என் மலர்
நீங்கள் தேடியது "Puducherry Governor"
- முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
- முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது.
அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் அதனை மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசுகளை எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த செலவிலேயே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கோப்புக்கும் கவர்னர் கைலாஷ்நாதன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்காததே கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமானது என்றாலும் இருவருக்கும் உள்ள மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
- கவர்னர் கைலாஷ்நாதன் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
புதுச்சேரி:
கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்டு 14-ந் தேதி பிரிவினை கொடுமைகளின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு, பிரிவினையின்போது நடந்த கலவரத்தின் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது அவரை தியாகிகள் சந்தித்து, தங்களுக்கு வழங்கப்படும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தங்களது வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்ட கவர்னர் கைலாஷ்நாதன் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கு உயர்த்திய உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
- பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
- புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி நியமனங்கள் செய்யப்படவில்லை.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு துணை தாசில்தார், மருந்தாளுநர், சுகாதார உதவியாளர், வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நிரப்ப விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. ஆனால் எந்த அறிவிப்பிலும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
இதேபோல் சுகாதார துறையின் மருந்தாளுநர் பதவிக்கு வயது வரம்பில் தளர்வு கேட்டு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக புதுவையில் அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒருமுறை வாய்ப்பாக வயது தளர்வு தர வேண்டும்.
ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று எங்களை நேரடி நியமனத்திற்கான போட்டி தேர்வினை அனுமதிக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கு, கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஞானசேகரன் ஆஜரானார்.
அப்போது கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு நேரடி நியமனம் நடத்தப்படாத நிலையில், இவர்களுடைய கோரிக்கையை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வக்கீல் அந்த மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை 2 வாரத்திற்குள் கவர்னர் பரிசீலனை செய்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டு, வழக்கை வருகிற 28-ந் தேதி ஒத்தி வைத்தனர்.
புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது. எனவே தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்காமல், கவர்னர் 2 வாரத்திற்குள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார்.
புதுச்சேரி:
பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி இந்தியன் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பயனாளிகள் முத்ரா வங்கிக் கடன் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வந்ததாக கூறினர். மேலும் குறைந்த வட்டியில் தொழில் முன்னேற்ற ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி உதவி வருவதையும் உருக்கமாக எடுத்துக் கூறினர். முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது முத்ரா கடன் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது ரூ.40 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த திட்டம் அதன் இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய படி கவர்னர் கைலாஷ்நாதன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் கண் கண்ணாடியை கழற்றி விட்டு கண்ணீரை துடைத்தார்.
தொடர்ந்து புதிய பயனாளிகளுக்கு முத்ரா கடன் வழங்குவதற்கான ஆணைகளை கவர்னர் வழங்கினார்.
- புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
- கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.
புதுச்சேரி:
தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
நேரு இளையோர் மையம் சார்பில், புதுவை காலாப்பட்டு பல்நோக்கு சமூக சேவை மையத்தில் அரசு சாரா அமைப்பு மேலாண்மை, ஆதார மேம்பாடு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 100 படுக்கைகளுடன் போதை மறு வாழ்வு மையம் அமைய உள்ளது.
அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது.
கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.
கவர்னர் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல.
சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நாளை மங்கள இசையுடன் தொடங்குகிறது.
- புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார்.
திருவையாறு:
திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 6 மணிக்கு 176-வது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது.
தியாகப்பிர்ம்ம சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். விழாவை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து 10-ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
விழா பந்தலில் காலை 8 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 மணிக்கு ஆராதனை விழா பந்தலில் 500-க்கு மேற்பட்ட கர்நாட இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தனம் கீர்த்தனைகளை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அதை தொடர்ந்து 11.30 மணிக்கு சோபனா விக்னேஷ் பாடுகிறார். இரவு 10.30 க்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
- மத்திய அரசு கொண்டுவர போகும் திட்டங்களால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள்.
