என் மலர்
நீங்கள் தேடியது "கவர்னர் கைலாஷ்நாதன்"
- இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
- கவர்னர் கைலாஷ்நாதன் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
புதுச்சேரி:
கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்டு 14-ந் தேதி பிரிவினை கொடுமைகளின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு, பிரிவினையின்போது நடந்த கலவரத்தின் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது அவரை தியாகிகள் சந்தித்து, தங்களுக்கு வழங்கப்படும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தங்களது வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்ட கவர்னர் கைலாஷ்நாதன் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கு உயர்த்திய உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
- சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார்.
- புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், குஜராத் தில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்து, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.
இவர் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி, முதல்-மந்திரியாக இருந்த போது, முதன்மை தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை முதன்மை செயலாராக பணி புரிந்தார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். குஜராத்தை பொருத்தவரை, சோலார் மின் உற்பத்தியில், மின் மிகை மாநிலமாக உள்ளது.
நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முன்னணியில் இருக்க முக்கிய காரணமாக விளங்கியவர் கவர்னர் கைலாஷ்நாதன்.
இந்நிலையில் அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இங்குள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இது சம்பந்தமான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின் றனர்.
இதையடுத்து அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.
- விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசுத்துறை அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
சிலர் மீது துறை ரீதியிலான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பலர் மீதான விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள கவர்னர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன் அரசுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்குகளில் கவர்னருக்கு விரிவாக தெரிவித்திட அவசரமாக தகவல்கள் தேவைப்படுகிறது.
எனவே அத்தகையவர்கள் குறித்த முழு விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் vigil@py.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் என்றால் எதனால்? விசாரணை அதிகாரி யார்? அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி முருகன் புதுச்சேரி வந்தார். மத்திய நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ.க. மாநிலத்தலைவர் செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோரைச் சந்தித்து புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது புதுச்சேரிக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க தயாராக இருப்பது குறித்து மத்திய இணை மந்திரி முருகன் கூறினார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி பெற பிரதமர் மோடியை சந்திக்க மார்ச் மாதம் டெல்லி செல்ல திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாநில வளர்ச்சி தொடர்பாக பிரதமரை வந்து சந்திக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி முருகனும் கேட்டுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து ராஜ் நிவாஸ் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவர்னர் கைலாஷ்நாதனும் வருகிற மார்ச் மாதம் பிரதமரை சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழலில் புதுச்சேரிக்கு அளித்த வாக்குறுதிகள் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆளும் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
அதன்படி சிறப்பு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பிரதமரை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.






