search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "regime change"

    மே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #gramakrishnan #marxistcommunist

    நெல்லை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாராளுமன்றத்துக்கு 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை 3-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 19-ந்தேதி 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து தொகுதி ஓட்டு எண்ணிக்கையும் மே 23-ந்தேதி நடக்கிறது.

    இதன் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மதுரையில் வாக்கு எண்ணிக்கை எந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அரசு அதிகாரி ஒருவர் சென்று ஆவணங்களின் நகல் எடுத்துள்ளார். பின்னர் மீண்டும் அங்கு கொண்டு வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. இதுபற்றி உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும்.

    தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. அவரை மாற்றி விட்டு வேறு அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளியே வரும். இந்த வி‌ஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்டு என்பது கண்துடைப்பு ஆகும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    தேவையெனில் வழக்கு தொடருவோம். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பிரதமர் மோடி பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு இடங்களிலும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் பழனி, மாநில நிர்வாகிகள் கருமலையான், சாமுவேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக லெனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள லெனின் சிலைக்கு ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  #gramakrishnan #marxistcommunist

    தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். #BJP #HRaja
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கடைத்தெரு பகுதியில் பா.ஜனதா சார்பில் ‘‘உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’’ மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி, மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணம் தி.மு.க.வும், அதற்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியும்தான். 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் அதற்கு போடப்பட்ட நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்து துரோகம் செய்தது தி.மு.க.தான். மக்களை ஏமாற்றும் கட்சியாகவும், துரோகியாகவும் உள்ள தி.மு.க. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் கம்யூ. கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் மூலம் தான் அரசியலில் இருப்பதற்கு தகுதியில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது தமிழகம் உலகிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக உள்ளது. 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு திராவிட கட்சிகளால் முன்னேறவில்லை. தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை.

    இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

    முன்னதாக கோவில் பத்து ஊராட்சியிலிருந்து மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் தொடங்கிய சைக்கிள் பேரணியை மாநில செயலாளர் வேதரத்தினம் தொடங்கி வைத்தார். #BJP #HRaja
    ×