என் மலர்
நீங்கள் தேடியது "Tesla Company"
- டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
- பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான இவர், இன்று மும்பையில் உள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை அவர் வாங்கினார்.
இந்த கார் ரூ. 75 லட்சம் மதிப்புடையது. பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கியதில் மகிழ்ச்சி என்றும், பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை டெலிவரி செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 350 முதல் 500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மோடி தென்னிந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணுகிறார்.
- டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் மோடியும் அமித்ஷாவும் குஜராத் மட்டுமே இந்தியா என்று நினைக்கிறார்கள். அது தவறு இந்தியாவில் மற்ற மாநிலங்களும் உள்ளன. அவர்களுக்கும் உரிமைகள் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர்.
மத்திய மந்திரி சபையில் தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. 42 தெலுங்கு பேசும் எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் ஒரே ஒரு மத்திய மந்திரி மட்டுமே உள்ளார்.
குஜராத்தில் உள்ள 26 எம்.பி.க்களில் 7 பேர் மத்திய மந்திரிகளாகவும், உத்தரபிரதேசத்தில் 12 பேர் மத்திய மந்திரிகளாகவும் உள்ளனர்.
அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியின் பார்வையில் தென்னிந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணுகிறார்கள். இதை நான் தெளிவாக கூறுகிறேன்.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது.
ஆனால் அந்த நிறுவனத்தை குஜராத்திற்கு வர வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நான் முதல் மந்திரி நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். இந்த விவகாரத்தில் எப்படி செயல்படுவது என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.






