என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அரசு"

    • டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
    • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    குறிப்பாக கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தே பணம் செலுத்த முடியும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

    • மாநிலம் முழுவதும் பெற்றோரிடம் பாசம் காட்டியதாக 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • குடும்ப மதிப்புகள் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு இந்த விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

    பெற்றோர்களை வயதான காலத்தில் பிள்ளைகள் கவனிக்காமல் தவிக்கவிடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்க மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    வயதான பெற்றோரை பாசம் காட்டி சிறப்பாக கவனித்துக் கொள்ளும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு மற்றும் விருது வழங்கப்படும் என அதில் கூறப்பட்டது.

    அதன்படி மாநிலம் முழுவதும் பெற்றோரிடம் பாசம் காட்டியதாக 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    சுதந்திர தினமான இன்று 199 பேருக்கு ஷ்ரவன் குமார் விருதுகள் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படட்டதாக தெரிவித்தனர். குடும்ப மதிப்புகள் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு இந்த விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

    • ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
    • மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

    நாகர்கோவில்:

    தமிழக மீனவர்கள் உலகின் பல்வேறு பகுதி களுக்கும் சென்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். குறிப் பாக வளைகுடா நாடுகளில் இவர்கள் அதிக அளவு மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இருந்து தனியார் ஏஜண்டுகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதன்படி ஈரான் நாட்டுக்குச் சென்ற மீனவர்கள், அங்குள்ள தீவுகளில் தங்கி ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.

    இதில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்புளி, இடிந்த கரை, கூத்தன்குழி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிக அளவு வெளிநாடுகளில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    ஈரான், இஸ்ரேல் நாடுகளிலும் அவர்கள் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறை முகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது அங்கு போர் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தங்கி உள்ள மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் இஸ்ரேல் நாட்டிலும் குமரி உள்ளிட்ட தமிழக மீனவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    எனவே அவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களை மீட்க மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும் என்று அவர்களும், மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

    மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி., தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை மீட்டது போல் மீனவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற இந்திய தூதரகம், மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    • நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.
    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.

    இதை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.

    அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.

    பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்.

    மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கும் அரிசி அளவுக்கு ஒரே ரசீது வழங்கப்பட்டு வந்த நிலையில் தனித்தனியாக ரசீது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 
    • ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    சென்னை:

    மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கும் அரிசி அளவுக்கு ஒரே ரசீது வழங்கப்பட்டு வந்த நிலையில் தனித்தனியாக ரசீது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    உதாரணத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி என்றால் அதில் மத்திய அரசு வழங்கும் 15 கிலோ அரிசிக்கு ரசீது தனியாகவும், மாநில அரசு வழங்கும் 5 கிலோ அரிசிக்கும் தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும். 

    ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    புதிய விதிமுறைகளை கடைபிடிக்காமல், பொருட்களை விநியோகம் செய்தால் அதற்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்களே செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை.
    • நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    திருச்சி:

    நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    நெல்லின் ஈரப்பதத்தை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தி அனுமதி வழங்கியுள்ளது வெறும் கண் துடைப்பு நாடகம். மேலும் இது காலம் கடந்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    கடற்பரப்பு அதிகம் கொண்ட டெல்டா மாவட்டங்களில் இயற்கை சீற்றங்கள் மற்றும் அதன் மூலம் பெய்யும் பருவம் தவறிய மழையும் எப்போதும் விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்தது கிடையாது.

    அதேபோல் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்தன.

    தற்போது நல்ல வெயில் அடித்து அனைத்து விவசாய நிலங்களிலும் அறுவடை என்பது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி தற்போதுதான் மத்திய அரசு அனுமதியே வழங்கியுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க நெல்லின் ஈரப்பதம் உள்ளிட்டவைகளை உறுதி செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான முன்மொழிவுகளை மாநில அரசு உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

    அதன் மூலம் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு சிறப்பு அதிகாரத்தை பெற முயற்சிக்க வேண்டும். அப்படி பெற்றால்தான் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற முடியும். நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    இரண்டு பருவ கால மழையை கொண்டுள்ள தமிழ்நாட்டில் வருங்காலங்களில் மாநில அரசே முடிவெடுக்கும் அதிகாரத்தை பெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
    • கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.

