search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 months"

    • வங்கிகளில் ரூ.2,000 நோட்டுக்களை செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
    • ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனால் வீடு மற்றும் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வைத்தி ருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரிசர்வ் வங்கியின் அறி விப்பை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்று வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட மறு நிமிடமே அனைத்துக் கடைகள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க் மற்றும் அரசு போக்கு வரத்துக்கழகம் உட்பட மதுபார், வணிக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகளை வாங்குவது இல்லை என்று முடிவு செய்து விட்டனர்.

    ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறும் முடிவு களை எடுக்கும் போது மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். இந்த தெளிவற்ற, திட்டமிடாத அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்படு வதை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி தெளிவான விளக்க மான அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.

    இந்த பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 6 மாத காலம் ரூ.2000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவற்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 6 மாதங்களில் 56 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • 10 குற்றவாளிகள் நீதி மன்றத்தின் மூலம் தண்டனைகள் பெற்று சிறையில் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களில் 56 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.போக்சோ சட்டம் என்பது இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட ஒரு தனி சட்டமாக இருக்கிறது. இச்சட்டம் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இருபாலருக்கும் பொருந்தும் சட்டமாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டு, இப்பொழுது நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் குற்றமிழைத்த நபர் ஜாமீன் பெற முடியாது.இச்சட்டம் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.சட்டத்தில் உள்ள கடுமையான தண்டனையின் காரணமாக குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டாலும் ஆங்காங்கே குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் 2657 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் கடந்த 6 மாதத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இதில் 7 வழக்குகள் மட்டும் சிறார்களுக்கு (ஆண், பெண்) எதிரான பாலியியல் வழக்காவும். இதில் 49 வழக்குகள் சீறார்கள் வீட்டை விட்டு ஓடி போதல் மற்றும் வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உள்ளிட்ட சாதனங்கள் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் இது வரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று 10 குற்றவாளிகள் நீதி மன்றத்தின் மூலம் தண்டனைகள் பெற்று சிறையில் உள்ளனர்.

    • ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கான நில எடுப்பு முன்னறிவிப்பு ஆணையை விவசாயிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
    • திமுக தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் உதவி செயற்பொறியாளர் முத்து மாணிக்கம் ஆகியோர் விவசாயிகளிடம் நில எடுப்பு கான முன்னறிவிப்பு ஆணையை வழங்கினர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கான நில எடுப்பு முன்னறிவிப்பு ஆணையை விவசாயிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வரவேற்றார் .கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் தலைமை தாங்கினார். கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் ராம.உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் உதவி செயற்பொறியாளர் முத்து மாணிக்கம் ஆகியோர் விவசாயிகளிடம் நில எடுப்பு கான முன்னறிவிப்பு ஆணையை வழங்கினர்.

    பின்னர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பேசுகையில், 6 மாதத்திற்குள் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் நில எடுப்பு சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுடலைமுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் அரிகரன், அண்ணாமலை உதவியாளர்கள் பவுன்ராஜ் சுடலை கனி மற்றும் திமுக நிர்வாகிகள் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன் மற்றும் ஒன்றிய அவைத்தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், தர்மராஜ்,ரம்யா,ஆவுடை கோமதி மற்றும் கடையம் பெரும்பத்து நிர்வாகி பரமசிவன்,ஆம்பூர் மாரியப்பன் ,கிளை செயலாளர் சாமுவேல் முருகன், ராம்ராஜ், ஞானராஜ்,ராஜேஷ்,மோசை,ராம்குமார், தளபதி மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ×