search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief-Minister Rangasamy"

    • பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. கோரிக்கை
    • மகளிர் அணி தலைவி சாந்தி மற்றும் நிர்வாகிகள் மனோ, கணேசன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டதினம் கொண்டாப் பட்டது. அரியாங்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வரவேற்றார். பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான அருள் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தின் மக்கள் தேவை கள் பற்றியும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் பேசினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-

    டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த, மறைந்த 5 இடங்கள் பஞ்ச தீர்த்த ஸ்தலங்கலாக அறிவித்து மிகப்பெரிய அளவில் புனரமைக்கப்பட்டு மக்களுக்கு அவருடைய வரலாறுகளை தெரிவிக்கும் வகையில் அமைத்துள்ளனர். இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகையில், அம்பேத்கர் வாழ்ந்த இடங்களுக்கு மக்கள் சென்று பார்வை யிட்டு வருவதற்காக அரசு செலவிலேயே நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இதற்காக அவருக்கு பா. ஜனதா கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதற்கான அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், விவசாய அணி தலைவர் புகழேந்தி, பட்டியல் அணியின் மூத்த துணை தலைவர்கள் கஜேந்திரன், சுப்பிரமணி பொதுச்செய லாளர் நாகராஜ், பொருளா ளர் டாக்டர் சிவபெருமான் மாநில செயலாளர் பிரகாஷ், அய்யப்பன் அருண், செயற்குழு உறுப்பி னர்கள் காமாட்சி, தட்சிணா மூர்த்தி ராஜாராம், நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜ குரு அம்பேத்கர், வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ண ரசன் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள் குமார், அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளர் வசந்த் ராஜ், பொதுச் செயலாளர்கள் பிச்சமுத்து, முருகவேல் மாவட்ட மகளிர் அணி தலைவி சாந்தி மற்றும் நிர்வாகிகள் மனோ, கணேசன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • ரூ.500 உயர்த்தி ரூ.3 ஆயிரமாக 18 ஆயிரத்து 504 மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம், மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.

    நடப்பு ஆண்டு முதல் ரூ.500 உயர்த்தி ரூ.3 ஆயிரமாக 18 ஆயிரத்து 504 மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.5 கோடியே 55 லட்சத்து 12 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டசபையில் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு மழைக்கால நிவாரணத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தின் கீழ் புதுவையில் 9 ஆயிரத்து 565, காரைக்காலில் 3 ஆயிரத்து 264, மாகேவில் 523, ஏனாமில் 4 ஆயிரத்து 792 குடும்பத்தினர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
    • சிறப்பங்காடி வரும் 11-ந் தேதி வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

    புதுச்சேரி:

    அமுதசுரபி, கான்பெட் மூலம் தீபாவளி சிறப்பு அங்காடி விற்பனை மையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடக்கவிழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அரசு கொறடா ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்க பதிவாளர் யஷ்வந்தையா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சிறப்பங்காடி வரும் 11-ந் தேதி வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

    • முதல்- அமைச்சர் ரங்கசாமி பெருமிதம்
    • நம் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் வழிநடத்தி செல்கிறார்.

    புதுச்சேரி:

    என் மண், என் தேசம் நிகழ்ச்சியில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். நம் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்பதற்காக என் மண், என் தேசம் என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    என் மண், என் தேசம் என்ற வார்த்தையை சொல்லும்போதே தேசப்பற்று வர வேண்டும். புனித கலசம் மூலம் நாட்டின் அனைத்து பகுதி மண்ணும் கலக்கப்பட்டு டெல்லியில் நிறுவப்படுகிறது.

    நாட்டின் அனைத்து மண்ணும் கலந்த பூங்கா அமைக்கும்போது நாட்டின் ஒற்றுமை வெளிப் படும். பல மொழி, இனம், அதிக மக்கள் தொகை கொண்டது இந்திய நாடு. எத்தனை வித்தியாசம் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுதான் நம் நாட்டின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. பிரதமரின் உணர்வு நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற வகையில் உள்ளது.

    இன்று இந்தியநாடு உலகில் சிறந்த நாடாக திகழ்கிறது. பிரதமர் சிறந்த தலைவராக திகழ்கிறார். உலகில் எந்த நிகழ்வாக இரு ந்தாலும் நம் பிரதமர் ஆலோசனை வழங்கும் நிலையில் உள்ளார். நம் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் வழிநடத்தி செல்கிறார்.

    புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. கல்வியில் 100 சதவீத தன்னிறைவு பெற்ற மாநிலமாககொண்டு வந்துள்ளோம். சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்துள்ளோம்.

    ஆன்மிகம், கல்வி, மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளோம். நம் நாட்டின் இந்திய குடிமகன்கள் அனைவரும் ஒற்றுமையோடு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து சுதேசி மில் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழக மொழி பாடம் 4 பருவங்களாக உள்ளதை வெறும் 2 பருவங்களாக குறைக்கக்கூடாது.

    பருவத்திற்கு 24 மணி நேரமாக இருந்த தமிழ்மொழி பாடத்தை 8 மணி நேரமாக குறைக்கக்கூடாது. தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    மாணவர்கள் போராட்டத்தை வாழ்த்தி புதுவை சட்டமன்ற எதிர்கட்சி த்தலைவர் சிவா பேசியதாவது:

    தமிழ் மட்டும் படித்துவிட்டு இந்தியை கற்காததால்தான் நாம் கஷ்டப்படுவதாக உலகத்தை ஏமாற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு இப்போராட்டம் சவுக்கடி கொடுத்திருக்கிறது. உலக நாடுகள் மட்டுமின்றி பாராளு மன்றத்திலும் தமிழர்களின் பெரு மையை பேசினால்தான் பெருமை கிடைக்கிறது என பிரதமர் மோடிக்கு தெரிகிறது.

    மொழி உணர்வோடு போராடும் மாணவிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். சட்டமன்றத்திலும் எங்கள் குரல் ஒலிக்கும். நம் மொழிக்கு, இனத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய கல்விக்கொள்கை இந்தியா முழுவதும் கொண்டு வந்தாலும், அந்தந்த மாநில அரசுதான் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

    அந்த வகையில் தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியாக உள்ளது. முதல அமைச்சர் ரங்கசாமிக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறதா? இங்கு நடப்பது ரங்கசாமி ஆட்சியா? பா.ஜனதா ஆட்சியா? என்பதை தெரிவிக்க வேண்டும். பா.ஜனதாவின் சித்தாந்தத்தை வளர்க்க இங்குள்ள மக்கள் வாக்களிக்கவில்லை.

    ரங்கசாமியை நம்பித்தான் வாக்களித்தார்கள். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முதல்வர் சுயமாக முடிவெடுத்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
    • நீங்கள் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.

    புதுச்சேரி:

    சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தேச ஒற்றுமை, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கற்பித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில்

    சி.ஆர்.பி.எப். படை வீராங்க ணைகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர்.

    50 வீராங்கணைகள் பங்கேற்றுள்ள இந்த பேரணி கடந்த 5-ந் தேதி கன்னியா குமரியில் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி குஜராத்தில் பேரணி நிறை வடைகிறது.

    இந்த பேரணி நேற்று இரவு புதுவைக்கு வந்தது. புதுவை மாநில எல்லையான கன்னியக்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை இந்த குழுவினர் புதுவையிலிருந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

     இவர்களுக்கு வழியனுப்பும் விழா இன்று காலை கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நடந்தது. ஏ.டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கள் நாரா.சைதன்யா, அனிதாராய் முன்னிலை வகித்த னர். முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், வீராங்க ணைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    தேச ஒற்றுமைக்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளீர்கள். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இல்லாவிட்டால் பெண்கள் மட்டும் கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை செல்வது என்பது முடியாத காரியம்.

    தேச பற்றை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு செல்லும் உங்கள் பயணம் வெற்றி பெறட்டும்.

    இளைஞர்களிடம் தற்போதுள்ள தீய பழக்கத்தை போக்கும் நிலையை உருவாக்கும் வாய்ப்பு இப்பயணத்துக்கு உண்டு.

    சிறந்த எண்ணத்தோடு இப்பயணம் மேற்கொண்டி ருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் வருகின்றவர்களை வரவேற்கும் மாநிலம்.

    சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரும் தலை வர்கள் இங்கு வாழ்ந்துள்ள னர். புதுவை மாநிலம் ஒரு ஆன்மீக பூமி, எங்கள் மாநிலம் உங்களை வரவேற்று கவுரவித்துள்ளது.

    நீங்கள் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.

    நாட்டின் ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கிய மான ஒன்று. இன்று உலகளவில் நம் நாடு சிறந்து விளங்குகிறது என்றால் நாட்டின் ஒற்றுமைதான் காரணம்.

    தேசிய ஒற்றுமை என்ற வகையில் இந்த பயணம் அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அருள்குமார். போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், பக்தவச்சலம், செல்வம், நல்லாம்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். குஜராத் புறப்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீராங்கணைகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக 170 பேர் கொண்ட அதிகாரிகள், வீரர்களும் உடன் சென்றனர்.

    • முதல் -அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • திருநங்கையர் ஆகிய 3 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசினை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் "தூய்மையே சேவை இருவார நலப்பணியை" முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக புதுவை அரசு உள்ளாட்சித் துறை சார்பில் தூய்மை மராத்தான் போட்டி கடற்கரை சாலையில் இன்று நடந்தது.

     இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ரொக்க பரிசினை வழங்கினார்.

    ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் ஆகிய 3 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசினை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    தொடர்ந்து தூய்மையே சேவை இருவார நலப்பணியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் நாடு தழுவிய ஒரு மணி நேர தூய்மை பணிக்கு உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், சுரேஷ்ராஜ் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • அரசில் காலியாக உள்ள மருந்தாளுனர் பதவிகள் விரைவில் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்றார்.

