என் மலர்
நீங்கள் தேடியது "maharashtra minister"
- டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
- பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான இவர், இன்று மும்பையில் உள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை அவர் வாங்கினார்.
இந்த கார் ரூ. 75 லட்சம் மதிப்புடையது. பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கியதில் மகிழ்ச்சி என்றும், பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை டெலிவரி செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 350 முதல் 500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிராவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
- உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் ) பிரிவு ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவார் அணியானது எதிர்க்கட்சி வரிசையிலும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அஜித் பவார் அணி ஆளுங்கட்சியிலும் அங்கம் வகிக்கின்றன. இதில் அஜித் பவார் துணை மந்திரியாக ஆக பதவி வகித்து வருகிறார். அஜித் பவார் அணியைச் சேர்ந்த மாணிக் ராவ் கோகடே வேளாண்துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கிறார்.
இதற்கிடையே, சட்டசபை நடந்துகொண்டிருக்கும்போது மாணிக் ராவ் கோகடே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது ரம்மி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே மாணிக்ராவ் கோகடே பதவி விலகவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மாணிக்ராவ் கோகடே சின்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு ஆன்லைன் ரம்மி விளையாடத் தெரியாது. கேம் விளையாட ஒருவருக்கு OTP தேவை. மேலும் ஒரு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
எனது மொபைல் போன் அத்தகைய விளையாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்கலாம்.
எனது திரையில் 10 முதல் 15 வினாடிகள் தோன்றிய ஒரு விளையாட்டைத் தவிர்க்க முயற்சித்தேன்.
ராஜினாமா கோரப்பட்டதற்கு என்ன நடந்தது என சொல்லுங்கள். நான் யாரையாவது துன்புறுத்தியிருக்கிறேனா? நான் ஏதாவது திருடிவிட்டேனா அல்லது விவசாயிகளுக்கு எதிராக முடிவு செய்துள்ளேனா? எனக்கு குற்றப் பின்னணி உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
- அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு.
- அமைச்சர் மீதான மைவீச்சு தாக்குதலை கண்டித்து பாஜகவினர் போராட்டம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி மகாத்மா பூலே ஆகியோர் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு அரசு மானியம் கோரவில்லை என்று தெரிவித்திருந்தார். தமது பேச்சின்போது பிச்சை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது சர்ச்சையானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் அமைச்சர் மீது ஒருவர், கருப்பு மையை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் மீதான மைவீச்சு தாக்குதலை கண்டித்து மகாராஷ்டிரா பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் போராட்டக்காரர்களைக் கொண்டு தன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டதாக கூறி 3 அதிகாரிகள் உள்பட 10 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை அதிகாரி அங்குஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்காக பிராந்திய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் சூரத் மற்றும் மாண்ட்வி மாவட்டங்களை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் கூட்டம் தரம்பூர் பகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
கிட்டத்தட்ட 20 முதல் 25 கட்சிகள் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. அவர்களால் தங்கள் கட்சி சார்பில் 10 பேரை கூட பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய முடியாது. ஆனால் அவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர்.

இசை நாற்காலி விளையாட்டில் இசை நிற்கும்போது நாற்காலியை கைப்பற்றும் நபர் வெற்றி பெற்றவர் ஆகிவிடுவார். இங்கு 25 கட்சிகள் சேர்ந்து பிரதமர் இருக்கைக்காக இசை நாற்காலி விளையாட்டு போட்டியை நடத்துகின்றன. இது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் செயலாகும்.
2020-ல் இருந்து 2035-ம் ஆண்டுவரை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாகும். இந்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தால் வறுமையில் இருந்து வெளியேறி இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ பிரதமர் நரேந்திர மோடியின் 55 மாத ஆட்சியின் வளர்ச்சியுடன், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன” என்றார். #DevendraFadnavis #BJP
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புனே, பாராமதி மற்றும் ஷிரூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புனேயில் நடைபெற்றது.
இதில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். மேலும் கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
மராட்டியத்தில் நமது கூட்டணி 45 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கீழ் வெற்றிபெற்றால், அது வெற்றியாகவே கருதப்படாது.
நமது கட்சி உறுப்பினர்கள் மராட்டியத்தில் 45 தொகுதிகளை எனக்காக வென்று தரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு முதலில் நீங்கள் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பலம் பெற்று விளங்கும் பாராமதி தொகுதியை கைப்பற்றவேண்டும். அப்படி செய்தால் 45 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று விடலாம்.
ஊழல் புரிந்தவர்களின் கைகளுக்கு மராட்டியத்தில் ஒரு தொகுதி கூட சென்றுவிடக்கூடாது,
இவ்வாறு அவர் பேசினார்.
புனேயில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும் முழு பலத்துடன் பா.ஜனதா மோத உள்ளது. அந்த அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி விட்டோம். மராட்டியத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை பாராமதியையும் சேர்த்து 43 இடங்களை பா.ஜனதா கைப்பற்றும். கடைசி தேர்தலில் பாராமதியில் பா.ஜனதா சார்பாக போட்டியிட்ட ராஷ்டிரீய சமாஜ் கட்சி வேட்பாளர் குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.
அவர் தாமரை சின்னத்தின் கீழ் களம் இறங்கியிருந்தால் நிச்சயம் பா.ஜனதா அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும். இந்த முறை அந்த தவறு நிச்சயம் நடக்காது.
மாநிலத்தில் ஏழைகளுக்காகவும், விவசாயிகளின் பிரச்சினையை போக்குவதற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
மாநிலத்தின் முழு வளர்ச்சிக்காகவும், தங்களின் வாழ்க்கைகாவும் மக்கள் வரலாற்று பிழையை நிகழ்த்த மாட்டார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராமதி தொகுதி தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. #DevendraFadnavis #BJP






