search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief-Minister Rangasamy"

    • பட்டதாரி ஆசிரியர்கள் 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர்.
    • ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பால சேவிகா பணியாளர்கள் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்த படியும், மழை கோட்டு அணிந்த படியும் அவர்கள் முதலமைச்சர் வீட்டு முன்பு காத்திருந்தனர்.

    அப்போது அப்பா பைத்தியசாமி கோவிலில் முதலமைச்சர் பூஜை செய்து கொண்டிருந்தார். கோவிலுக்கு சென்ற ஆசிரியர்கள் முதலமைச்சரை சந்தித்து நாங்கள் 5 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்று அவர்களிடம் முதலமைச்சர் கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    இதுபற்றி தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசார் போராட்டம் நடத்த வந்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.

    மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்த வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.
    • ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்து பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதனால், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆட்சி அமைந்தது முதலே நிர்வாக பதவியில் இல்லாத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், 3 ஆண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையிலும் இதுவரை வாரியத் தலைவர் பதவி வழங்கப்படவில்லை.

    அதோடு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட தங்கள் தொகுதி களுக்கு தரப்படவில்லை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குமுறலில் உள்ளனர்.

    இத்தகைய சூழலில் ஆளுங்கட்சியாக இருந்தும் தேர்தலில் தோல்வி அடைந்தது கூட்டணிக்குள் மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.

    அதையடுத்து மாநிலத்தலைவர் செல்வகணபதி யிடம், தங்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தரவேண்டும்-வாரியத்தலைவர் பதவிகளை உடன் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, "முதல் அமைச்சர் ரங்கசாமி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் உணவு விருந்துக்கு அழைத்துள்ளார்" என்று அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு முதல்-அமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்தது.

    ஆளுங்கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், தேர்தல் தோல்வியை பற்றி ஆராய்வும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசவும் முதல்- அமைச்சர் அழைத்து இருக்கலாம் என எண்ணினர்.

    இதனால், அங்கு கூட்டத்தில் பேச முன்கூட்டியே தயார் செய்து தீர்மானத்துடன் பல எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். ஆனால், தனியார் ஓட்டலுக்கு வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் ஒட்டலில் ஏற்கெனவே தலைமைச் செயலர், கலெக்டர், அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசியல் பேச வாய்ப்பும் இல்லை என்ற சூழலில் முதல்- அமைச்சர் ஏன் அழைத்தார் என குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் அமைதியாக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்கு பிறகு வந்தார்.

    அவர் அனை வரையும் நேரடியாக உணவு சாப்பிட அழைத்து சாப்பிட தொடங்கி னார். விருந்து முடிந்து அதிகாரிகளை அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர் பேசுவார் என ஆளுங்கட்சியினர் நினைத்தனர். ஆனால், முதல்-அமைச்சர் ரங்கசாமி சாப்பிட்ட பிறகும் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதனால் எதற்காக நம்மை விருந்து சாப்பிட அழைத்தார் என்று தெரியாமலேயே குழப்பத்தில் ஆளுங்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர். இதன் பிறகுதான் காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஆனால் காங்கிரஸ்- தி.மு.க., சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் விருந்தில் பங்கேற்கவில்லை.

    இதுதொடர்பாக விசாரித்த போது, தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக முதல்-அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
    • புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவை யில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா, கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதன் பிறகு புதிய அமைச்சராக காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன், கடந்த மார்ச் 14-ந்தேதி அமைச்சராக பொறுப்பேற்றார். வழக்க மாக அமைச்சர் பதவியேற்பு முடிந்ததும், அவருக்கான இலாகா ஒதுக்கப்பட்டு விடும்.

    ஆனால், திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனிடையே மார்ச் 16-ந்தேதி பாராளு மன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. இதனால் அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக திருமுருகன் கடந்த 3 மாதங்களாக வலம் வருகிறார்.

