 18-ந் தேதி சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது.

    இதனை மார்க்சிஸ்டு ஆதரிக்கிறது. கோவை மக்களின் வாழ்வாதார பிரச்சனையை மையமாக வைத்து நடைபெறும் இந்த போராட்டத்தை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக என்.டி.சி. மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.


    தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபிகா தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய விவகாரத் தில் பழி வாங்கும் நோக்கில் மாணவிக்கு தீவிரவாதிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தமிழிசை புகார் அளித்துள்ளார். இது தமிழிசைக்கு அழகல்ல. அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

    இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் மாணவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது போல் தமிழிசை மீது மாணவி தந்தை கொடுத்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sophia  #TamilisaiSoundararajan
    அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    கம்பம்:

    மத்திய மாநில அரசுகளின் கொள்ளை விரோத செயல்களை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கடமலைக் குண்டு, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பிரசார இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். போராட்டக் காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். புதிதாக யாரையும் கைது செய்யக் கூடாது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இது கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சியாகும். அரசாங்கத்தை எதிர்த்து பேசினாலே கைது செய்யப்படுவது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. இதனை அரசு கைவிட வேண்டும்.

    மத்திய  அரசின் உத்தரவுக்கு பயந்து தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதனை கைவிட வேண்டும். மத்திய  அரசு விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை விலையை உற்பத்தி செலவுடன் 1 மடங்கு கூடுதலாக சேர்த்து நிர்ணயிக்க வேண்டும். நலிந்து வரும் சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மத்திய அரசு முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நிலக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிலக்கோட்டை வந்தார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,

    ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி. தற்போது மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இன்னலை தருகிறது.

    விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டது. மாட்டுஇறைச்சி கடை மூலம் ஏழை மக்களுக்கு எதிரான போக்கை கையாண்டு உள்ளது. 2015-ம் ஆண்டு தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 38 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டது. 2016-ம் ஆண்டு அது 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    வன்கொடுமை தடுப்புசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது அந்த சட்டத்தை நீர்த்துபோகசெய்யும். கல்விக்கடன் பெற்ற மாணவர் ஒருவர் ரூ.70ஆயிரத்தை திருப்பி கட்டவில்லை என வங்கி அதிகாரிகள் தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆனால் மத்திய அரசு முதலாளிகளுக்கு கோடிகணக்கில் கடன் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறது. எனவே இவர்கள் ஏழைகளுக்காக செயல்படவில்லை. முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளனர்.

    இதனை எதிர்ப்பதற்காகத்தான் போராடுவோம் தமிழகமே என குமரி மாவட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

    மாநில அரசு 800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடஉள்ளது. அதில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டத்தில் 72 பள்ளிகள் மூடப்பட உள்ளன. கேரளாவில் அரசு பள்ளிகளை மேம்படுத்தி கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி சவுந்திரராஜன், ஒன்றிய செயலாளர் காசிமாயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி உண்மை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #ThoothukudiFiring #CBI
    நித்திரவிளை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் இருந்து பிரசார பயணம் மேற்கொண்டு திருச்சி சென்றடைய முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி, எட்டயபுரம், கடலூர், திருவள்ளூர், வேலூர், நீலகிரி ஆகிய 6 இடங்களில் இருந்து இன்று இந்த பிரசார பயணம் தொடங்கியது.

    குமரி மாவட்டம் நித்திரவிளையில் இன்று காலை தொடங்கிய பிரசார பயணத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தை 6 மாதத்துக்கு முன்பு ஒக்கி புயல் தாக்கியபோது பலர் உயிரிழந்தனர். அப்போது இங்கு வேதனையான மனநிலையுடன் வந்தேன். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எந்தவித உதவியும் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம் கேரள மாநில முதல்வர், அங்கு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து நிவாரணங்களும் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

    மக்களை பாதுகாக்கும் அரசாக மத்திய அரசும், தமிழக அரசும் திகழவில்லை. உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி. தமிழக மக்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மூலம் இரண்டு பக்கமும் இடி விழுகிறது.

    குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் மோடி அரசு அதை செய்யவில்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கரும்பு, பருத்தி, நெல் போன்றவற்றுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. வரிக்கு பிறகு பெரும் பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் கடந்த 10 மாதத்தில் 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.


    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மக்கள் நலனை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் 13 பேர் சுட்டுக்கொல்லப்படும் நிலை ஏற்பட்டது. தமிழக அரசு கேட்டுக்கொண்டால் துணை ராணுவத்தை அனுப்புவதாக கூட மத்திய மந்திரி கூறினார். எனவே ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி உண்மை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #ThoothukudiFiring #CBI #GRamakrishnan
    ×