search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanadhi"

    • ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கான நில எடுப்பு முன்னறிவிப்பு ஆணையை விவசாயிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
    • திமுக தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் உதவி செயற்பொறியாளர் முத்து மாணிக்கம் ஆகியோர் விவசாயிகளிடம் நில எடுப்பு கான முன்னறிவிப்பு ஆணையை வழங்கினர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கான நில எடுப்பு முன்னறிவிப்பு ஆணையை விவசாயிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வரவேற்றார் .கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் தலைமை தாங்கினார். கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் ராம.உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் உதவி செயற்பொறியாளர் முத்து மாணிக்கம் ஆகியோர் விவசாயிகளிடம் நில எடுப்பு கான முன்னறிவிப்பு ஆணையை வழங்கினர்.

    பின்னர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பேசுகையில், 6 மாதத்திற்குள் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் நில எடுப்பு சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுடலைமுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் அரிகரன், அண்ணாமலை உதவியாளர்கள் பவுன்ராஜ் சுடலை கனி மற்றும் திமுக நிர்வாகிகள் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன் மற்றும் ஒன்றிய அவைத்தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், தர்மராஜ்,ரம்யா,ஆவுடை கோமதி மற்றும் கடையம் பெரும்பத்து நிர்வாகி பரமசிவன்,ஆம்பூர் மாரியப்பன் ,கிளை செயலாளர் சாமுவேல் முருகன், ராம்ராஜ், ஞானராஜ்,ராஜேஷ்,மோசை,ராம்குமார், தளபதி மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ×