search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் வன்முறையை கண்டித்து பரமத்தி வேலூர் தாலுகாவில் தனியார் பள்ளிகள் மூடல்
    X

    சின்னசேலம் வன்முறையை கண்டித்து பரமத்தி வேலூர் தாலுகாவில் தனியார் பள்ளிகள் மூடல்

    • மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    பரமத்திவேலூர்:

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, மாநில செயலாளர் இளங்கோவன்,மாநில பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விடுத்துள்ள செய்தில் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதில் தங்கி பயின்று வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கல்வீசி தாக்கியும், பள்ளி மற்றும் காவல்துறையினரின் வாகனங்களுக்கும், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்த கும்பல் பள்ளி வளாகத்திற்கு புகுந்து பள்ளியின் உடமைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கும்,பள்ளி உடைமைகளுக்கும்,

    ஆசிரியர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தனியார் பள்ளியின் கூட்டமைப்பின் சார்பில் மேற்கண்ட பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இன்று கருப்பு வண்ண பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். எனவே இன்று தனியார் பள்ளிகள் இயங்காது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என அனைத்து பள்ளிகளையும் தனியார் பள்ளி நிர்வாகிகள் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளை மூடி சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×