என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேஜஸ் போர் விமானம்"

    • விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.
    • கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்தவர்க்ள இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

    நேற்று முன்தினம் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. இதில் கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜஸ் எம்.கே. 1 இலகு ரக போர் விமானம் பங்கேற்றது. விமானி நமன் சியால் (வயது37) விமானத்தில் பறந்து சென்று சாகசம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் இயக்கிய விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி நமன் சியால் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் துபாய் விபத்தில் பலியான விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் கோவை ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று காலை மீண்டும் அவரது உடல் வாகனம் மூலமாக ரேஸ்கோர்சில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு உயிரிழந்த விமானி நமன் சியால் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், லிங் கமாண்டர் நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர்," 'விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம்.!

    அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

    • இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது.
    • விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்தவர்க்ள இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

    நேற்று முன்தினம் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. இதில் கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜஸ் எம்.கே. 1 இலகு ரக போர் விமானம் பங்கேற்றது. விமானி நமன் சியால் (வயது37) விமானத்தில் பறந்து சென்று சாகசம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் இயக்கிய விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி நமன் சியால் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் துபாய் விபத்தில் பலியான விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் கோவை ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று காலை மீண்டும் அவரது உடல் வாகனம் மூலமாக ரேஸ்கோர்சில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு உயிரிழந்த விமானி நமன் சியால் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து நமன் சியால் உடல் தனி விமானத்தில் ஏற்றப்பட்டு, அவரது சொந்த ஊரான இமாச்சலபிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விமான விபத்தில் உயிரிழந்த நமன் சியால் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தார். அவர் சூலூர் விமானப்படை குடியிருப்பில் தனது மனைவி மற்றும 7 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவியும் விமானப்படை அதிகாரி ஆவார்.

    தற்போது அவர் விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். 7 வயது பெண் குழந்தை 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். நமன்சியால் விமான விபத்தில் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது மனைவி மற்றும் குழந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர். நமன் சியால் உயிரிழப்பால், சூலூர் விமானப்படை தளம் சோகமயமாக காட்சி அளிக்கிறது.

    • ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
    • இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.

    துபாய்:

    துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் விமான கண்காட்சி நடந்தது.

    இதில் இந்தியா, அமெ ரிக்கா, ரஷியா, சீனா உள் பட 115 நாடுகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.

    இதற்கிடையே 5 நாள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. அப்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

    திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் விமானி நமன் சியால் உயிரிழந்தார்.

    இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமான விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேஜஸ் போர் விமான விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    வான் சாகசத்தின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதை விமானி, பேரல் ரோல் எனப்படும் ஒரு சுழன்று செல்லும் செயல் முறையை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.

    இதில் விமானம் திரும்பப்பட்டு மீண்டும் மேலே சென்று தனது முழு சுழற்சியை நிறைவு செய்யும். இது ஒரு சிக்கலான சூழற்சி இல்லை என்றாலும், விமானி சிறிது நேரம் தலை கீழாக இருந்த பின்னர் விமானம் தரையில் மோதியது. விமானம் தலைகீழாக இருந்து மீண்டும் மேலே எழுப்ப வேண்டும். ஆனால் அதுபோன்று நடக்கவில்லை.

    விமானம் மீண்டும் மேலே செல்ல முயன்ற போது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் விமானம் மீண்டும் உயரும் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஒரு போர் விமானம் அதிக வேகத்தில் இத்தகைய சூழற்சிகளை செய்வது மிகவும் கடினம்.

    ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றனர். மேலும் திடீரென்று உந்துதல் சக்தியை இழந்திருக்கலாம் அல்லது கட்டுபாட்டு கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    விமான விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா அல்லது வேறு காரணமா என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

    இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.

    விமானம் கட்டுப்பாட்டை இழந்தாலும் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறும் வசதி உள்ளது. ஆனாலும் விபத்தில் விமானியான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்து உள்ளார். இவர் இமாச்சல பிரதேச மாநிலம், கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார்.

    நமன் சியால் கடந்த 2009-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பயிற்சியை தொடங்கினார். நமன் தன் பெற்றோர் மற்றும் குழந்தையுடன் கோவை சூலூர் விமானப்படை தளம் வளாகத்தில் வசித்து வந்தார். அவரது மனைவி கொல்கத்தாவில் பயிற்சியில் இருந்து வருகிறார்.

    நமன் சியாலின் தந்தை ஜெகன்நாத் இந்திய ராணுவத்தின் மருத்துவ பிரிவில் சிறிது காலம் பணியாற்றினார்.

    • வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
    • இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    துபாயில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.

    சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தது, விமானப்படை விங் கமாண்டர் நமான் சயால் என்பது தெரியவந்துள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    அவரின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், "நாடு ஒரு துணிச்சலான, அர்ப்பணிப்பு கொண்ட விமானியை இழந்துவிட்டது. துயரமடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமன் சியால் ஜியின் தைரியம் மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

    • வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.
    • கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் உயிரிழப்பு.

    துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில், விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

    கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.

    சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.

    மேலும், துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தேஜஸ் போர் விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

    துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது. விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    முந்தைய நாள் தேஜஸ் போர் விமானத்தில் எரிபொருள் கசிந்ததாக கூறப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தேஜஸ் போர் விமான்ததில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. பொதுமக்கள் இல்லாத பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் பங்கேற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார். #AeroIndia2019 #PVSindhu
    பெங்களூரு:

    பெங்களூரின் எலஹங்கா விமானப்படை தளத்தில், பாதுகாப்புத் துறை மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் 'ஏரோ இந்தியா - 2019' சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றுவருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 20-ம் தேதி இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் அதிவேக போர் விமானங்கள், கண்காட்சி மையங்கள் இடம்பெற்றுள்ளன. போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான, தேஜஸ் விமானமும் இந்த கண்காட்சியில் பறந்தது. அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரபேல் விமானம் வானில் சீறிப் பாய்ந்து சாகசம் நிகழ்த்தியது.


    இந்நிலையில் கண்காட்சியின் 4-ம் நாளான இன்று பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விண்வெளித்துறையில் பெண்களின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில், சிறப்பு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தேஜஸ் விமானத்தில் பறந்தார். துணை விமானியாக பச்சை நிற சீருடை அணிந்து வந்த பி.வி.சிந்து, விமானத்தில் ஏறும்போது பார்வையாளர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் விமானத்தின் காக்பிட் பகுதியில் அமர்ந்து சிறிது நேரம் பயணித்தார்.

    இந்த கண்காட்சி நாளை நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. #AeroIndia2019 #PVSindhu
    ×