search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight crash"

    • ட்வெர் பகுதிக்கு அருகே குசென்கினோ கிராமத்தில் விமானம் விபத்திற்குள்ளானது
    • கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்ததை அடுத்து, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் அப்போது தொடங்கி தற்போது வரை நடக்கும் போரில் ரஷியாவிற்கு உதவியாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழு எனும் ஒரு அமைப்பும் பங்கேற்றது.

    இதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். ரஷியாவிற்கு உதவி வந்த பிரிகோசின் திடீரென இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார். ஆனால், புதின் இக்கிளர்ச்சியை சாமர்த்தியமாக எதிர்கொண்டு பெரிதாகாமல் அடக்கினார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி எம்ப்ரேயர் லெகசி 600 ஜெட் விமானத்தில், ட்வெர் பகுதிக்கு அருகே பயணம் செய்த போது, குசென்கினோ கிராமத்தில் அந்த விமானம் விபத்திற்குள்ளாகியது. அதில் பயணம் செய்த 10 பேருடன் அவரும் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது.

    இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது. அதில் ஒரு விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து கீழே விழும் காட்சியுடன் அது எவ்ஜெனி பயணம் செய்த விமானம் என குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை உண்மையென நம்பி பலரும் இணையத்தில் இதனை பரவலாக்கினர்.

    ஆனால், ஆய்வில் இந்த செய்தி உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்த வீடியோவில் காணப்படும் விமானம், ரஷிய விமான படையை சேர்ந்த ஏ.என்.-26 (AN-26) ரக விமானம் என்றும் அதை வாக்னர் குழு ஜூன் 24 அன்று சுட்டு வீழ்த்தும் காட்சிதான் வீடியோவில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. தனது கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒன்று விழும் காட்சிதான் வீடியோவில் பரவலாக்கப்பட்டது.

    ஜூன் மாதம் வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் காட்சிக்கும் ஆகஸ்ட் மாதம் பிரிகோசினை பலி வாங்கிய விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது.
    • ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு.

    பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

    இதுகுறித்து பாட்னா விமான நிலைய இயக்குனர் கூறியதாவது:-

    பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமான மீது பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்தது. இதனால், விமானம் மீண்டும் பாட்னாவுக்கு தரையிறக்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த சுமார் 185 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர். தொழில்நுட்ப கோளாறு பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

    ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விசாரணைக்கு உரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் வேகம் குறைந்ததால் கடலில் விழுந்து நொறுங்கியதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது.

    இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள்.

    இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

    விமானம் கடலில் விழுவதற்கு முன் பதிவான செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என்ஜின் இயக்கம் நின்று மின் விளக்கு, ஏ.சி., காற்றழுத்த கருவி போன்றவைகள் செயல்படாததால் பயணிகள் அதிர்ச்சியுடன் கதறினார்கள். இனி பிழைக்க வழியில்லை என்று உயிர் போகும் கடைசி நிமிடத்தில் கடவுளை உருக்கமாக வேண்டி அழும் கண்ணீர் காட்சிகள் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

    விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.


    விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடைக்கக் கூடும் என கூறப்படுகிறது. 

    ராணுவ வீரர்கள், மீனவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 3 சிறப்பு கப்பல்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.

    கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த பிறகே விமான விபத்திற்கான முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    விமானம் சில மாதங்களுக்கு முன்புதான் பராமரிப்புப் பணிக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.


    விமானம் உயரே பறந்ததும் 12-வது நிமிடத்தில் திடீர் என்று அதன் வேகம் குறைந்தது. இதையடுத்து உடனே விமானத்தை ஜகார்த்தாவுக்கு திருப்பும்படி விமானிக்கு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 13-வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்து விட்டது.

    இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டபோது அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது.

    விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய இந்தோனேசிய விமான போக்குவரத்து துறை ‘லயன் ஏர்’ விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் போர் விமானம் விபத்தில் சிக்கியது. இதில், விமானிகள் இருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. #FlightCrash #MiG-29
    மாஸ்கோ :

    ரஷிய தலைநகர் மாஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மிக்-29 ரக போர் விமானம், விபத்துக்குள்ளாகி டிமிட்ரோஸ்கோவிய் எனும் கிராமத்திக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    விமானத்தில் பயணம் செய்த விமானிகள் இரண்டு பேரும் வெளியே குதித்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இரட்டை எஞ்சின்களை கொண்ட மிக்-29 போர் விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மிக் ரக போர் விமானங்கள் 1982-ம் ஆண்டு முதல் ரஷிய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #FlightCrash #MiG-29
    நாசிக்கில் விமானப்படைக்கு சொந்தமான சுகோய் ரக விமானம் சோதனை ஓட்டத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
    மும்பை :
     
    மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்து விமானிகள் அவசரகால வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர்.

    நாசிக்கில் தயாரிக்கப்பட்ட இந்த சுகோய் ரக விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. சோதனைகளின் முடிவில் இந்திய விமானப்படையில் விமானத்தை சேர்க்க திட்டமிடப்படிருந்தது.

    இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கியூபானின் ஹவானா விமான நிலையத்திலிருந்து 104 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

    ஹவானா:

    கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 104 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ×