என் மலர்
நீங்கள் தேடியது "கவர்னர்"
- நாகாலாந்து கவர்னராக பதவி வகித்த இல.கணேசன் காலமானார்.
- அவரது மறைவுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சென்னையில் இல.கணேசன் உடல் 42 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் சேர்த்து வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
- தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும்.
- பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜையை ஒட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் நிருபர்களை சந்தித்த கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சுதந்திரப் போராட்ட வீரர்கள் 268 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிட்டு அவர்களை கவுரவப்படுத்தி வருகிறார்.
தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவில் கவுரவம் செய்யவே இங்கு வருகை தந்தேன்.
பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை. காவி என்பது மண்ணுக்கு சொந்தமானது. இப்போது மட்டுமல்ல வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல. அது பற்றற்ற தன்மையை குறிக்கும் நிறம்.
அறநிலையத்துறை அமைச்சர் கூட காவி அணிந்துதான் கோவிலுக்கு செல்கிறார். மாநில முதலமைச்சர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளது. அதனை வைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் அவர்கள் தலையிடக்கூடாது. மாநிலத்தில் முதல் பிரஜையாக செயல்படுபவர் கவர்னர் தான்.
நான் 4 மாநிலங்களில் கவர்னராக இருந்திருக்கிறேன். 2 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தான். ஆனால் அங்கு இது போன்ற எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்பட வில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.
கேரளா அரசு தொடர்ந்து வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அதற்கான தீர்ப்பை வழங்கி உள்ளது. தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் அதிகாரம் என இவர்கள் கூறி வருகின்றனர். மாநில கவர்னர்களின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் முதலமைச்சருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா?. பிரதமருக்கு முழு அதிகாரம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி என்றால் எதேச்சதிகாரமாக அவர் செயல்பட முடியுமா?. மாணவர்கள் வன்முறைக்குள் செல்லக்கூடாது.
ராஜீவ் காந்தியை கொன்றவரோடு கட்டியணைத்து முதலமைச்சர் நட்பு பாராட்டுகிறார். அது எந்த வகையில் சரியானது. வன்முறை, பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னர் கைலாஷ்நாதன் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியடைந்தார்.
- முதலமைச்சர் ரங்கசாமி கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு செல்ல மறுத்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் கவர்னர் கைலாஷ் நாதனுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
தற்போது சுகாதாரத் துறையில் இயக்குனர் நியமனத்தில் இது வெட்டவெளிச்சமானது. முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்காமல் கவர்னர் கைலாஷ்நாதன் தன்னிச்சையாக முடிவு செய்து சுகாதாரத்துறை இயக்குனராக டாக்டர் செவ்வேலை நியமித்தார். இதனால் கவர்னர் கைலாஷ் நாதன் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியடைந்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு செல்ல மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு சத்துணவு பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று சத்துணவு பைகளை வழங்கினார்.
விழா முடிவில் கவர்னரிடம், முதலமைச்சருக்கும் தங்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறதா.? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. அப்படி ஒன்றும் இல்லை என அவர் பதில் அளித்தார்.
- முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார்.
புதுச்சேரி:
பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி இந்தியன் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பயனாளிகள் முத்ரா வங்கிக் கடன் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வந்ததாக கூறினர். மேலும் குறைந்த வட்டியில் தொழில் முன்னேற்ற ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி உதவி வருவதையும் உருக்கமாக எடுத்துக் கூறினர். முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது முத்ரா கடன் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது ரூ.40 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த திட்டம் அதன் இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய படி கவர்னர் கைலாஷ்நாதன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் கண் கண்ணாடியை கழற்றி விட்டு கண்ணீரை துடைத்தார்.
தொடர்ந்து புதிய பயனாளிகளுக்கு முத்ரா கடன் வழங்குவதற்கான ஆணைகளை கவர்னர் வழங்கினார்.
- சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்துள்ளார்.
- பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒரு வருடம் 3 மாதம் கழித்து நிராகரிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றம் முறையீடு.
கேரள மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்த பெஞ்சில் இருந்து நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்விடம் மனுதாக்கல் செய்தது.
இதற்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா "குறிப்பிடப்பட்ட மனுவை மூவ் செய்யுங்கள். நான் பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கே.கே. வேணுகோபால் "நிலுவையில் உள்ள மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் அனுப்புகிறார், குடியரசுத் தலைவர் அதை ஒரு வருடம் 3 மாதங்களுக்கு வைத்திருக்கிறார். இரண்டு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக நேற்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது மிக மிக அவசரமான விசயம்" எனத் தெரிவித்தார்.
