search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Governor"

    • வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும்.
    • நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    புதுச்சேரி:

    மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 2-வது சர்வதேச ஆன்மிக மாநாடு ஆரோவில் யூனிட்டி மையத்தில் நடந்தது.

    இந்த மாநாட்டில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாழ்வில் அமைதி பல நேரங்களில் ஒரு சக்தியை தருகிறது. அன்னை, அரவிந்தர் அதனை கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் அமைதியையும், வலிமையையும் நாம் பெற்று வருகிறோம்.

    கடலில் அலையானது எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த முடியாது. அதே போல வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும். அதனை பாறைகள் போல் உறுதியாக எதிர்கொள்ளவேண்டும்.

    தற்கால சூழலில் தற்கொலைகள் அதிகம் நிலவுகிறது. அவர்களால் சிக்கல்களை எதிர்கொள்ள முடியவில்லை. முன்னோர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

    காலை தியானத்தோடு யோகா பயிற்சி செய்து வருவதன் மூலம் மிகப்பெரும் மனசக்தியை அடைய முடியும். அதன் மூலம் எத்தகைய சிக்கல்களையும் உங்களால் சமாளிக்க முடியும். இதைத் தான் ஆன்மிகம் சொல்கிறது.

    மகாபாரதம், அரவிந்தர், அன்னை ஆகியோரின் கதை, பேச்சுக்களை கேட்டால் தன்னம்பிக்கை, சுயகட்டுப்பாடு பெற முடியும். அதன் மூலம் நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.
    • மஹன்யா ஸ்ரீ ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    ஓசூர்:

    அயோத்தியில் ராமர் கோவில், மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனர்.

    இந்த நிலையில், விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவி மஹன்யாஸ்ரீ என்பவர், ராமர் பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார். இந்த பாடலை, தெலங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மாணவி மஹன்யா ஸ்ரீ மற்றும் அவரது பெற்றோர் உடன் இருந்தனர்.

    அப்போது, அங்கிருந்த டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.

    மேலும் மஹன்யா ஸ்ரீயை மிகவும் பாராட்டினார். மஹன்யாஸ்ரீ ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியில் வசித்து வரும் சிவராமன், ஜெயப்ரியா தம்பதியரின் மகள் ஆவார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டப்பட்ட விடுதி கட்டிடம், நீதிபதிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
    • கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கவர்னர் மாளிகை இடம்மாறும் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள 200 ஆண்டுகால பழமையான பிரெஞ்சு கட்டிடத்தில் கவர்னர் மாளிகை செயல்பட்டு வருகிறது.

    பழமையான பாரம்பரிய கட்டிடம் 2 நூற்றாண்டுகளை கடந்து விட்டதால் சேதம் அடைந்தது. இதை அவ்வப்போது சீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் கவர்னர் மாளிகையின் சில பகுதிகளின் மேல்பகுதிகள் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மாளிகையை காலி செய்தால்தான் முழுமையாக சீரமைக்க முடியும் என அரசின் பொதுப் பணித்துறை தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய புதிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    கடற்கரை சாலையில் பழமை மாறாமல் புதிதாக கட்டப்பட்ட மேரிஹால், பழைய சாராய ஆலையில் கட்டப்பட்ட விடுதி கட்டிடம், நீதிபதிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பான கோப்பும் கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய கவர்னர் தமிழிசை ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த 3 இடத்தில் எந்த கட்டிடத்தை அவர் தேர்வு செய்துள்ளார் என்ற விவரம் வெளியிடப் படவில்லை.

    இருப்பினும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கவர்னர் மாளிகை இடம்மாறும் என தெரிகிறது.

    • 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
    • தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    புதுச்சேரியில் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். ஸ்கில்டா மூலமாக 4,000 தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.

    இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.

    இது மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாக புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    • பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
    • மத்திய அரசு கொண்டுவர போகும் திட்டங்களால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள்.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


    காந்திமதி அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு கோவிலை சுற்றி வந்து நெல்லையப்பர் சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது கோவிலை சுற்றினாலே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் எதுவும் வராது என்று அவர் கூறினார். தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்ற சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் இன்று மக்களோடு மக்களாக முகக்கவசமின்றி சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. அதிலும் நான் மருத்துவராக இருப்பதால் நம் நாட்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.

    பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த பயணத்தின் போது இந்தியாவின் பெருமை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் தலைவர் உலகத் தலைவராக மாறி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இதுவரைக்கும் இல்லாத வளர்ச்சியை புதுச்சேரி பார்த்து வருகிறது. 13 வருடம் கழித்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கின்றோம். இதற்கு முன்பை விட ரூ. 2 ஆயிரம் கோடி அதிகமாக கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல பல புதிய திட்டங்களை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நிறைவேற்றி இருப்பதாக பட்டியல் போடுகிறார். இதெல்லாம் ஆளுனரின் ஒத்துழைப்பால்தான் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் இன்னும் வாக்குறுதியாகவே உள்ளது. நாங்கள் 65 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உடனடியாக கொடுத்துவிட்டோம். இதெல்லாம் ஆளுனரும், முதல்-மந்திரி இணைந்து பணியாற்றியதால்தான் நடந்தது.

    கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நாங்கள் அதை முற்றிலும் புறந்தள்ளவில்லை. அவர்களை நிரந்தரமாக்க முடியாது என்பதால் 3 மாதம், 3 மாதமாக பணி நீட்டிப்பு செய்கிறோம். இன்னும் சொல்லப்போனால் உயர்நீதிமன்றமே நேரடி நியமனத்திற்கு தடை உட்பட சில தடைகளை விதித்து இருக்கிறது. அதை பின்பற்றுவதில் தான் பிரச்சினைகள் வருகிறதே தவிர, இதில் ஆளுனர் அழுத்தம் இல்லை. மற்றுபடி புதுச்சேரி முதல்-மந்திரிக்கும் எனக்கும் உள்ள பிரச்சனையே அண்ணன்-தங்கை பிரச்சினைதான். வேறு எந்த பிரச்சனையும் கிடையாது.

    அதிகாரிகள் தரப்பில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வேகம் குறைவாக இருக்கலாம். நான் இதுவரை எந்த கோப்புகளையும் கையெழுத்திடாமல் கிடப்பில் வைக்கவில்லை. கிட்டத்தட்ட 1500 கோப்புகளை கையெழுத்திட்டேன். மார்ச் 31-ந் தேதி முழு நிதிநிலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இரவு 11.30 மணி வரை கையெழுத்திட்டேன். அதனால் தான் பிரதமர் பெஸ்ட் புதுச்சேரி என்றார். நான் அதிகாரிகளை அழைத்து பணிகளை துரிதப்படுத்த பாஸ்ட் புதுச்சேரி என்றேன்.

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தென் பகுதிக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்வட்ட பாதையை தூத்துக்குடி துறைமுக தேசிய நெடுஞ்சாலையோடு இணைப்பது, தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் என பல திட்டங்கள் வரப்போகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள். அதுமட்டுமல்ல தூத்துக்குடி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

    நான் தூத்துக்குடியில் போட்டியிட்ட போது புல்லட் ரெயில் விடப்போவதாக பேசினேன். அப்போது சாதாரண ரெயிலே இல்லை புல்லட் ரெயில் எப்படி கொண்டு வருவீர்கள் என்றார்கள். அது கனவு. தென்பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எனது கனவு தான் அது. ஆனால் தற்போது புல்லட் ரெயில் விடுவது தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

    • திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நாளை மங்கள இசையுடன் தொடங்குகிறது.
    • புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    திருவையாறு:

    திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 6 மணிக்கு 176-வது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது.

    தியாகப்பிர்ம்ம சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். விழாவை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து 10-ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

    விழா பந்தலில் காலை 8 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 மணிக்கு ஆராதனை விழா பந்தலில் 500-க்கு மேற்பட்ட கர்நாட இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தனம் கீர்த்தனைகளை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    அதை தொடர்ந்து 11.30 மணிக்கு சோபனா விக்னேஷ் பாடுகிறார். இரவு 10.30 க்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
    • கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.

    புதுச்சேரி:

    தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    நேரு இளையோர் மையம் சார்பில், புதுவை காலாப்பட்டு பல்நோக்கு சமூக சேவை மையத்தில் அரசு சாரா அமைப்பு மேலாண்மை, ஆதார மேம்பாடு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 100 படுக்கைகளுடன் போதை மறு வாழ்வு மையம் அமைய உள்ளது.

    அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தமிழக கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது.

    கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.

    கவர்னர் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல.

    சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவையில் முதல் மந்திரிக்கே அதிக அதிகாரம் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக கவர்னர் கிரண் பேடி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு 30-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.
    புதுடெல்லி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தும், யூனியன் பிரதேசங்களில் உள்ள கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிகளின் அதிகார வரம்பை மீறி செயல்பட முடியாது என முன்னர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது.



    இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அலுவல்கள் தொடர்பாக முடிவெடுக்கும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இருந்த கவர்னருக்கான அதிகாரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் முதல் விசாரணை வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
    புதுச்சேரி கவர்னருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது. #KiranBedi
    புதுடெல்லி:

    புதுச்சேரியில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அவரது ஒட்டுமொத்த செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இருப்பதாகவும் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், ‘புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், அரசு ஆவணங்களை கேட்பதற்கும் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது’ என்று மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு சிறப்பு அதிகாரம் இல்லை எனவும், அவர் மந்திரிசபை முடிவு அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

    மேலும் முதல்-அமைச்சரின் அதிகாரத்தில் துணைநிலை கவர்னர் தலையிட முடியாது என உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்துசெய்வதாகவும் கடந்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று ஆஜரானார்.

    அப்போது அவர், துணைநிலை கவர்னரின் சிறப்பு அதிகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினால் புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து விடும் நிலை ஏற்படும் என்றும் அதனால் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையீடு செய்தார்.

    ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். பின்னர் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை அணுகுமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  #KiranBedi

    தலைவர்கள் போராடி புதுவைக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தது அடிமையாக இருக்க அல்ல என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு கம்பன் கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாட்டிலேயே டெல்லியும், புதுவையும்தான் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசங்களாகும். டெல்லியை விட புதுவைக்கு நிலம், நிர்வாகம், நிதி, சட்ட ஒழுங்கு என 4 அதிகாரங்கள் பிற மாநிலங்களைப்போல கொடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் நமது உரிமைகளை வலியுறுத்தாததால் நமது ஆட்சியின் உரிமைகளை நமக்கு தெரியாமல் சிலர் திருத்தியுள்ளனர். இதை முறியடிக்க மாநில அந்தஸ்து தேவை.

    டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது, அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அரசு எடுக்கும் முடிவுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    அரசியலமைப்பு பிரிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இந்த தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் டெல்லிக்கு அளித்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கவர்னர் கிரண்பேடி தொல்லை கொடுத்து வருகிறார். மாநில நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டியும் வருகிறார்.

    தலைவர்கள் போராடி புதுவைக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தது அடிமையாக இருக்க அல்ல. நமது மாநிலத்திற்கு பிரச்சினை என்றால் யார் இடையூறாக இருந்தாலும் அவர்களை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

    மாநில சட்டசபைகளை மத்திய பா.ஜனதா அரசு மதிக்கவில்லை. தமிழகத்திலும், புதுவையிலும் இரட்டை ஆட்சி நடக்கிறது. இதை எதிர்த்து போராடும் துணிவில்லாமல் தமிழக அரசு உள்ளது.

    ஆனால் நாராயணசாமி தலைமையிலான அரசு எதிர்த்து போராடுகிறது. கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் திரும்பிச் செல்லமாட்டார்.

    அவர் விலகிச்செல்ல 5 மாநில தேர்தலில் மணி அடிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டு பிரதமர் மோடிக்கு விடை கொடுக்கும் ஆண்டாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். #narayanasamy 

    நிதி விவகாரத்தில் புதுவை முதல்-அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால், கவர்னர் கிரண்பேடியின் நிதி அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.#GovernorKiranBedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி அளித்து வருகிறார்.

    திட்டங்களில் நிதி தொடர்பான கேள்வி எழுப்பி கோப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார். இதனால் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சமீபத்தில் வாரியம், கழகம், நிறுவனம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதிலும் கவர்னர் தலையிட்டார்.

    வழக்கமாக பட்ஜெட்டில் இவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி அவற்றுக்கு சென்றுவிடும். இதுகுறித்தும் கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளதால் அரசு நிறுவன, கழக, வாரிய ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ஏற்கனவே கவர்னருக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது.


    எனவே முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அமைச்சரவைக்கும் கூடுதலான நிதி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதன்படி புதுவை அரசு செயலர்களுக்கு ரூ.2 கோடிக்கு கூடுதலாகவும், நிதித்துறைக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடி வரையிலும், நிதி மந்திரிக்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரையிலும், அமைச்சரவை பரிந்துரை செய்யும் திட்டங்களுக்கு நிதி நிலைக்குழுவுக்கு ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடி வரையிலும், அமைச்சரவைக்கு ரூ.100 கோடியில் இருந்து திட்டங்களுக்கான மொத்த செலவு வரையிலும் நிதி அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயண சாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். டெண்டர் வழங்குவதற்கும் அமைச்சரவைக்கும், நிதி மந்திரி ஆகியோருக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையத்தில் தற்போது மத்திய உள்துறையின் சார்பு செயலர் சஞ்சய்குமார் புதுவை தலைமை செயலாளர் அஸ்வினி குமாருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் புதுவை முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்தை முழுமையாக பரிசீலனை செய்தோம். இதில் முதல்-அமைச்சர் கூடுதலாக கோரியுள்ள நிதி அதிகாரம் மாநில அரசை சுமூகமாக நடத்த அவசியம் தேவை என கருதுகிறோம்.

    எனவே கவர்னரின் நிதி அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரித்து பரவலாக்குவதும் அவசியம். எனவே முதல்-அமைச்சர் கோரியுள்ள அந்த நிதி அதிகாரத்தை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து தலைமை செயலாளர் இந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்து ஒரு கோப்பாக தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பவுள்ளார்.

    இதுகுறித்து புதுவை மாநில அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதத்தை தலைமை செயலாளர் அஸ்வினி குமார், கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி வைப்பார். மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் என்பதால் கவர்னர் கிரண்பேடி கண்டிப்பாக நிதி விவகாரங்களில் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

    இதன் மூலம் நிதி விவகாரத்தில் கவர்னர் இதுவரையில் இருந்து வந்த அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #PuducherryGovernor #KiranBedi #GovernorKiranBedi
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். #PuducherryGovernor #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) கவர்னர் கிரண்பேடி உழவர்கரை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்வார்.

    இருந்தபோதிலும் வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும்.


    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டும். கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    முப்படையை சேர்ந்த வீரர்கள் கேரளாவில் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் அனைவரும் கேரளாவை நேசிப்பதால் நம்மால் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

    தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு கவர்னர் கிரண்பேடி பதிலளிக்கும் போது, புதுவையில் முதலில் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை மதிக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கு தானாக விழிப்புணர்வு ஏற்படும் என்றார். #PuducherryGovernor #Kiranbedi
    ×