நெல்லை:
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

காந்திமதி அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு கோவிலை சுற்றி வந்து நெல்லையப்பர் சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது கோவிலை சுற்றினாலே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் எதுவும் வராது என்று அவர் கூறினார். தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்ற சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் இன்று மக்களோடு மக்களாக முகக்கவசமின்றி சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. அதிலும் நான் மருத்துவராக இருப்பதால் நம் நாட்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.
பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த பயணத்தின் போது இந்தியாவின் பெருமை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் தலைவர் உலகத் தலைவராக மாறி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதுவரைக்கும் இல்லாத வளர்ச்சியை புதுச்சேரி பார்த்து வருகிறது. 13 வருடம் கழித்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கின்றோம். இதற்கு முன்பை விட ரூ. 2 ஆயிரம் கோடி அதிகமாக கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல பல புதிய திட்டங்களை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நிறைவேற்றி இருப்பதாக பட்டியல் போடுகிறார். இதெல்லாம் ஆளுனரின் ஒத்துழைப்பால்தான் நடக்கிறது.
தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் இன்னும் வாக்குறுதியாகவே உள்ளது. நாங்கள் 65 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உடனடியாக கொடுத்துவிட்டோம். இதெல்லாம் ஆளுனரும், முதல்-மந்திரி இணைந்து பணியாற்றியதால்தான் நடந்தது.
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நாங்கள் அதை முற்றிலும் புறந்தள்ளவில்லை. அவர்களை நிரந்தரமாக்க முடியாது என்பதால் 3 மாதம், 3 மாதமாக பணி நீட்டிப்பு செய்கிறோம். இன்னும் சொல்லப்போனால் உயர்நீதிமன்றமே நேரடி நியமனத்திற்கு தடை உட்பட சில தடைகளை விதித்து இருக்கிறது. அதை பின்பற்றுவதில் தான் பிரச்சினைகள் வருகிறதே தவிர, இதில் ஆளுனர் அழுத்தம் இல்லை. மற்றுபடி புதுச்சேரி முதல்-மந்திரிக்கும் எனக்கும் உள்ள பிரச்சனையே அண்ணன்-தங்கை பிரச்சினைதான். வேறு எந்த பிரச்சனையும் கிடையாது.
அதிகாரிகள் தரப்பில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வேகம் குறைவாக இருக்கலாம். நான் இதுவரை எந்த கோப்புகளையும் கையெழுத்திடாமல் கிடப்பில் வைக்கவில்லை. கிட்டத்தட்ட 1500 கோப்புகளை கையெழுத்திட்டேன். மார்ச் 31-ந் தேதி முழு நிதிநிலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இரவு 11.30 மணி வரை கையெழுத்திட்டேன். அதனால் தான் பிரதமர் பெஸ்ட் புதுச்சேரி என்றார். நான் அதிகாரிகளை அழைத்து பணிகளை துரிதப்படுத்த பாஸ்ட் புதுச்சேரி என்றேன்.
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தென் பகுதிக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்வட்ட பாதையை தூத்துக்குடி துறைமுக தேசிய நெடுஞ்சாலையோடு இணைப்பது, தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் என பல திட்டங்கள் வரப்போகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள். அதுமட்டுமல்ல தூத்துக்குடி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
நான் தூத்துக்குடியில் போட்டியிட்ட போது புல்லட் ரெயில் விடப்போவதாக பேசினேன். அப்போது சாதாரண ரெயிலே இல்லை புல்லட் ரெயில் எப்படி கொண்டு வருவீர்கள் என்றார்கள். அது கனவு. தென்பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எனது கனவு தான் அது. ஆனால் தற்போது புல்லட் ரெயில் விடுவது தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
- 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
- தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுச்சேரியில் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். ஸ்கில்டா மூலமாக 4,000 தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.
இது மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாக புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
- கட்டப்பட்ட விடுதி கட்டிடம், நீதிபதிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
- கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கவர்னர் மாளிகை இடம்மாறும் என தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள 200 ஆண்டுகால பழமையான பிரெஞ்சு கட்டிடத்தில் கவர்னர் மாளிகை செயல்பட்டு வருகிறது.
