என் மலர்
நீங்கள் தேடியது "Kapil Sibil"
- எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
- நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பேசிய கபில் சிபில், ராஜினாமா செய்த பின்னர் ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாள் நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், அவரது தனிப்பட்ட செயலாளர் தொலைபேசியை எடுத்து அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார். எனது அரசியல் சகாக்கள் பலர் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
தனது பதவிக் காலம் முழுவதும் அரசாங்கத்தை ஆதரித்த தன்கரைப் இப்போது எதிர்க்கட்சிகள்தான் பாதுகாக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "அவருக்கு எங்காவது சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்ன பிரச்சனை? இதுபோன்ற விஷயங்களை மற்ற நாடுகளில் மட்டுமே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
உள்துறை அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களிடம் நிறைய வளங்கள் உள்ளன. நீங்கள் வங்கதேசத்தினரை திருப்பி அனுப்புகிறீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எங்கள் துணை ஜனாதிபதி. எனவே அவர் இருக்கும் இடம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிடுங்கள்" என்று கபில் சிபல் கோரினார்.
- சிபிஐ திறப்பு விளக்கிக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
- இதனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எரிச்சலடைந்தார்
கொல்கத்தா R.G கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் வாதாடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், 'கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாகக் காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்' என்று விளக்கிக்கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
இதனால் எரிச்சலடைந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கபில் சிபிலை நோக்கி, 'ஒரு பெண் குரூரமான முறையிலும் கண்ணியக்குறைவான வகையிலும் உயிரிழந்துள்ளாள். அதற்காக குறைந்தபட்சம் சிரிக்காமலாவது இருங்கள்' என்று காட்டமாக பேசியுள்ளார்.






