search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபிராமம் கண்மாய் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை
    X

    தூர்வாரப்படாத அபிராமம் கண்மாயில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.

    அபிராமம் கண்மாய் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை

    • அபிராமம் கண்மாய் நிரம்பாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் வைகை பாசன பகுதிகள் அதிகமுள்ள பகுதியாகும். வைகை அணை நிரம்பியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

    வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து அபிராமம் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் தூர் வாரப்படாததால் சுமார் 7 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் கருவேல மரங்கள் வளர்ந்து மண்மேடாக காட்சி அளிக்கிறது.

    கால் வாய் தூர்வாரப்படாததாலும், முட்செடிகளை அகற்றாததாலும் அபிராமம், மற்றும் அதனை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு இன்று வரை தண்ணீர் நிரம்பாத நிலை உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    அபிராமம் கண்மாயை சார்ந்துள்ள விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நெல் பயிரிட முடியாத நிலை உள்ளது.

    இந்த பகுதியில் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் கண்மாய்க்கு வைகை பாசனம் மூலம் நீர் கிடைத்தால் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் செழித்து நல்ல பலனை தரும். இதனால் விவசாயிகள் பயனடைவார்கள்.

    அபிராமம் பகுதி விவசாயிகள் தண்ணீரு க்காக கண்ணீருடன் ஏங்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு அபிராமம் பகுதி விவசாயிகளும், தன்னார்வலர்களும் கொடுத்த பணத்தால் கால்வாயை தூர்வாரி துப்புரவு பணி செய்தோம்.

    இப்போதும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அவர்கள் அபிராமம் கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் முட்செடிகளை அகற்றவும் இல்லை. தூர்வாரவும் இல்லை.

    தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நிரந்தர தீர்வுகாண பொதுப்பணி துறையினரும் கலெக்டரும் இணைந்து நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×