பழமையான பாரம்பரிய கட்டிடம் 2 நூற்றாண்டுகளை கடந்து விட்டதால் சேதம் அடைந்தது. இதை அவ்வப்போது சீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் கவர்னர் மாளிகையின் சில பகுதிகளின் மேல்பகுதிகள் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாளிகையை காலி செய்தால்தான் முழுமையாக சீரமைக்க முடியும் என அரசின் பொதுப் பணித்துறை தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய புதிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
கடற்கரை சாலையில் பழமை மாறாமல் புதிதாக கட்டப்பட்ட மேரிஹால், பழைய சாராய ஆலையில் கட்டப்பட்ட விடுதி கட்டிடம், நீதிபதிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பான கோப்பும் கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய கவர்னர் தமிழிசை ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த 3 இடத்தில் எந்த கட்டிடத்தை அவர் தேர்வு செய்துள்ளார் என்ற விவரம் வெளியிடப் படவில்லை.
இருப்பினும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கவர்னர் மாளிகை இடம்மாறும் என தெரிகிறது.
- டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.
- மஹன்யா ஸ்ரீ ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
ஓசூர்:
அயோத்தியில் ராமர் கோவில், மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனர்.
இந்த நிலையில், விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவி மஹன்யாஸ்ரீ என்பவர், ராமர் பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார். இந்த பாடலை, தெலங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மாணவி மஹன்யா ஸ்ரீ மற்றும் அவரது பெற்றோர் உடன் இருந்தனர்.
அப்போது, அங்கிருந்த டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.
மேலும் மஹன்யா ஸ்ரீயை மிகவும் பாராட்டினார். மஹன்யாஸ்ரீ ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியில் வசித்து வரும் சிவராமன், ஜெயப்ரியா தம்பதியரின் மகள் ஆவார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும்.
- நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.
புதுச்சேரி:
மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 2-வது சர்வதேச ஆன்மிக மாநாடு ஆரோவில் யூனிட்டி மையத்தில் நடந்தது.
இந்த மாநாட்டில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-
வாழ்வில் அமைதி பல நேரங்களில் ஒரு சக்தியை தருகிறது. அன்னை, அரவிந்தர் அதனை கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் அமைதியையும், வலிமையையும் நாம் பெற்று வருகிறோம்.
கடலில் அலையானது எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த முடியாது. அதே போல வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும். அதனை பாறைகள் போல் உறுதியாக எதிர்கொள்ளவேண்டும்.
தற்கால சூழலில் தற்கொலைகள் அதிகம் நிலவுகிறது. அவர்களால் சிக்கல்களை எதிர்கொள்ள முடியவில்லை. முன்னோர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
காலை தியானத்தோடு யோகா பயிற்சி செய்து வருவதன் மூலம் மிகப்பெரும் மனசக்தியை அடைய முடியும். அதன் மூலம் எத்தகைய சிக்கல்களையும் உங்களால் சமாளிக்க முடியும். இதைத் தான் ஆன்மிகம் சொல்கிறது.
மகாபாரதம், அரவிந்தர், அன்னை ஆகியோரின் கதை, பேச்சுக்களை கேட்டால் தன்னம்பிக்கை, சுயகட்டுப்பாடு பெற முடியும். அதன் மூலம் நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர்.
- தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.
2016-ம் ஆண்டு மே 29-ந் தேதி புதுச்சேரி மாநில கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். ஹெல்மெட் கட்டாயம், 2 சக்கர வானங்களில் 2 பேர் தான் செல்ல வேண்டும். சிறுவர்களை ஏற்றி சென்றாலும் இறக்கி விட வேண்டும். மக்கள் நல திட்டங்கள் முடக்கம் என்பது உள்பட பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு சென்றது.
குறிப்பாக புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் இவரை மத்திய அரசு, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நீக்கியது. தொடர்ந்து தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக கவர்னர் பதவியை கடந்த மார்ச் 18-ந் தேதி தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். மார்ச் 23-ந் தேதி புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். கிரண்பேடிக்கு பிறகு கிட்டத்திட்ட 3 ஆண்டுகள் 5 மாதத்துக்கு பிறகு தற்போது 'தான் முழுநேர கவர்னர் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.






