என் மலர்
நீங்கள் தேடியது "Circle"
- இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன், கங்கனா ரனாவத் இணைந்து நடித்த படம் 'Tanu Weds Manu Returns'. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'சர்க்கிள்'.
'சர்க்கிள்' இதற்கு முன்பு பார்த்திராத ஒரு அசாதாரண உளவியல் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எ.எல். விஜய் இயக்கி உள்ள இப்படத்தை ட்ரைடென்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஊட்டி, சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'சர்க்கிள்' படம் தசரா பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் வெளியாகிறது.
- கிருங்காகோட்டை ஜல்லிக்கட்டில் புதிய நாச்சி காளைக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
- கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் கிருங்காகோட்டையில் ஜெயமனி என்பவருக்கு சொந்தமான நாச்சி காளை தமிழக அளவில் 7 வருடங்களாக 500-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடி, ஜல்லிக்கட்டு பந்தயங்களில் புகழ் பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் 22-ந் தேதி அன்று திடீரென நாச்சி காளை மரணமடைந்தது. இந்த காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு ஜெயமனிக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தாங்கள் சாமியாக கும்பிடும் ஜல்லிக்கட்டு காளை இறந்தால் அதை ஈடுகட்டும் விதமாக கிராம வழக்கப்படி பாரம்பரிய முறைப்பட்டி புதிய காளைக்கு பரிவட்டம் கட்டப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருங்காக்கோட்டையில் உள்ள குலதெய்வமான பெரிய நாச்சி கோவிலில் வைத்து தட்டில் திருநீற்றில் சூடம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, புதிய நாச்சி காளைக்கு பரி வட்டம் கட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கு நின்ற பெண் பக்தருக்கு அருள் வந்தது. காளைக்கு முன் நின்று திருநீரை கையில் எடுத்து புதிய காளையை நாச்சி என்று அழைத்தார். அதை கேட்டவுடனே ஆக்ரோச மாக துள்ளிய புதிய காளை நாச்சி சூடம் ஏற்றி வைக்கப்பட்ட தட்டை முன்பக்க காலை வைத்து தட்டி விட்டு சென்றது.
அருள் வந்த பெண் தங்கள் நாச்சி காளை தட்டை தட்டி விட்டு சத்தியம் செய்ததாக எடுத்துக்கொண்டு வந்து ட்டாட நாச்சி... வத்துட்டாட நாச்சி... என கூறிய இந்த காட்சி இடம் பெற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- விருதுநகர் மாவட்டத்தில் இன்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
- ஆணைக்குட்டம் அணையை பார்வையிட்டனர்.
விருதுநகர்
சட்டமன்ற மதிப்பீட்டுக்கு ழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அரசு திட்டங்களின் செயல்பாடுகள், மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விபரங்களை கேட்டும், பணிகளை விரைவுப்ப–டுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் விருது நகர் மாவட்டத்தில் இன்று கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் தலைமையிலான சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் பல் வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். இந்த குழுவில் இடம்பெற்றிருந்த கள்ளக் குறிச்சி எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார், மதுரை வடக்கு எம்.எல்.ஏ. கோ.தளபதி, கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி, மதுரை தெற்கு எம்.எல்.ஏ. புதூர் பூமிநாதன் ஆகியோர் முதலாவதாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர்.
அப்போது நோயாளிகளின் வருகை, அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் இருப்பு விபரம் குறித்து ஆய்வு செய்து, உள்நோயாளிகளிடம் குறைகளை கேட்ட றிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட குழுவினர் நகராட்சி பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி, கன்னிசேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட னர்.
இதையடுத்து ஆணைக் குட்டம் அணைக்கட்டுக்கு சென்ற குழுவினர் தண்ணீர் இருப்பு, வரத்து, அதன் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களின் விபரம் உள்ளிட்டவற்றை அதிகாரிகளி டம் கேட்டறிந்தனர். இந்த குழுவினருடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சென்றனர்.
பிற்பகல் 3 மணிக்கு மேல் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.






