search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor Tamilisai"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
    • கூடுதலான எண்ணிக்கையில் அதிகாரிகள், பொது மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டையில் 9 வயது சிறுமி போதை ஆசாமிகளால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத்சவுகான், டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் உட்பட அரசு துறை செயலர்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் , மற்றும் அனைத்து பிரிவு சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கவர்னர் மாளிகையில் நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

    புதுவையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மனநல ஆலோசனை வழங்க 24 மணி நேரம் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

    அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கண்காணிப்பு குழுக்கள் அமைத்து இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும்.

    போதைப் பொருள் தடுப்புப் பிரிவு செயல்பாடு களை தீவிர படுத்த வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் அதிகாரிகள், பொது மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

    போதைப்பொருள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். போதை பொருள் புதுவைக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காக்க வேண்டும். மாநில எல்லை களில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்.

    போதை பொருள் மூளையை மழுங்கடித்து உடலை கெடுத்துவிடும். மாணவர் சமுதாயம் நினைத்தால் இந்த உலகத்தை புரட்டிப் போடலாம்.

    நாம் அனைவரும் சேர்ந்துதான் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும். அரசு கடத்தலை, பதுக்கலை தடுக்கலாம். ஆனால் தனி மனித போதை பழக்கத்தை தடுக்க முடியாது. கவர்னர் மாளிகையில் 73395 55225 என்ற ஒரு வாட்ஸ்அப் எண் வெளியிடப்படுகிறது.

    போதை தடுப்பு சம்பந்தமாக எந்த தகவலாக இருந்தாலும் இந்த எண்ணில் தெரியப்படுத்தலாம். இது கவர்னர் மாளிகை அதிகாரிகளால் நேரடியாக கண்காணிக்கப்படும். சமுதாய உணர்வோடு இந்த எண் தரப்படுகிறது.

    கவர்னர் அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மக்களோடு நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த எண் அறிவிக்கப்படு கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமி விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல்.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது

    இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மனித உரிமையெல்லாம் நான் பார்க்க மாட்டேன்" என்றார்.

    • தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.
    • நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

    இதனையொட்டி தனது சாதனை புத்தகத்தை கவர்னர் தமிழிசை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல்வாதியாக இருந்து கவர்னராக வந்ததால், எதிர்கருத்துக்கும் பதில் தருவது வழக்கம். என்னுடையது சுமூகமான பயணமல்ல. வாரிசு இல்லாத வாரிசு. நேரடி வாரிசாக அப்பாவுடன் பயணித்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். எதிர் இயக்கத்தில் சேர்ந்து நானே என்னை உயர்த்திக் கொண்டேன்.

    தெலுங்கானா, புதுவை மாநிலங்களில் கவர்னராக இருந்ததால் அதிகமான முதலமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன்.

    நேர்மையான பயணம் செய்து கொண்டிருக்கும் போது அதில் சில இடர்பாடுகளுடன் விமர்சனம் வருவதை ஏற்க வேண்டும். அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    சமீபத்தில் சட்டப்பேரவை கோப்பு தொடர்பாக சபா நாயகர் கருத்து சொன்னவுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    அரசியலில் 25 ஆண்டுகளை செப்டம்பரில் நிறைவு செய்யவுள்ளேன். நான் மருத்துவ தொழிலை இழந்து தான் அரசியலுக்கு வந்தேன். ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை.

    எந்த கோப்பிலும் சுய லாபத்தை பார்த்ததில்லை. நிர்வாக ரீதியாக கோப்பை பார்க்க வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் கவர்னர் அலுவலகம் இயங்குகிறது.

    மக்களின் வரிபணம் மிச்சமாக்கவே சட்டப் பேரவை கட்டுமான கோப்பை அதிக விவரமாக பார்க்கிறோம். செலவினம் அதிகளவில் உள்ளது.

    நாடாளுமன்றக்கட்டிடம், தெலுங்கானா சட்டசபை கட்டிடம் ஆகியவற்றை ஒப்பிடும் போது செலவு அதிகம். அவசியமாக செலவிடப்பட வேண்டும், ஆடம்பரமாக செலவிடப்பட்டு விட கூடாது என்பதால் கேள்வி கேட்டுள்ளோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.