    புதுச்சேரி:

    உலக மருந்தாளுநர்கள் தினம் புதுவை பார்மசி கவுன்சில் சார்பில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

    உலக மருந்தாளுநர் தினத்தையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசுகளை வழங்கி பேசினார்.

    அவர்பேசியதாவது:-

    சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் மருந்தாளுனர்களின பங்கு இன்றியமையாதது. அவர்களின் சேவை மகத்தானது. புதுவை அரசில் காலியாக உள்ள மருந்தாளுனர் பதவிகள் விரைவில் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்ப ப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பொது சுகாதார இணை இயக்குனர் டாக்டர் முரளி, அன்னை தெரசா கல்வி நிறுவன முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், பார்மசி கவுன்சில் தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுன்சில் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, விமல்ராஜ், ஜெயபிரகாஷ், பதிவாளர் பாலமுருகன் செய்தி ருந்தனர். சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பார்மசி கவுன்சில் உறுப்பினர் கவிமணிக்கு வாழ்த்து தெரி விக்கப்பட்டது. துணைத் தலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை
    • பாதிப்பை நோய் மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்த முடிய வில்லை.

    புதுச்சேரி:

    ஈ.ஐ.டி. பாரி அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கி ணைப்பு குழுவினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 2022-23-ம் ஆண்டு கடுமையான வெப்பத் தாக்கத்தினால் கரும்பு பயிர்களில் புதிய நோய்கள் உருவாகி முழுவதும் வேரிலிருந்து காய்ந்து அழிந்து வருகிறது. இந்த பாதிப்பை நோய் மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்த முடிய வில்லை.

    இதனால் கரும்பு விவசாயிகளுக்கு கடுமையான விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை விவசாயிகளுக்கு இலவசமாக கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளது.

    எனவே விவசாயத்துறை வல்லுநர்களும், காப்பீடு நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து கரும்பு பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு வழங்கி கரும்பு விவசாயிகளை காத்திட வேண்டும்.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழக பகுதியில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதுபோல புதுவை கரும்பு ஆணையர் புதுவையில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய சர்க்கரை ஆலைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

    • முதல் -அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • ரூ. 3 கோடியே 36 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் முதல்- அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கம் விடுபட்ட பகுதியான வில்லியனூர் ரோட்டின் தெற்கு பகுதி, கணபதி நகர், சேத்திலால் நகர், குபேரன் நகர், கோவிந்தராஜன் நகர், வரதராசு நகர், மகாலட்சுமி நகர், முத்துலட்சுமி நகரின் அனைத்து உள் வீதிகளுக்கும் துருப்பிடிக்காத குடிநீர் குழாய் புதைத்து சாலைகளை மறு சீரமைப்பு , அம்ரூத் திட்டத்தில் ரூ.5 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் செய்வததற்கான பூமி பூஜை  நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். அரியாங்குப்பம் தொகுதி பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை அரசு செயலர் டாக்டர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் தணிகைவேல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து முதலியார் பேட்டை தொகுதி சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் சுதானா நகர் ஆர்ச்சில் இருந்து அரவிந்த் நகர், அங்காளம்மன் நகர் வழியாக முருங்கப்பாக்கம் -நாட்டார் தெரு, பள்ளத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் தார்சாலை அமைக்க சிட்பி வங்கி நிதி உதவியுடன் ரூ. 3 கோடியே 36 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் முதல்- அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    • அரசு பணியாளர் கூட்டமைப்பு கோரிக்கை
    • ரூ.18 ஆயிரம் சட்டக்கூலி வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பணியாளர் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறையில் கடந்த 13 ஆண்டாக ஆயிரத்து 500 வவுச்சர் ஊழியர்கள் பணிபுரிகிறோம். இதில் 700-க்கும் மேற்பட்டோர் 40 வயதை கடந்தவர்கள். கால்நடை மருத்துவ கல்லூரியில் 83 ஊழியர்கள் உள்ளனர்.

    அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஊழியர்களின் வயது, வறுமையை கருத்தில் கொண்டு பணி நியமன விதியை ஒருமுறை தளர்வு செய்து ரூ.18 ஆயிரம் சட்டக்கூலி வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.

    இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் சட்டசபையில் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். வவுச்சர் ஊழியர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து காலி பணியிடங்களைநிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • ரூ. 3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாகூர் கொம்யூன் சோரியாங் குப்பம், குருவிநத்தம் கிராமத்துக்கு சுடுகாடுக்கு செல்ல தென்பெண்ணை யாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 32 லட்சத்தில் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ, பொதுப்பணித் துறை தலைமை பொறி யாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் முதல் ஆதிங்கப்பட்டு வரை உள்ள சாலை, பிள்ளையார் குப்பத்திலிருந்து பின்னாச்சி குப்பம் வழியாக பாகூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

    இதனால் போக்குவ ரத்துக்கு சிரமமாக இருந்தது. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ தொடர்ந்து வற்புறுத்தலின் பேரில் 2 முக்கிய சாலைக்கு நபார்டு வங்கியின் கடன் மூலம் ரூ. 3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் சந்திர குமார், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×