என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு துணைத் தலைவர் தேர்தல்"

    • துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?
    • இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்.

    ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 

    இந்நிலையில் டெல்லியில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நாம் ஏன் ஒரு புதிய துணைத் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நேற்று நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பழைய துணைத் ஜனாதிபதி எங்கே போனார் என்று கேட்டேன்?  

    துணைத் ஜனாதிபதி ராஜினாமா செய்த நாளில், வேணுகோபால் ஜி என்னை அழைத்து, துணைத் ஜனாதிபதி பணியை விட்டு போய்விட்டார் என்று கூறினார். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

    சிலருக்குத் தெரியும், சிலருக்குத் தெரியாது. ஆனால் அவர் மறைந்திருப்பதாக ஒரு கதையும் இருக்கிறது.

    இந்திய துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?

    ராஜ்யசபாவில் கர்ஜித்தவர் திடீரென்று முற்றிலும் அமைதியாகிவிட்டார்" என்று தெரிவித்தார்.

    மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பதிலளித்த ராகுல், "பீகாரில் நெருப்பு பற்றி எரிகிறது.

    இந்த நெருப்பைப் பார்க்க அனைத்து தலைவர்களையும் நான் அழைக்கிறேன். அதைத் தடுக்க முடியாது. பீகாரில் நான்கு வயது குழந்தை 'வாக்கு திருடன், வாக்கு திருடன்' என்று கத்துகிறது.

    அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களைத் திருடினர். இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்" என்று கூறினார்.

    • C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ளார்.
    • எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக (பா.ஜ.க.) கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியது.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்ப்பில் யாரை வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

    அதன்படி துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த C. P. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடக்கிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, மேற்கு வங்காள மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

    முன்னாக டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், எங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

    ஜெகதீப் தன்கர்-க்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய சிறந்த அறிவு இருக்கிறது. அவர் சட்டமன்ற விவகாரங்களை நன்கு அறிந்தவர். அவர் ராஜ்யசபாவில் ஒரு சிறந்த தலைவராக இருப்பார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவையின் நடவடிக்கைகளை வழிநடத்துவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும், பிரதமர் தமது பதிவில் கூறியுள்ளார்.

    ஜெகதீப் தன்கர் தனது பணிவுக்கு பெயர் பெற்றவர், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் பாடுபட்டவர். அவர் எங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாததால் ஜெகதீப் தன்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

    • மார்கரெட் ஆல்வா தேர்வில் தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் புகார்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க திரிணாமுல் முடிவு

    கொல்கத்தா:

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரசின் முடிவு எதிர்க்கட்சிகளுக்கும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இந்த தேர்தலில் பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படும் போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தாபானர்ஜி விரும்பினார், அது நடக்காது என்று தெரிந்த உடன் ஓடிவிட்டார். அனால் காங்கிரஸ் பின்வாங்க வில்லை.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதல்வர் மம்தா உதவவில்லை. அவர் பாஜகவுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க விரும்புகிறார்கள்.

    பாஜகவிற்கும் திரிணாமுல் இடையே ஒரு புரிதல் உள்ளது. ஜெகதீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது அவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    • சரத்பவார் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை.
    • மார்கரெட் ஆல்வாவை, கெஜ்ரிவால் ஆதரிப்பார் என சரத்பவார் நம்பிக்கை,

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்பமனு தாக்கல் செய்வதற்கு நாளை மறுநாள் (19-ந் தேதி) கடைசி நாள்.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


    இந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற்றது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என சரத் பவார் தெரிவித்தார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவை அறிவித்த கெஜ்ரிவால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவை தெரிவிப்பார் என்றும் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்தார்.

    ×