என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு
- விருதுநகர் மாவட்டத்தில் இன்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
- ஆணைக்குட்டம் அணையை பார்வையிட்டனர்.
விருதுநகர்
சட்டமன்ற மதிப்பீட்டுக்கு ழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அரசு திட்டங்களின் செயல்பாடுகள், மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விபரங்களை கேட்டும், பணிகளை விரைவுப்ப–டுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் விருது நகர் மாவட்டத்தில் இன்று கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் தலைமையிலான சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் பல் வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். இந்த குழுவில் இடம்பெற்றிருந்த கள்ளக் குறிச்சி எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார், மதுரை வடக்கு எம்.எல்.ஏ. கோ.தளபதி, கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி, மதுரை தெற்கு எம்.எல்.ஏ. புதூர் பூமிநாதன் ஆகியோர் முதலாவதாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர்.
அப்போது நோயாளிகளின் வருகை, அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் இருப்பு விபரம் குறித்து ஆய்வு செய்து, உள்நோயாளிகளிடம் குறைகளை கேட்ட றிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட குழுவினர் நகராட்சி பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி, கன்னிசேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட னர்.
இதையடுத்து ஆணைக் குட்டம் அணைக்கட்டுக்கு சென்ற குழுவினர் தண்ணீர் இருப்பு, வரத்து, அதன் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களின் விபரம் உள்ளிட்டவற்றை அதிகாரிகளி டம் கேட்டறிந்தனர். இந்த குழுவினருடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சென்றனர்.
பிற்பகல் 3 மணிக்கு மேல் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.






