என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் தமிழிசை மே தின வாழ்த்து
    X

    கோப்பு படம்.

    கவர்னர் தமிழிசை மே தின வாழ்த்து

    • வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுவை அரசு துணை நிற்கும்.
    • உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள்.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உழைக்கும் மக்களின் பெருமையையும் தியாகத்தையும் உலகத்திற்கு பறைசாற்றும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்தில் உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உழைப்பாளர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். பொரு ளாதார முன்னேற்றத்தின் அச்சாணியாக இருப்பவர்கள். அவர்களுடைய வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நிலையிலும் புதுவை அரசு துணை நிற்கும்.

    உழைக்கும் மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    Next Story
    ×