    தேர்தல் முடிவு கடந்த ஜூன் 4-ந்தேதி வெளி யானது. இதைத்தொடர்ந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. தனி தொகுதி எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

    பொதுவாக ஆதிதிராவி டர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்தவருக்கே ஒதுக்கப்படும். ஆனால், புதிய அமைச்சர் திருமுருகன் அந்த சமூகத்தை சேர்ந்தவரில்லை. எனவே, அந்த இலாகா முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அந்த சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமாரிடம் வழங்க வேண்டும்.

    இதனால், அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனாலேயே புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. கோரிக்கை
    • மகளிர் அணி தலைவி சாந்தி மற்றும் நிர்வாகிகள் மனோ, கணேசன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டதினம் கொண்டாப் பட்டது. அரியாங்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வரவேற்றார். பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான அருள் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தின் மக்கள் தேவை கள் பற்றியும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் பேசினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-

    டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த, மறைந்த 5 இடங்கள் பஞ்ச தீர்த்த ஸ்தலங்கலாக அறிவித்து மிகப்பெரிய அளவில் புனரமைக்கப்பட்டு மக்களுக்கு அவருடைய வரலாறுகளை தெரிவிக்கும் வகையில் அமைத்துள்ளனர். இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகையில், அம்பேத்கர் வாழ்ந்த இடங்களுக்கு மக்கள் சென்று பார்வை யிட்டு வருவதற்காக அரசு செலவிலேயே நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இதற்காக அவருக்கு பா. ஜனதா கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதற்கான அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், விவசாய அணி தலைவர் புகழேந்தி, பட்டியல் அணியின் மூத்த துணை தலைவர்கள் கஜேந்திரன், சுப்பிரமணி பொதுச்செய லாளர் நாகராஜ், பொருளா ளர் டாக்டர் சிவபெருமான் மாநில செயலாளர் பிரகாஷ், அய்யப்பன் அருண், செயற்குழு உறுப்பி னர்கள் காமாட்சி, தட்சிணா மூர்த்தி ராஜாராம், நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜ குரு அம்பேத்கர், வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ண ரசன் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள் குமார், அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளர் வசந்த் ராஜ், பொதுச் செயலாளர்கள் பிச்சமுத்து, முருகவேல் மாவட்ட மகளிர் அணி தலைவி சாந்தி மற்றும் நிர்வாகிகள் மனோ, கணேசன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • ரூ.500 உயர்த்தி ரூ.3 ஆயிரமாக 18 ஆயிரத்து 504 மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம், மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.

    நடப்பு ஆண்டு முதல் ரூ.500 உயர்த்தி ரூ.3 ஆயிரமாக 18 ஆயிரத்து 504 மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.5 கோடியே 55 லட்சத்து 12 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டசபையில் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு மழைக்கால நிவாரணத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தின் கீழ் புதுவையில் 9 ஆயிரத்து 565, காரைக்காலில் 3 ஆயிரத்து 264, மாகேவில் 523, ஏனாமில் 4 ஆயிரத்து 792 குடும்பத்தினர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
    • சிறப்பங்காடி வரும் 11-ந் தேதி வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

    புதுச்சேரி:

    அமுதசுரபி, கான்பெட் மூலம் தீபாவளி சிறப்பு அங்காடி விற்பனை மையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடக்கவிழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அரசு கொறடா ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்க பதிவாளர் யஷ்வந்தையா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சிறப்பங்காடி வரும் 11-ந் தேதி வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

    • முதல்- அமைச்சர் ரங்கசாமி பெருமிதம்
    • நம் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் வழிநடத்தி செல்கிறார்.

    புதுச்சேரி:

    என் மண், என் தேசம் நிகழ்ச்சியில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். நம் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்பதற்காக என் மண், என் தேசம் என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    என் மண், என் தேசம் என்ற வார்த்தையை சொல்லும்போதே தேசப்பற்று வர வேண்டும். புனித கலசம் மூலம் நாட்டின் அனைத்து பகுதி மண்ணும் கலக்கப்பட்டு டெல்லியில் நிறுவப்படுகிறது.

    நாட்டின் அனைத்து மண்ணும் கலந்த பூங்கா அமைக்கும்போது நாட்டின் ஒற்றுமை வெளிப் படும். பல மொழி, இனம், அதிக மக்கள் தொகை கொண்டது இந்திய நாடு. எத்தனை வித்தியாசம் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுதான் நம் நாட்டின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. பிரதமரின் உணர்வு நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற வகையில் உள்ளது.

