என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது-கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
- புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார்.
- புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சந்திப்பின் போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி கவர்னரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து இன்று நடந்த நிகழ்ச்சியில், மண்ணாடி ப்பட்டு குமாரபாளையத்தை சேர்ந்த முருகன் என்ற மாற்றுத்திறனாளியிடம் 3 சக்கர வண்டியை கவர்னர் தமிழிசை வழங்கினார். இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் சந்திப்பின் போது ஒரு மாற்றுத்தினாளி பெண் தனக்கு வேலை வேண்டும் என்றார். 3 சக்கர வாகனம் கேட்டார். அதன்படி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மக்கள் சந்திப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும்.
இதுதான் மக்கள் சந்திப்பின் பலன். ஏன் மக்களை சந்திக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் மக்களை சந்திக்க வேண்டும் என கூறுபவர்களுக்கு இந்த செயல்தான் எனது பதில். இது போல மக்களை சந்திக்கும் போது அவர்களது சிறிய-சிறிய தேவைகளை நமது நோக்கத்தினால், முயற்சியினால் ஓரளவு சரிசெய்ய செய்ய முடியும்.
எங்களால் உடனே சரி செய்துவிடக் கூடிய இன்னும் பல கோரிக்கைகளை சரி செய்துள்ளோம். ஜிப்மரில் கேட்ட உதவியை செய்துள்ளோம். மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்திற்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடரும். மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது, அவசியம் என்பதை நான் பதிவு செய்கிறேன். தமிழக கவர்னரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது.
மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்ப டக்கூடாது என்று அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே புதுவை அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக இருக்கும். பொது மக்கள் மழை காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வாந்தி பேதி அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும். விஷப் பூச்சிகள் அதிகம் வரும். எச்சரிக்கையாக இருக்க் வேண்டும். குழந்தைகளை கையாளும் போது இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால் இந்த மழை நாள் வரும் பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்