என் மலர்tooltip icon

    உலகம்

    உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்
    X

    உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்

    • உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்.
    • பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார்.

    உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    எலான் மஸ்க்கின் இந்த கோரிக்கை நிறைவேறினால், உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார்.

    இந்த நிலையில், எலான் மஸ்க் சுமார் 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) தொகையை, ஊதியமாக வழங்க டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளவனர்.

    இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே, எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் டெஸ்லா கார்களின் விற்பனை சறுக்களை சந்தித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த சூழலில், எலான் மஸ்க் கூடுதல் சம்பளம் கேட்டிருப்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×