search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasumbon Pandian"

    • அண்ணாமலையின் நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
    • அண்ணாமலையின் நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக் கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் சே.பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ரோம்நகர் தீப்பிடித்து எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த தைப் போல இந்திய ஒன்றி யம் முழுவதும் பா.ஜ.க. வினால் வன்முறைத் தீ பற்றி எரிகிறது மணிப்பூர் வன்முறையை உடனே தடுத்து நிறுத்தா விட்டால் உச்ச நீதிமன்றமே தலையிடும் என தலைமை நீதியரசர் ஒன்றிய அரசை எச்சரித்தற்கு பிறகு பிரதமர் பட்டும் படா மலும் மணிப்பூர் கலவரம் குறித்து சில நொடிகளில் பேட்டியளித்துச் சென்ற காட்சியை உலகமே எள்ளி நகையாடுகிறது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கும் பிரதமரின் செய லுக்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    இதை மூடி மறைப்ப தற்காக அமைதிப் பூங்கா வான தமிழகத்தில் பாதயாத் திரை என்ற பெயரில் சொகுசு வாகனத்தில் அண்ணாமலை பயணம் சென்று வருகிறார் தமிழ் மண்ணைப் பொறுத்தளவில் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையில் சுயமரியாதை, சமூக நீதி, சமதர்மம், இன உரிமை, மாநில சுயாட்சி,இந்தியக் கூட்டாச்சி ஆகிய கோட் பாடுகளில் பேணிக் காத்து வருகிறது.

    கவர்னர் ரவியும் அண்ணாமலையும் தினமும் புலம்பி வருவதை நாட்டு மக்களும் திராவிட இயக்க மும் சிறிது கூட அவர்களை பொருட்படுத்தவில்லை, திராவிட இயக்கத்தின் கொள்கையில் தமிழக மக்கள் பட்டைத் தீட்டப்பட்ட வைரமாக திகழ்ந்து வரு கிறார்கள். மணிப்பூரில்

    இரு பழங்குடி இனப்பெண் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு 80 நாட்களுக்கு பிறகே காவல் துறை முதல் தகவல் அறிக் கையை பதிவு செய்துள்ளது அவ்விரு பெண்களையும் காவல்துறையினரே போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் இது தொடர்பான வழக்கை மாநில காவல்துறையினர் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது இதை விசாரிக்க முன்னாள் நீதிபகள் கொண்ட சிறப்பு புலனாய் வுக் குழு அல்லது ஒரு சிறப்பு குழுவை அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப் படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளது வரவேற்கத்தாகும்.இது பிரதமர் மோடிக்கும், மணிப்பூர் மாநில பாஜக அரசிற்கும் பெருத்த அவமா னமாகும், பா.ஜ.க.விற்கு ஏற் பட்டிருக்க கூடிய அவமா னங்களை மூடி மறைப்ப தற்காக பாதயாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அண்ணாமலை நடத்திக் கொண்டிருக்கிறார்.

    இத்தகைய நாடக அரசி யல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதை 2024 தேர்தலில் பாஜகவிற்கு தமிழ் மண் சரியான பாடம் புகட்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • வங்கிகளில் ரூ.2,000 நோட்டுக்களை செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
    • ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனால் வீடு மற்றும் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வைத்தி ருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரிசர்வ் வங்கியின் அறி விப்பை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்று வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட மறு நிமிடமே அனைத்துக் கடைகள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க் மற்றும் அரசு போக்கு வரத்துக்கழகம் உட்பட மதுபார், வணிக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகளை வாங்குவது இல்லை என்று முடிவு செய்து விட்டனர்.

    ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறும் முடிவு களை எடுக்கும் போது மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். இந்த தெளிவற்ற, திட்டமிடாத அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்படு வதை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி தெளிவான விளக்க மான அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.

    இந்த பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 6 மாத காலம் ரூ.2000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவற்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழர்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என பசும்பொன் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஆளுநர் மாளிகையை இழுத்து பூட்ட வேண்டும் என்றார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கவர்னராக இருக்கும் ரவி தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். நேற்று சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் தமிழக அரசு கொடுத்த உரையை முறையாக வாசிக்காமல் சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை கவர்னர் ஏற்படுத்தி இருக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    கவர்னரின் இந்த மக்கள் விரோத செயலை கருப்பு சட்டை வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். அவருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டின் வரலாறை சரியாக புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழக அரசிற்கும் இடையூறுகளை ஏற்படுத்தி வரும் கவர்னர் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செய்ய விரும்பினால் அவர் பா.ஜ.க.வின் கமலாலயத்தில் இருந்து அரசியல் செய்யட்டும். ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மக்களிடையே பிரிவினை வாதத்தையும், அரசுக்கு எதிரான நடவ டிக்கைகளிலும் ஈடுபடுவதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு எத்தனையோ சான்றோர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் வீரத்தையும் வரலாற்றையும் பாதுகாத்துள்ளார். இதுபோன்று எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தின் வரலாறுகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அவமா னப்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கவர்னர் ரவி வாழ தகுதியற்றவராகி விட்டார். ஆளுநர் மாளி கையை உடனடியாக பூட்ட வேண்டும்.அவரை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதுதான் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக கவர்னரின் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறி உள்ளார்.
    • ஆளுநர் ரவியை, குடியரசுத்தலைவர் தமிழக மக்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழகத்தின் அமைதியை யும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் வருகிற 6-ந்தேதி நடை பெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முழுமையாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்படியான நடவ டிக்களை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தியல் அடிப்படையில் வர லாற்றை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்புச் செயலாளராக தன்னுடைய கடமையை செய்து வருகிறார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிரசாரக்காரராக செயல்படலாம்.

    மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின் பெயரால் பொறுப்பேற்றுள்ள ஒருவர், அரசியல் சாச னத்தின் சாரத்திற்கு ஏதிராக பேசுவதும், செயல்படு வதும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாளையொட்டி நாகர்கோவிலில் கவர்னர் பேசியது வரலாற்று திரிப்பு வேலையாகும்.

    இன்றைய குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி ஆளுநர் கூறுவதற்கு நேர் எதிர்மாறான வரலாறாக தான் உள்ளது. பெண்கள் மேலாடை அணிவது கூட தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து தோள் சேலை போராட்டம் நடைபெற்று 200ஆண்டுகள் ஆகிறது.

    இது குறித்து ஆளுநர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அன்று எல்லாம் உன்னதமாக இருந்தது என்றும், மேற்கத்தியர்கள் தான் தவறான கதையை கட்டி விட்டார்கள் என்றும் பழமைக்கு பட்டுத்துணி போர்த்துகிறார் ஆர்.என்.ரவி. தீண்டாமை கொடுமை, பாராமை என்ற கொடுமையும் இருந்தது.

    இதனால் தான் அந்த மண்ணில் அய்யங்காளை, நாராயண குரு, வைகுண்ட சாமிகள் போன்ற சமூக சீர்திருத்த தலைவர்கள் உருவாகி கேரளத்தில் பெரும் இயக்கங்களை முன்னெடுத்தார்கள். தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.

    இதையெல்லாம் மறைத்து ஒரு புல்லைக்கூட கிள்ளிப்போடாத சனாதன கூட்டத்தில் வளர்ந்த ஆர்.என்.ரவி நடத்தும் சனாதன பஜனை திராவிட மண்ணில் எடுபடாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை, குடியரசுத்தலைவர் தமிழக மக்களின் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×