இதே விவகாரத்தில் ஜே.பி. பர்திவாலா தலைமையிலான பெஞ்ச் முன் தமிழக தாக்கல் செய்த மனு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான், இரண்டு வருடம் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார்.
- தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படவில்லை.
வேலூர் :
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையை தகர்க்க கூடிய ஒன்று. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர் கவர்னர். மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தான் கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடைவெளி ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக இணைப்பு பாலமாக இருக்க வேண்டியவர் கவர்னர். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் கவர்னரே தவிர, கவர்னர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டதல்ல மாநில அரசு. இதை உணராமல் தமிழ்நாடு கவர்னர் மட்டுமல்ல. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து கவர்னர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றனர்.
நளினி உள்ளிட்ட 6 பேரை சட்டப்படி விடுதலை வழங்குவதற்கு முகாந்திரம் இருந்ததாலேயே சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. இதில், விமர்சிக்க ஒன்றும் இல்லை. ஆனால் மத்திய அரசு 6 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையில் அல்லது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினையில் ஒரே மாதிரியான அணுகுமுறையை தான் கையாள்வார்கள் என்பதற்கு சீராய்வு மனு ஒரு சான்று. இந்த சீராய்வு மனுவால் இவர்கள் விடுவிக்கப்பட்டதை தடுக்க முடியாது.
அ.தி.மு.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் அவர் சரியாக அரசியல் செய்கிறார் என்று அர்த்தம். ஆனால் பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று அவர் கூறினால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார் என்று கருத வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கரைய விட்டு விட்டார். கைவிட்டு விட்டார் என்று எண்ண தோன்றுகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க. ராட்சசன் போன்று வளர்ந்து வருகிறது என்று நகைச்சுவையாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தமிழக கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
- சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சிறப்புரைஆற்றுகிறார்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தமிழக கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மேல்கோட்டை ஸ்ரீயதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கினார்.
இதில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
மாலை 6 மணிக்கு சுவாமி ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பகவத் ராமானுஜர் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடக்கிறது. 2-வது நாளான நாளை (25 -ந்தேதி) காலையில் ராமானுஜர் மாநாடு நடக்கி றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு ப்ரதிஷ்டாபனஹோமம், ராமானுஜநூற்றந்தாதி பாராயணம் போன்றவை நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி, யும்10மணிக்கு ஜீயர்சுவாமிகளால்ராமானுஜாசார்யாரு க்கு புஷ்பாஞ்சலி யும் 10.30 மணிக்கு ஜீயர் சுவாமிகளின் அருளுரையும் 11.15 மணிக்கு ஜீயர் சுவாமி களை கவுரவிக்கும்நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 12மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டு உள்ள ராமானுஜர் சிலை திறப்பு விழா நடக்கிறது.
இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சிறப்புரைஆற்றுகிறார். தொடர்ந்து யதுகிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் அருள் உரையும் பிரசாத விநியோகமும் நடக்கிறது.
- சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் நமது நாட்டில் பல்வேறு பிரிவினைகள் இருந்தன.
- பாரத தேசத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றே.
சென்னை :
காசியில் நடந்த தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி அனைவரையும் வாழ்த்தி பேசியதாவது:-
காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கலந்துகொண்ட அனைவரும், அடுத்த 25 ஆண்டுகளில் விஷ்வ குரு என்ற இலக்கை அடைவதற்காக பிரதமர் கொண்டுவந்துள்ள தொலைநோக்கு பார்வையை எடுத்துச்செல்ல வேண்டும். காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அரசு எந்திரத்துடன் இணைந்து இந்த நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்தியிருக்கிறீர்கள்.
சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் நமது நாட்டில் பல்வேறு பிரிவினைகள் இருந்தன. அதனால் பிரச்சினைகளும் எழுந்தன. ஆனால் தற்போது பாரதம் என்ற ஒரே பார்வையில் ஒரே குடும்பமாக உணர்கின்றனர்.
தமிழகத்தில் நிலவும் சில தவறான மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகளை ஒழிக்க வேண்டும். சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய கல்வி உள்ளிட்ட அம்சங்களை தங்களுடைய சொந்த காரணங்களுக்காக மறுக்கும் அரசியல், வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.
இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் நாம் அதை பல மாகாணங்கள் சேர்ந்த அமெரிக்கா தேசம் போல சிலர் பார்க்கிறார்கள். அது தவறு. இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் சில அம்சங்களை தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது. இது தொடர்பாக தவறான கருத்துகள் எழுதப்பட்டு உள்ளன. இதில் உண்மை வெளிவர வேண்டும். பாரத தேசத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றே. தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன், சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம், பேராசிரியர் காமகோட்டி ஆகியோர் பேசினர். கவர்னரின் முதன்மைச்செயலாளர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- தமிழர்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என பசும்பொன் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆளுநர் மாளிகையை இழுத்து பூட்ட வேண்டும் என்றார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கவர்னராக இருக்கும் ரவி தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். நேற்று சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் தமிழக அரசு கொடுத்த உரையை முறையாக வாசிக்காமல் சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை கவர்னர் ஏற்படுத்தி இருக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
கவர்னரின் இந்த மக்கள் விரோத செயலை கருப்பு சட்டை வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். அவருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் வரலாறை சரியாக புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழக அரசிற்கும் இடையூறுகளை ஏற்படுத்தி வரும் கவர்னர் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செய்ய விரும்பினால் அவர் பா.ஜ.க.வின் கமலாலயத்தில் இருந்து அரசியல் செய்யட்டும். ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மக்களிடையே பிரிவினை வாதத்தையும், அரசுக்கு எதிரான நடவ டிக்கைகளிலும் ஈடுபடுவதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு எத்தனையோ சான்றோர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் வீரத்தையும் வரலாற்றையும் பாதுகாத்துள்ளார். இதுபோன்று எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தின் வரலாறுகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அவமா னப்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கவர்னர் ரவி வாழ தகுதியற்றவராகி விட்டார். ஆளுநர் மாளி கையை உடனடியாக பூட்ட வேண்டும்.அவரை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதுதான் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தலைமை தாங்கினார்.
- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, சட்டத் துறை தலைவர் மூத்த வக்கீல் இரா. விடுதலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
சென்னை:
தி.மு.க. சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும், கவர்னரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்தது. தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தலைமை தாங்கினார்.
இணைச் செயலாளர்கள் பரந்தாமன் எம்.எல்.ஏ., மணிராஜ், தண்டபாணி, ராதாகிருஷ்ணன், அருள் மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் வரவேற்றார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, சட்டத் துறை தலைவர் மூத்த வக்கீல் இரா. விடுதலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் துணைச் செயலாளர்கள் சந்துரு, பச்சையப்பன், பட்டி ஜெகநாதன், வைத்தியலிங்கம், தினேஷ் மற்றும் தலைமை கழக வழக்கறிஞர்கள் சூர்யா வெற்றி கொண்டன், கவி கணேசன், எம்.எல்.ஜெகன், கோ.மறைமலை,சென்னை மாவட்ட அமைப்பாளர்கள் ரகு, பாபு, மருது கணேஷ், கணேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் துரை கண்ணன் நன்றி கூறினார்.
- விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு கழக செயலாளர் ஆர்.பி.கிஷ்ணமாச்சாரி சமூக சேவைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
- குடியரசு தினத்தன்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மேற்கண்ட விருதுகளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
சென்னை:
சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய விருது பெறுவோர் பெயர்களை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார்.
இதன்படி விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு கழக செயலாளர் ஆர்.பி.கிஷ்ணமாச்சாரி சமூக சேவைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறுதுளி என்ற அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விருதுகளை பெறுவோருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மேற்கண்ட விருதுகளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
- நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.
- இணக்கமாக செல்ல வேண்டும் என்பதால் கவர்னரை சந்திக்க காத்திருக்கிறோம்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு கையடக்க கணினியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. மத்திய ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விளக்கங்களை கேட்டுள்ளது இன்னும் இரண்டு தினங்களில் விளக்கம் அளிக்கப்படும்.
மருத்துவத்துறையின் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.1,941 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டமைப்பு பணிகளை அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த டிசம்பர் 31-ந்தேதியோடு டாக்டர் எம்.ஜிஆர் மருத்துவமனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு முடிவு பெற்றது. கடந்த ஜனவரி 4-ந்தேதி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் அடங்கிய தேடுதல் குழு உருவாக்கப்பட்டது. கவர்னரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
அந்தக் குழு அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் கவர்னர் தான் இனி அந்த குழுவிற்கு வழிகாட்ட வேண்டும்.
கவர்னரின் சார்பில் அந்தக் குழுவிற்கு அலுவலர் ஒருவரை நியமிப்பார்கள். அந்த பணிகள் முடிந்த பிறகு அந்த தேடுதல் குழுவானது 3 பேர்களை தேர்ந்தெடுத்து கவர்னரிடம் வழங்குவார்கள். அந்த மூவரில் ஒருவரை கவர்னர் விரைவில் தேர்ந்தெடுப்பார் என்று கருதுகிறோம்.
தற்போது மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனை சேவைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம். கவர்னரை சந்திப்பது விதி அல்லது மரபு தான். ஆனால் அவருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பதால் அவரை சந்திக்க காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