    இது நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நல்லவர்களுக்கு ஆதரவு தராவிட்டால் நாங்கள் சென்று விட்டால் வேறு மாதிரியான அரசியல்வாதிகளிடம் அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என நான் விளையாட்டாக சொல்வதுண்டு. தற்போது மக்கள் பணி யாற்றி கொண்டிருக்கிறேன்.

    என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாவதுதான். அது ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடம்தான் உள்ளது. அவர்கள் உத்தரவை செயல்படுத்தும் கீழ்படியும் காரியகர்த்தா நான். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியோ, அதிலும் புதுவையில் போட்டியிடுவது பற்றி நான் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தவள் என்கிறார்கள்.

    இது தாய்வழி மண். அரவிந்தர், பாரதி ஆகியோர் இங்கு வந்து வாழ்ந்த மண்.அதனால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று என்னை குறிப்பிடாதீர்கள். புதுவையை வேறு மாநிலமாக நான் ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை. என் தமிழ் பேசும் மக்கள் இங்குள்ளனர். வேறு மாநிலம் என்ற அடையா ளத்தை தரவேண்டாம். அது மனவலியை தருகிறது. வழிகாட்டுதல்படி செயல்படுவேன்.

    அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த ஆசை. ஆனால் ஒத்துழைப்பு போதிய அளவில்லை. இன்னும் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைத்து பிராந்தியங்களுக்கும் சென்றுள்ளேன். நான் பணத்தை தாளாகதான் பார்த்தேன். நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
    • தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். முந்தைய முதலமைச்சர் வரமாட்டார். இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.

    தெலுங்கானாவில் பலமுறை அழைத்தும் முந்தைய முதலமைச்சர் வரவில்லை. கொள்கைகள்-கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் புக ஆரம்பித்தால் நட்பு இல்லாமல் போய்விடும்.


    தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சியோ கவலையோ எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்தது தி.மு.க. தான் என தமிழ முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

    இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

    அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

    • அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
    • புதுவையில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த மணப்பட்டில் பல்பொருள் சுற்றுலா மண்டலம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா, பொதுப்பணித்துறைச் செயலர் மணிகண்டன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் சராசரியான செலவு திறன், புதுவையில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

    "சிங்கப்பூர் மாடல்" மற்றும் "கேரளா மாடல்" சுற்றுலா குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவர்னர் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகள் வருமாறு:-

    புதுவையில் ஏற்படுத்தப்படும் சுற்றுலா மண்டலம் அனைத்து தரப்பினரும் உபயோகிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

    புதுவையை சுற்றி நடக்கும் கருத்தரங்குகள் உள்ளடங்கிய தகவலை குறிப்பிட்ட பயனாளர்களின் உதவிக்கு தர வேண்டும். திருமண நிகழ்ச்சி மையங்கள் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு பதிலாக புதுமையான தனித்துவமான தலங்களை நிறுவ வேண்டும்.

    • கவர்னர் தமிழிசை உறுதி
    • முத்ரா வங்கி திட்டத்தில் 4ல் ஒருவருக்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த விழா காணொளி காட்சி மூலம் புதுவை கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுவை ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடந்த பழங்குடியினர் கவுரவ தின விழாவுக்கு தலைமை செயலர் ராஜீவ் வர்மா வரவேற்றார். கலெக்டர் வல்லவன் முன்னிலை வகித்தார்.

    கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு செயலர்கள் முத்தம்மா, கேசவன், துறை இயக்குனர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பழங்குடியினர் தலைவர் பகவான்பிர்சா முண்டா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    பழங்குடியின மக்களை கவுரவிக்கும் விழா. நாட்டின் விடுதலைக்காக பழங்குடியின மக்கள் போராடிய சான்றுகள் இருந்தாலும் வெளியே தெரியவில்லை. பிரதமர் அவர்கள் நலனில் அக்கறை கொண்டு பகவான் மிர்சா முண்டா பிறந்த நாளை பழங்குடியினர் விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுத்துள்ளார்.