    இன்று இந்தியநாடு உலகில் சிறந்த நாடாக திகழ்கிறது. பிரதமர் சிறந்த தலைவராக திகழ்கிறார். உலகில் எந்த நிகழ்வாக இரு ந்தாலும் நம் பிரதமர் ஆலோசனை வழங்கும் நிலையில் உள்ளார். நம் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் வழிநடத்தி செல்கிறார்.

    புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. கல்வியில் 100 சதவீத தன்னிறைவு பெற்ற மாநிலமாககொண்டு வந்துள்ளோம். சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்துள்ளோம்.

    ஆன்மிகம், கல்வி, மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளோம். நம் நாட்டின் இந்திய குடிமகன்கள் அனைவரும் ஒற்றுமையோடு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து சுதேசி மில் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழக மொழி பாடம் 4 பருவங்களாக உள்ளதை வெறும் 2 பருவங்களாக குறைக்கக்கூடாது.

    பருவத்திற்கு 24 மணி நேரமாக இருந்த தமிழ்மொழி பாடத்தை 8 மணி நேரமாக குறைக்கக்கூடாது. தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    மாணவர்கள் போராட்டத்தை வாழ்த்தி புதுவை சட்டமன்ற எதிர்கட்சி த்தலைவர் சிவா பேசியதாவது:

    தமிழ் மட்டும் படித்துவிட்டு இந்தியை கற்காததால்தான் நாம் கஷ்டப்படுவதாக உலகத்தை ஏமாற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு இப்போராட்டம் சவுக்கடி கொடுத்திருக்கிறது. உலக நாடுகள் மட்டுமின்றி பாராளு மன்றத்திலும் தமிழர்களின் பெரு மையை பேசினால்தான் பெருமை கிடைக்கிறது என பிரதமர் மோடிக்கு தெரிகிறது.

    மொழி உணர்வோடு போராடும் மாணவிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். சட்டமன்றத்திலும் எங்கள் குரல் ஒலிக்கும். நம் மொழிக்கு, இனத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய கல்விக்கொள்கை இந்தியா முழுவதும் கொண்டு வந்தாலும், அந்தந்த மாநில அரசுதான் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

    அந்த வகையில் தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியாக உள்ளது. முதல அமைச்சர் ரங்கசாமிக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறதா? இங்கு நடப்பது ரங்கசாமி ஆட்சியா? பா.ஜனதா ஆட்சியா? என்பதை தெரிவிக்க வேண்டும். பா.ஜனதாவின் சித்தாந்தத்தை வளர்க்க இங்குள்ள மக்கள் வாக்களிக்கவில்லை.

    ரங்கசாமியை நம்பித்தான் வாக்களித்தார்கள். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முதல்வர் சுயமாக முடிவெடுத்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
    • நீங்கள் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.

    புதுச்சேரி:

    சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தேச ஒற்றுமை, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கற்பித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில்

    சி.ஆர்.பி.எப். படை வீராங்க ணைகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துகின்றனர்.

    50 வீராங்கணைகள் பங்கேற்றுள்ள இந்த பேரணி கடந்த 5-ந் தேதி கன்னியா குமரியில் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி குஜராத்தில் பேரணி நிறை வடைகிறது.

    இந்த பேரணி நேற்று இரவு புதுவைக்கு வந்தது. புதுவை மாநில எல்லையான கன்னியக்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை இந்த குழுவினர் புதுவையிலிருந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

     இவர்களுக்கு வழியனுப்பும் விழா இன்று காலை கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நடந்தது. ஏ.டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கள் நாரா.சைதன்யா, அனிதாராய் முன்னிலை வகித்த னர். முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், வீராங்க ணைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    தேச ஒற்றுமைக்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளீர்கள். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இல்லாவிட்டால் பெண்கள் மட்டும் கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை செல்வது என்பது முடியாத காரியம்.

    தேச பற்றை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு செல்லும் உங்கள் பயணம் வெற்றி பெறட்டும்.

    இளைஞர்களிடம் தற்போதுள்ள தீய பழக்கத்தை போக்கும் நிலையை உருவாக்கும் வாய்ப்பு இப்பயணத்துக்கு உண்டு.

    சிறந்த எண்ணத்தோடு இப்பயணம் மேற்கொண்டி ருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் வருகின்றவர்களை வரவேற்கும் மாநிலம்.

    சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரும் தலை வர்கள் இங்கு வாழ்ந்துள்ள னர். புதுவை மாநிலம் ஒரு ஆன்மீக பூமி, எங்கள் மாநிலம் உங்களை வரவேற்று கவுரவித்துள்ளது.

    நீங்கள் இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.

    நாட்டின் ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கிய மான ஒன்று. இன்று உலகளவில் நம் நாடு சிறந்து விளங்குகிறது என்றால் நாட்டின் ஒற்றுமைதான் காரணம்.

    தேசிய ஒற்றுமை என்ற வகையில் இந்த பயணம் அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அருள்குமார். போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், பக்தவச்சலம், செல்வம், நல்லாம்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். குஜராத் புறப்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீராங்கணைகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக 170 பேர் கொண்ட அதிகாரிகள், வீரர்களும் உடன் சென்றனர்.

    • முதல் -அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • திருநங்கையர் ஆகிய 3 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசினை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் "தூய்மையே சேவை இருவார நலப்பணியை" முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக புதுவை அரசு உள்ளாட்சித் துறை சார்பில் தூய்மை மராத்தான் போட்டி கடற்கரை சாலையில் இன்று நடந்தது.

     இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ரொக்க பரிசினை வழங்கினார்.

    ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் ஆகிய 3 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசினை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    தொடர்ந்து தூய்மையே சேவை இருவார நலப்பணியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் நாடு தழுவிய ஒரு மணி நேர தூய்மை பணிக்கு உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், சுரேஷ்ராஜ் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • அரசில் காலியாக உள்ள மருந்தாளுனர் பதவிகள் விரைவில் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்றார்.

    புதுச்சேரி:

    உலக மருந்தாளுநர்கள் தினம் புதுவை பார்மசி கவுன்சில் சார்பில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

    உலக மருந்தாளுநர் தினத்தையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசுகளை வழங்கி பேசினார்.

    அவர்பேசியதாவது:-

    சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் மருந்தாளுனர்களின பங்கு இன்றியமையாதது. அவர்களின் சேவை மகத்தானது. புதுவை அரசில் காலியாக உள்ள மருந்தாளுனர் பதவிகள் விரைவில் மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்ப ப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பொது சுகாதார இணை இயக்குனர் டாக்டர் முரளி, அன்னை தெரசா கல்வி நிறுவன முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், பார்மசி கவுன்சில் தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுன்சில் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, விமல்ராஜ், ஜெயபிரகாஷ், பதிவாளர் பாலமுருகன் செய்தி ருந்தனர். சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பார்மசி கவுன்சில் உறுப்பினர் கவிமணிக்கு வாழ்த்து தெரி விக்கப்பட்டது. துணைத் தலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை
    • பாதிப்பை நோய் மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்த முடிய வில்லை.

    புதுச்சேரி:

    ஈ.ஐ.டி. பாரி அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கி ணைப்பு குழுவினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 2022-23-ம் ஆண்டு கடுமையான வெப்பத் தாக்கத்தினால் கரும்பு பயிர்களில் புதிய நோய்கள் உருவாகி முழுவதும் வேரிலிருந்து காய்ந்து அழிந்து வருகிறது. இந்த பாதிப்பை நோய் மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்த முடிய வில்லை.

    இதனால் கரும்பு விவசாயிகளுக்கு கடுமையான விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை விவசாயிகளுக்கு இலவசமாக கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளது.

    எனவே விவசாயத்துறை வல்லுநர்களும், காப்பீடு நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து கரும்பு பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு வழங்கி கரும்பு விவசாயிகளை காத்திட வேண்டும்.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழக பகுதியில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதுபோல புதுவை கரும்பு ஆணையர் புதுவையில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய சர்க்கரை ஆலைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

    ×