என் மலர்
நீங்கள் தேடியது "Jagdeep Dhankar"
- ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.
- தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி அன்று திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

அவரது ராஜினாமா கடிதத்தில் "உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக" தான் விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவரது திடீர் முடிவு பல ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு அவரது உடல்நலக்குறைவைத் தாண்டி, வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தன்கரிடம் சமர்ப்பித்தன.

இதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஊழல் ஒழிப்பு குறித்து அரசு வேறு வழியில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தன்கரின் இந்த நடவடிக்கை, அரசுடன் அவருக்கு பிளவு ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆளும் கட்சி தன்கர் மீது அவநம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரத் தயாரானதாகக் கூறப்பட்டது. இதிலிருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் பரவலாக பேசப்பட்டது.
ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கவில்லை. இது தன்கரை அவமதிக்கும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவருக்குத் துணை ஜனாதிபதி பதவியை அளிக்கும் திட்டம் ஆளும் கட்சிக்கு இருந்தது என்றும், அதற்காகவே தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இதற்கிடையே, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் ஆவார்.
இவருக்கு எதிராக, இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி.சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜூலை 21 அன்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு, செப்டம்பர் 12 அன்று சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
சர்ச்சைக்கிடமாக ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது உயர் அரசியலமைப்புப் பதவியான மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
- 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21 ராஜினாமா செய்தார்.
- பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.
14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 15வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.
அவர் பதியேற்ற பின் முதல் முறையாக அவர் தலைமையில் இன்று மாநிலங்களவை நடந்தது.
அவையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர், சிறிதும் எதிர்பாராமல் திடீரென விலகினார். பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.
அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்" என்றார்.
கார்கேவின் பேச்சால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, "புதிய தலைவருக்கு வாழ்த்து கூற வேண்டிய நேரத்தில் கார்கே, தேவையின்றி தன்கர் விவகாரத்தை எழுப்புகிறார்.
இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.
- 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார்.
- ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதியாக இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மந்திரிகளும் முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.
முன்னதாக 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது ஜெகதீப் தன்கர் உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருந்தது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபில் உள்ளிட்டோர், ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பின்னர் என்ன ஆனார்? எங்கு போனார்? என்பது மர்மமாக இருப்பதாக பேசியிருந்தனர். ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.
இதற்கிடையே அண்மையில் ஜெகதீப் தன்கர் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்து பண்ணை வீட்டுக்கு குடிபெயர்ந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அவர் உடல்நிலை காரணமாக எங்கும் செல்லாமல் பூரண ஓய்வில் இருந்ததாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் பதவி விலகி 53 நாட்கள் கழித்து 15வது துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் அவர் இன்று கலந்து கொண்டுள்ளார். பொது வெளியில் தோன்றியதன் மூலம் அவரின் நிலை குறித்து எழுந்த ஊகங்களுக்கு ஜெகதீப் தன்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார்.
- மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது அதிகாரப்பூர்வ அரசு மாளிகையை காலி செய்துள்ளார்.
தற்போது தெற்கு டெல்லியில் உள்ள சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த ஜூலை 21, பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜெகதீப் தன்கர் தனது துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
உடல்நலப் பிரச்னைகளை அவர் காரணம் காட்டி இருந்தாலும், அவரது ராஜினாமா அரசியலில் பேசுபொருளாக மாறியது.
ராஜினாமாவுக்கு பின் தன்கர் தகவல் ஏதுமின்றி காணாமல் போனதாகவும், பாஜகவின் அழுத்தத்தின் பேரில் அவர் ராஜினாமா செய்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார் என்றும் தற்போது அங்கிருந்து காலி செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.
1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
- முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி
- ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ளார்.
ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், துணை ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்த தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இத்தனிடையே, முன்னாள் குடியரசு தினை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமித் ஷா, "தன்கர் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது அரசிலமைப்பின் படி சிறப்பாக பணியாற்றினார். மருத்துவக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். இதில் தேவையற்ற ஆராய்ச்சிகளை செய்து, ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என நினைப்பது தவறு" என்று தெரிவித்தார்.
- இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.
- தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
இதைதொடர்ந்து,"ஜகதீப் தன்கர் என்னவானார்? இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஜகதீப் தன்கர் என்னவானார்? எங்கே மறைந்தார்?
எங்களது கவலையெல்லாம் அதே போன்ற நிலமை சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.
தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறதல்லவா?" என்று குறிப்பிட்டுள்ளார்.
- முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்?
- ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது?
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவனை குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டை சுற்றி ராணுவத்தினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக பணி விலக வைக்கப்பட்டுள்ளார் ஜெகதீப் தன்கர். பதவி விலக நிர்பந்திக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தெரியவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
- C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ளார்.
- எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக (பா.ஜ.க.) கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்ப்பில் யாரை வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
அதன்படி துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த C. P. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
- எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
- எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், முன்னாள் குடியரசு தினை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய தன்கர் தற்போது எங்கிருக்கிறார்?; ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது?; மாநிலங்களவை எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை" என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
- எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
- நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பேசிய கபில் சிபில், ராஜினாமா செய்த பின்னர் ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாள் நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், அவரது தனிப்பட்ட செயலாளர் தொலைபேசியை எடுத்து அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார். எனது அரசியல் சகாக்கள் பலர் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
தனது பதவிக் காலம் முழுவதும் அரசாங்கத்தை ஆதரித்த தன்கரைப் இப்போது எதிர்க்கட்சிகள்தான் பாதுகாக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "அவருக்கு எங்காவது சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்ன பிரச்சனை? இதுபோன்ற விஷயங்களை மற்ற நாடுகளில் மட்டுமே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
உள்துறை அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களிடம் நிறைய வளங்கள் உள்ளன. நீங்கள் வங்கதேசத்தினரை திருப்பி அனுப்புகிறீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எங்கள் துணை ஜனாதிபதி. எனவே அவர் இருக்கும் இடம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிடுங்கள்" என்று கபில் சிபல் கோரினார்.
- வேட்புமனுக்கள் திரும்பப் பெற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படும்.
- அனைத்து எம்.பி.க்களும் இந்தத் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களிப்பார்கள்.
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆம் தேதி என அறிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் பரிசீலனை ஆகஸ்ட் 22 ஆம் தேதியும், வேட்புமனுக்கள் திரும்பப் பெற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படும்.
வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், வாக்கு எண்ணிக்கை அதே நாளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து எம்.பி.க்களும் இந்தத் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களிப்பார்கள்.
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஜூலை 21 ஆம் தேதி உடல்நலக் காரணங்களால் திடீரென ராஜினாமா செய்ததால் அந்தப் பதவி காலியானது குறிப்பிடத்க்கது.






