என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஈரான் தாக்குதல்... துபாயில் சிக்கி தவிக்கும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
    X

    ஈரான் தாக்குதல்... துபாயில் சிக்கி தவிக்கும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

    • ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
    • விமான நிலையத்திற்கு அருகில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

    ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு அருகில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன.

    இந்நிலையில், துபாயில் சிக்கியுள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சில மணி நேரத்திற்கு முன்பு, விமான நிலையத்தில் நாங்கள் தஞ்சம் புகுந்த இடத்திற்கு அருகில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. இதனால் எனது பயிற்சியாளர் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓட வேண்டியிருந்தது. அது எங்கள் அனைவருக்கும் மிகவும் பதட்டமான மற்றும் பயமுறுத்தும் தருணமாக இருந்தது.

    துபாய் விமான நிலையத்திற்கு அருகிலேயே ஏவுகணை தாக்குதல் நடந்தது. தொடர் தாக்குதல்களால் அசாதாரண சூழல் நிலவுகிறது. விமான நிலைய அதிகாரிகளின் முயற்சியால் நாங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம், மேலும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×