    புதுவை மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கு உரிய மரியாதை, இட ஒதுக்கீடு அளித்து வருகிறது. 2016-ல் இருளர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் அனைத்து திட்டங்கள், வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பல இடங்களில் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். அவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் நமது லட்சியம், வளர்ச்சி யடைந்த பாரதம் என்ற வாகன பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

    புதுவையில் பழங்குடி யின மக்களுக்கு பல திட்ட ங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது.

    பழங்குடியின மக்களுக்கு மருத்துவ வசதி, சாலை, பள்ளிகள் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் சில கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என தகவல்கள் அனுப்பியுள்ள னர்.

    முதல்-அமைச்சரோடு இணைந்து புதுவை மாநில பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம்.

    ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பழங்குடியினர்கள்.

    தெலுங்கானாவில் 12 சதவீதம் பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களில் 6 கிராமங்களை தத்தெடுத்து பணிகளை செய்து வருகிறோம். இன்னும் அவர்களுக்கான வசதிகள் செய்துதரப்படா மல் உள்ளது.

    பிரதமர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடியின மக்களுக்கான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முத்ரா வங்கி திட்டத்தில் 4ல் ஒருவருக்கு எஸ்.சி.,

    எஸ்.டி. வகுப்பினருக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். அவர்களின் வங்கி கடனுக்கு சகோதரனாக நான் கியாரண்டி என தெரிவித்தார்.

    பழங்குடியினர் தயாரிக்கும் கைவினை பொருட்கள் விற்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    வெளிநாடு செல்லும்போது வெளிநாடு தலைவர்கள் பரிசு பொருட்களில் அதிகளவில் பழங்குடியினர் தயாரிக்கும் பொருட்கள் உள்ளது. பழங்குடியினர் வளர்ச்சிக்கு பிரதமரோடு இணைந்து புதுவை அரசும் செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கவர்னர் தமிழிசை பேட்டி
    • தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு கொடுக்க வலியுறுத்தி யுள்ளோம். தொழிற்சாலை யின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும். தொழிற்சாலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன? சுற்றுச்சூழல் பாதிக்கப்படு கிறதா? என அறிக்கை கேட்டுள்ளோம்.

    அது வந்தவுடன் மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்கப்படும். மக்கள் பாதிக்கப்பட்டால் அதை மீறி எந்த நிறுவனமும் நடத்த முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.

    தொழிற்சாலையை மூடுவது எளிது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    தெலுங்கானாவில் தேவைப்படும் நேரத்தில் முதல்-அமைச்சர் கவர்னரை சந்திப்பது இல்லை. கோப்புகளில் தெளிவுக்குக்கூட கேட்க முடியாத நிலை உள்ளது. இதை சுப்ரீம்கோர்ட்டில் தெளிவு படுத்தியுள்ளோம்.

    ஆனால் புதுவையில் சரியாக நடக்கிறது. என்னை பொறுத்தவரை நான் பொறுப்பாக நடந்து கொள்கிறேன். நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர். புதுவை, தெலுங்கானாவில் இதுவரை மக்களுக்கா கத்தான வேலை செய்கிறேன்.

    தெலுங்கானாவில் கவர்னருக்கு புரோட்டோ கால் தருவதில்லை. கொடி யேற்ற விடுவதில்லை, கவர்னர் உரை இல்லை. இதையெல்லாம் யார் கேட்பது? எல்லா விதத்தி லும் நாங்கள் வெளிப்படை த்தன்மை யோடு இருக்கிறோம். என்னை பொறுத்தவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.

    வேகமாக, தன்னிச்சை யாக வேலை செய்கிறேன் என குற்றம்சாட்டுங்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லா தீர்கள். மிகப்பெ ரிய டாக்டராக இருந்து வந்த நான் நேர்மை யாகவே செயல்படுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர்.
    • ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். தொழிற்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும். தொழிற்சாலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன? சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? என அறிக்கை கேட்டுள்ளோம்.