    புதுவையில் உள்ள ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு போதிய பேராசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் இல்லை என பலவித புகார்கள் எழுந்து வருகிறது.

    மேலும் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு தேவையான அல்ட்ரா சவுண்ட் பயன்பாடு குறித்த வகுப்புகள் எடுக்க பேராசிரியர்கள் இல்லை. இதுகுறித்து மாணவர்களும் புகார் தெரிவித்திருந்தனர்.

    இதனையறிந்த கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

    இதுகுறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் அல்ட்ரா சவுண்ட் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் நான் சிறப்பு நிபுணர்.

    எனவே அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான நேரத்தை ஒதுக்கி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளேன்.

    என் பணி புதுவை மக்கள் மீது அன்பு வைத்து செய்யும் பணி. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் தற்போது சொல்ல முடியாது. நான் தற்போது கவர்னர். அந்த பணியை செய்து வருகிறேன். நான் போட்டியிடுவதை ஆண்டவரும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வியாபாரிகள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
    • அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் நிலம் வைத்துள்ளனர். கடந்த 1953, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தினால் அவர்கள் இந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

    இதனால் நிலப்பதிவு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து மாநில அரசு இடுக்கி மாவட்டத்தில் 1953, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த மசோதாவை கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். கவர்னரின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு, இந்திய கம்யூனிஸ்ட்டு கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (9ந் தேதி) இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும். வாகன போக்குவரத்தும் நிறுத்தப்படும். ஆனால் ஐயப்பபக்தர்கள் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமலேயே உள்ளது.

    மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது என்று பலமுறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் மத்திய நிதி மந்திரி இதற்கு அவ்வப்போது புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார். இந்த சூழலில் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் அவ்வப் போது பதில் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அதில் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு என்ன?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தொகுப்பு அனுப்புமாறு தமிழக அரசை கவர்னர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடிதம் கவர்னரின் செயலாளர் வழியாக தலைமைச் செயலாளருக்கு கடந்த 8-ந் தேதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    இதன்படி விவரங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முழுமையான விவரங்கள் கிடைக்கும் போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப் பட்டுள்ளதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதா? என்கிற விவரம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே இதற்கு முன்பு பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்த போது கொரோனா காலத்தில் செலவழித்த தொகை பற்றி கணக்கு கேட்டதாகவும் எனவே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மாநில அரசு சொல்வதை கேட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
    • பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும்.

    கோவை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி ஒரே மாதத்தில் 2-வது முறையாக தமிழகத்துக்கு வருகிறார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்துக்கும் அவர் செல்கிறார். இது தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது.

    ராமர் அனைவருக்கும் பொதுவானவர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து முக்கிய நபர்கள் அயோத்திக்கு செல்கின்றனர். அரசு விடுமுறையை அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்கின்றன. தமிழ்நாட்டில் விடுமுறை இல்லை என்றாலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பெரும் விழாவாக மக்கள் கொண்டாட வேண்டும்.

    அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மசூதியை இடித்து கோவில் கட்டியதாக கூறும் உதயநிதி வரலாற்றை படிக்க வேண்டும். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, வழிகாட்டுதலின் படிதான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. அதனால் இடிப்பதை பற்றி பேச உதயநிதிக்கு தகுதி இல்லை.

    மாநில அரசு சொல்வதை கேட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியாது. அரசியலமைப்புக்கு உட்பட்டு தான் கவர்னர் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது. வரம்பு மீறி செயல்பட்டதாக சொல்லவில்லை.


    கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் தான் 2ஜி வழக்கு. அந்த வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்று ஆடியோ வெளியிட்டு இருக்கிறோம். அடுத்த வாரத்துக்குள் மேலும் 9 ஆடியோக்கள் வெளிவரும். அதன்பின்பு விரிவாக பேசுகின்றோம். இந்த ஆடியோக்களுக்கு தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கையாண்டு இருக்கின்றனர்? என்பதை மக்கள் பார்க்க வேண்டும். இந்த ஆடியோக்களை பொய் என்று தி.மு.க. சொல்லட்டும் பார்க்கலாம்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும். மீண்டும் பிரதமராக மோடி நிச்சயம் வருவார். தேர்தல் கூட்டணி குறித்து பாராளுமன்ற குழு பார்த்து கொள்வார்கள். 32 மாத ஆட்சியில் தி.மு.க. எதையும் மக்களுக்கு செய்யவில்லை. மாநில உரிமையை மீட்டெடுப்பது என்பது வெறும் வாய்ச்சொல்.

    எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை. கட்சியை வளர்ப்பது, தலைவர்களை உருவாக்குவது மட்டுமே என் முதன்மையான பணி. பா.ஜனதாவில் முதலமைச்சராக என்னை விட முழு தகுதி இருக்க கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பா.ஜனதாவில் சிங்கிள் லீடர் என்பதற்கு இடமே இல்லை. மற்ற கட்சிகளை போல முழு கட்சியும் ஒற்றை தலைமை பின்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

    இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

    அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

    • மருத்துவம் மற்றும் விளையாட்டு, அயல்நாட்டினரை ஈர்க்கும் காரணங்களில் முக்கியமானவை
    • 2019ல் 10.93 மில்லியன் அயல்நாட்டினர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர்

    இந்தியர்கள், தொன்று தொட்டு ஆன்மிக காரணங்களுக்காக நாடு முழுவதும் சுற்றுலா செல்வது வழக்கம்.

    1947 சுதந்திரம் அடைந்த பிறகு அயல்நாட்டினரை ஈர்க்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்க தொடங்கின.

    சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஜனவரி 25, "தேசிய சுற்றுலா தினம்" (National Tourism Day) என கொண்டாடப்படுகிறது.

    சுற்றுலா துறையை மேம்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியில் சுற்றுலாவின் பங்கை மக்களுக்கு உணர்த்தி சுற்றுலா தலங்களையும், உள்ளூர் மக்களையும் ஒருங்கிணைத்து துறையை முன்னெடுத்து செல்லவும், இந்நாளில் நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


    இந்தியாவின் பரந்து விரிந்திருக்கும் கலாச்சார பன்முகத்தன்மை, உணவு வகைகள், வரலாறு ஆகியவற்றின் பெருமைகளை அயல்நாட்டினர் அறிந்து கொண்டு சுற்றுலாவிற்கு அவர்களை ஈர்க்கும் வகையில் இன்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    கலாச்சார, இயற்கை, பாரம்பரியம், கல்வி மற்றும் தொழில் என பல வகை சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு  ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.

    இதை தவிர, விளையாட்டு மற்றும் மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்திய சுற்றுலா பெயர் பெற்றது.

    இந்திய பணியாளர்களில் 15 சதவீதம் பேர் சுற்றுலா துறையில் உள்ளனர்.

    ஒவ்வொரு வருடமும் தேசிய சுற்றுலா தின கருப்பொருள் வேறுபடும்.

    2024ல், "நீடித்து நிற்கும் பயணங்கள், நீண்டகால நினைவுகள்" (Sustainable Journeys, Timeless Memories) என்பது கருப்பொருள்.


    உலக புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகையின் "உலகின் 50 அழகான நாடுகள்" பட்டியலில் இந்தியாவிற்கு 7-வது இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதம் சுற்றுலா துறையில் இருந்து வருகிறது.

    2019ல், 10.93 மில்லியன் என இருந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் குறைந்திருந்தது.

    பிறகு, அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இது அதிகரிக்க தொடங்கியது.

    2023 அக்டோபர் வரையிலான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×