search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாழ்வில் அமைதி ஒரு சக்தியை தருகிறது- கவர்னர்
    X

    வாழ்வில் அமைதி ஒரு சக்தியை தருகிறது- கவர்னர்

    • வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும்.
    • நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    புதுச்சேரி:

    மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 2-வது சர்வதேச ஆன்மிக மாநாடு ஆரோவில் யூனிட்டி மையத்தில் நடந்தது.

    இந்த மாநாட்டில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாழ்வில் அமைதி பல நேரங்களில் ஒரு சக்தியை தருகிறது. அன்னை, அரவிந்தர் அதனை கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் அமைதியையும், வலிமையையும் நாம் பெற்று வருகிறோம்.

    கடலில் அலையானது எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த முடியாது. அதே போல வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும். அதனை பாறைகள் போல் உறுதியாக எதிர்கொள்ளவேண்டும்.

    தற்கால சூழலில் தற்கொலைகள் அதிகம் நிலவுகிறது. அவர்களால் சிக்கல்களை எதிர்கொள்ள முடியவில்லை. முன்னோர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

    காலை தியானத்தோடு யோகா பயிற்சி செய்து வருவதன் மூலம் மிகப்பெரும் மனசக்தியை அடைய முடியும். அதன் மூலம் எத்தகைய சிக்கல்களையும் உங்களால் சமாளிக்க முடியும். இதைத் தான் ஆன்மிகம் சொல்கிறது.

    மகாபாரதம், அரவிந்தர், அன்னை ஆகியோரின் கதை, பேச்சுக்களை கேட்டால் தன்னம்பிக்கை, சுயகட்டுப்பாடு பெற முடியும். அதன் மூலம் நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×