    அது வந்தவுடன் மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்கப்படும். மக்கள் பாதிக்கப்பட்டால் அதை மீறி எந்த நிறுவனமும் நடத்த முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.

    தொழிற்சாலையை மூடுவது எளிது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    தெலுங்கானாவில் தேவைப்படும் நேரத்தில் முதல்-அமைச்சர் கவர்னரை சந்திப்பது இல்லை. கோப்புகளில் தெளிவுக்குக்கூட கேட்க முடியாத நிலை உள்ளது. இதை சுப்ரீம்கோர்ட்டில் தெளிவு படுத்தியுள்ளோம்.

    ஆனால் புதுவையில் சரியாக நடக்கிறது. என்னை பொறுத்தவரை நான் பொறுப்பாக நடந்து கொள்கிறேன். நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர். புதுவை, தெலுங்கானாவில் இதுவரை மக்களுக்காகத்தான வேலை செய்கிறேன்.

    தெலுங்கானாவில் கவர்னருக்கு புரோட்டோ கால் தருவதில்லை. கொடி யேற்ற விடுவதில்லை, கவர்னர் உரை இல்லை. இதையெல்லாம் யார் கேட்பது? எல்லா விதத்திலும் நாங்கள் வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறோம். என்னை பொறுத்தவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.

    வேகமாக, தன்னிச்சையாக வேலை செய்கிறேன் என குற்றம்சாட்டுங்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள். மிகப்பெரிய டாக்டராக இருந்து வந்த நான் நேர்மையாகவே செயல்படுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சுதந்திர தின விழாவில் புதுவை மாநில விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதன்படி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த உயர்வு இந்த நவம்பர் மாதம் முதல் நடை முறைப்படு த்தப்படுகிறது. இதன்மூலம் புதுச்சேரியில் 939 பேர் காரைக்காலில் 174 பேர் மாகேவில் 87 பேர், ஏனாம் பகுதியில் ஒருவர் என மொத்தம் ஆயிரத்து 201 விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

    மாதாந்திர உதவித்தொகை உயர்த்த ப்படுவது தொடர்பாக புதுவை மாநில விடுதலைப் போராட்ட தியாகிகள் மாதாந்திர உதவித் தொகை விதிகள், 1970-ல் திருத்தம் மேற்கொள்ளவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    • கவர்னர் தமிழிசை பேச்சு
    • காலனி ஆதிக்கத்தின் பெயரில் இருந்ததை மாற்ற வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையில் என் மண், என் தேசம் இயக்கம் 3 நிகழ்வாக நடந்தது.

    முதல் நிகழ்வாக கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 108 கிராம பஞ்சாயத்து அளவிலும், 2-ம் கட்டமாக ஆகஸ்டு 16 முதல் 20-ந் தேதி வரை 5 நகராட்சிகள், 3 வட்டார அளவிலும் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

    3-வது கட்டமாக ஆகஸ்டு 18-ந் தேதி 108 கிராம பஞ்சாயத்துகள், 5 நகராட்சி களில் சேகரிக்கப்பட்ட புனித மண் அமிர்த கலசங்கள், மரக்கன்றுகள், செடி ஆகியவை எடுத்து வரப்பட்டு அவற்றை ஒன்றாக கலந்து அதில் மரக்கன்றுகள் நட்டு மாநில அளவில் அமிர்த பூங்கா வனம் பாரதி பூங்காவில் அமைக்கப்பட்டது.

    2-ம் நிகழ்வாக இல்லம்தோறும் ஒரு பிடி மண், ஒரு பிடி அரிசி தானமாக பெறப்படும் நிகழ்ச்சி 139 கிராமத்திலும், 108 கிராம பஞ்சாயத்திலும், 5 நகராட்சியிலும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடந்தது.

    தற்போது 3-ம் நிகழ்வாக மாநில அளவிலான அமிர்த கலச யாத்திரை ஒருங்கி ணைக்கும் நிகழ்வு இன்று காமராஜர் மணிமண்ட பத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை 5 உறுதி மொழிகளை வாசித்தார். விழாவில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். பிரதமர் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முழு ஆண்டும் கொண்டாடப்பட வேண்டும் என சுதந்திர அமிர்த பெருவிழாவை தொடங்கி வைத்தார்.

    2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்று வோம் என உறுதி யேற்றுள்ளோம்.

    பிரதமர் 2047-க்குள் வல்லரசு நாடாக மாற வேண்டும் என விருப் பத்தை தெரிவித்து அதற்காக உழைத்துக் கொண்டிருக்கி றார்.

    எந்த நாட்டில் போர் நடந்தாலும், இந்திய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.

    உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இந்திய மக்கள் பாதிக்கப்படக்கூடாது, தேசம் அவர்களுக்கு துணை நிற்கும் என பிரதமர் செயல்படுகிறார்.

    புதுவைக்கு சுதந்திர போராட்ட வரலாறு உள்ளது. நாம் நாட்டுப்பற்றா ளர்களாக விளங்க வேண்டும்.

    இந்திய சுதந்திர போராட்டத்துக்கு பல வகையில் புதுவை உதவி செய்துள்ளது. இதில் பல ரகசியங்கள், சரித்திரம் உள்ளது. இந்த ரகசியங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். வீரசாவர்க்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அவரின் தியாகத்தைக்கூட கேள்வி எழுப்பும் சிலர் உள்ளனர்.

    அவர் எழுதிய புத்தகத்தை ஆங்கில அரசு தடை செய்கிறது. ஒரே ஒரு புத்தகம் புதுவையில் இருந்தது. அந்த புத்தகம்தான் மொழி பெயர்ப்பு செய்ய ப்பட்டு சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டது. புதுவையில் உண்மையான சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டது எது? என்ற விபரங்களை அரசு ஆவணப்படுத்த வேண்டும்.

    பாரதம் என்ற சொல் நாட்டில் 7 ஆயிரம் ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரத மாதா என்றுதான் அழைக்கிறோம். அதற்காகத்தான் தேசிய கல்வி கொள்கையில் இந்தியாவை பாரதம் என அழைக்கலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பாரதியாரே, பாரத தேசம் என தோள் கொட்டுவோம் என கூறியுள்ளார். இந்தியாவை பாரதம் என அழைப்பதில் தவறில்லை என்பதே என் கருத்து. சென்னை மாகாணம் தமிழ் நாடு என மாற்றப்பட்டபோது ஏற்பட்ட உணர்ச்சி, இந்தியாவை பாரதம் என கூறும்போது தேசப்பற்று ஏற்படும்.

    இதை ஆரோக்கியமான விஷயமாக கருத வேண்டும். இதை எதிர்த்துத்தான் பேசுவோம் என நினைக்கக்கூடாது. காலனி ஆதிக்கத்தின் பெயரில் இருந்ததை மாற்ற வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். நாட்டைப்பற்றிய உணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.

    சினிமா நட்சத்திரங்களை பற்றி தெரிந்தவர்களுக்கு நாட்டின் சுதந்திர நட்சத்திரங்களை பற்றி தெரியவில்லை என்பது வேதனை தருகிறது. சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அதிகமாக படிக்கவேண்டும். என் மண், என் தேசம் என்றால் சுதந்திரம் பெற நாடு என்ன பாடுபட்டது? என தெரிந்து கொள்ள வேண்டும். தெரியப்படாத சுதந்திர வீரர்களை தெரிந்துகொள்ள வேண்டும். புதுவையில் ஆதாரத்துடன் சுதந்திர கனலை ஊட்டியது தொடர்பான முழுமையான புத்தகம் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சபாநாயகர் செல்வம், கலைபண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.




    • ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப கல்விதுறை முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பியது.
    • விரைவில் 145 தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிட ங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளி களில் இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதேநேரத்தில் ஆசிரியர் பற்றாக்குறையும் ஏற்பட்டு ள்ளது. இதனையடுத்து தொடக்க பள்ளி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப கல்விதுறை முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பியது.

    இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். எனவே விரைவில் 145 தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிட ங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

    ×