என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி. ராதாகிருஷ்ணன்"

    • C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ளார்.
    • எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக (பா.ஜ.க.) கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியது.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்ப்பில் யாரை வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

    அதன்படி துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த C. P. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும்.
    • பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.

    நெல்லை:

    சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜையை ஒட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சுதந்திரப் போராட்ட வீரர்கள் 268 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிட்டு அவர்களை கவுரவப்படுத்தி வருகிறார்.

    தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவில் கவுரவம் செய்யவே இங்கு வருகை தந்தேன்.

    பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை. காவி என்பது மண்ணுக்கு சொந்தமானது. இப்போது மட்டுமல்ல வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல. அது பற்றற்ற தன்மையை குறிக்கும் நிறம்.

    அறநிலையத்துறை அமைச்சர் கூட காவி அணிந்துதான் கோவிலுக்கு செல்கிறார். மாநில முதலமைச்சர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளது. அதனை வைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் அவர்கள் தலையிடக்கூடாது. மாநிலத்தில் முதல் பிரஜையாக செயல்படுபவர் கவர்னர் தான்.

    நான் 4 மாநிலங்களில் கவர்னராக இருந்திருக்கிறேன். 2 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தான். ஆனால் அங்கு இது போன்ற எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்பட வில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.

    கேரளா அரசு தொடர்ந்து வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அதற்கான தீர்ப்பை வழங்கி உள்ளது. தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் அதிகாரம் என இவர்கள் கூறி வருகின்றனர். மாநில கவர்னர்களின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் முதலமைச்சருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா?. பிரதமருக்கு முழு அதிகாரம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி என்றால் எதேச்சதிகாரமாக அவர் செயல்பட முடியுமா?. மாணவர்கள் வன்முறைக்குள் செல்லக்கூடாது.

    ராஜீவ் காந்தியை கொன்றவரோடு கட்டியணைத்து முதலமைச்சர் நட்பு பாராட்டுகிறார். அது எந்த வகையில் சரியானது. வன்முறை, பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.
    • 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது

    கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கடந்த 1998-ல் வெற்றி பெற்றது.

    பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.பி. ஆனார். தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். சுப்பையனை எதிர்த்து 4,49,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது.

    இதையடுத்து 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.

    2004 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனிடம் தோல்வி அடைந்தார். 2014-ல் 4-வது முறையாக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து 2-ம் இடத்தை பிடித்தார்.

    பின்னர் 2019-ல் பா.ஜ.க. சார்பில் 5-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கோவை தொகுதியில் பா.ஜ.க. வென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது. ஆனால் இந்த முறை தி.மு.க., அ.தி.மு.க.வும் தனித்தனியாக களம் காண்கின்றன. இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. இதில் அண்ணாமலை வெற்றிக்கணக்கை தொடங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ×